Saturday, November 16, 2019

குர்ஆன்,ஹதீஸ் ஒளியில் ஹனஃபி தொழுகை முறை


ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்


தொடர்:15


பாங்கு
பற்றிய விளக்கம்



நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும், மக்களை எவ்வாறு பள்ளிக்கு அழைக்கலாம் என்று ஆலோசனை செய்கிறார்கள். அப்போது மாறி, மாறி பல கருத்துகளை ஸஹாபாக்கள் சொன்னார்கள். அதில் ஒருவர் ஒவ்வொரு வக்துக்கும் நாம் உயர்ந்த மலையின் மீது நெருப்பை மூட்டி மக்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்று கூறினார். அது நெருப்பு வணங்கிகளான மஜூஸ்களின் வணக்கமாகும் என்று நபியவர்கள் அதை வேண்டாம் என்றார்கள்.

மற்றொருவர் ஒவ்வொரு வக்துக்கும் மணி அடிக்கலாம் என்றார். அது நஸராக்களின் வணக்கம். வேண்டாம் என்று நபியவர்கள் கூறினார்கள்.மற்றொருவர் ஒவ்வொரு வக்துக்கும் சங்கு ஊதி மக்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்றார்.இது முஷ்ரிக்குகளுடைய வணக்கம் வேண்டாம் என்று நபியவர்கள் கூறி விட்டு. இன்ஷா அல்லாஹ் நாளை முடிவெடுப்போம் என்று அனைவரும் சென்று விடுகிறார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) அவர்களின் கனவிலும், அதே போல உமர் (ரலி) அவர்களின் கனவிலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி பாங்குடைய முறைகளை கற்றுக் கொடுக்கிறார்கள். அன்றிலிருந்து நாம் சொல்லும் இந்த பாங்கு கடமையாக்கப்பட்டது. பின் வரக் கூடிய ஹதீஸில் காணலாம்.

ان ابن عمر كان يقول كان المسلمون حين قدموا المدينة يجتمعون فيتحينون الصلاة ليس ينادى لها فتكلموا يوما في ذلك، فقال بعضهم اتخذوا ناقوسا مثل ناقوس النصارى، وقال بعضهم بل بوقا مثل قرن اليهود، فقال عمر أولا تبعثون رجلا ينادي بالصلاة، فقال رسول الله ﷺ: يا بلال قم فناد بالصلاة

“அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்பு விடுப்பதெற்கென யாரும் இருக்கவில்லை. அவர்கள் ஒன்றுகூடி தொழுகை(க்கு வரவேண்டிய) நேரத்தை முடிவு செய்துகொள்வார்கள். ஒரு நாள் இதுதொடர்பாக அவர்கள் கலந்து பேசினர். அப்போது அவர்களில் சிலர், கிறிஸ்தவர்கள் மணி அடிப்பதைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர், யூதர்கள் கொம்பூதுவதைப் போன்று கொம்பூதுங்கள் என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை நீங்கள் நியமிக்கக் கூடாதா? என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிலால் (ரலி) அவர்களிடம்) பிலாலே! எழுந்து தொழுகைக்காக (மக்களை) அழையுங்கள்! என்று சொன்னார்கள். (ஆதாரம்:


இகாமத்தின் வார்த்தைகள்

பாங்கில் பயன்படுத்தும் வார்த்தைகள் தான்  இகாமத்திலும் கூறவேண்டும்.எனினும் இகாமத்தில் حي علی الفلاح விற்கு பிறகு قد قامت الصلوة என்பதை இரண்டு தடவை அதிகப்படியாக கூறவேண்டும்.

ان ابن محيريز .....سمع ابا محذورة رضي الله عنه يقول علمني رسول الله ﷺ الاقامة سبع عشرة كلمة
இப்னு முஹைரீஜ் ரஹ்மதுல்லாஹி அவர்கள்  அபூமஹ்தூரா (ரளி) அவர்களிடமிருந்து கேட்டதை அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு இகாமத்தின் பதினேழு கலிமாக்களை கற்றுக்கொடுத்தார்கள் என கூறினார்கள்.

(ஆதாரம்:ஷர்ஹுமஆனில் ஆஸார் 1/102,தலைப்பு:باب الاقامة كيف هی)

اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ

أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ ، أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ

أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ

حَيَّ عَلَى الصَّلاةِ ، حَيَّ عَلَى الصَّلاةِ

حَيَّ عَلَى الْفَلاحِ ، حَيَّ عَلَى الْفَلاحِ

قَدْ قَامَتْ الصَّلاةُ ، قَدْ قَامَتْ الصَّلاةُ

اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ

لا إِلَهَ إِلا اللَّهُ


இப்னு மாஜா முஸன்னப் இப்னு அபிஷைபாவில் இகாமத்தின் 17 கலிமாக்கள் கூறப்பட்டுள்ளது.

(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபிஷைபா 2/312,313 ما جاء فی الاذان و الاقامة كيف هو ஹதீஸ் இலக்கம்:2132,ஸுனன் இப்னு மாஜா 1/52,தலைப்பு:باب الترجيع فی الاذان )

ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரளி) அவர்களின் அறிவிப்பில் வானவர்கள் பாங்கு இகாமத்தை கற்றுக்கொடுத்தது கூறப்படுகிறது.அதனின் சில தொடர்களில் வரும் வாசகங்கள்


ثم أمهل هنية ثم قام فقال مثلها إلا أنه قال زاد بعد ما قال حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة

பாங்கை கூறிய பிறகு வானவர்கள் சிறிது நேரம் தாமதித்து பிறகு எழுந்து நின்றனர்.பாங்கை போன்று கலிமாக்களை கூறினர். எனினும் இகாமத்தில் حي علی الفلاح பிறகு قد قامت الصلوة  قد قامت الصلوة என அதிகமாக  கூறினர்.

(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/82,தலைப்பு:باب كيف الاذان,அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகி 1/391,தலைப்பு:باب استقبال القبلة بالاذان و الاقامة,அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 8/447,ஹதீஸ் இலக்கம்:16691,ஜாமிஉல்மஸானீத் 1/299,301)


عن عبيد مولى سلمة بن الاكوع أن سلمة بن الاكوع رضي الله عنه كان يثنى الإقامة 

ஹள்ரத் உபைத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கிறார்கள்; ஹள்ரத் ஸலமா இப்னு அக்வஃ ரளி அவர்கள் இகாமத்தின் கலிமாக்களை இரண்டிரண்டாக கூறுவார்கள்.

(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபீஷைபா 2/320,من كان يشفع الاقامة و يری ان يثنيها ஹதீஸ் இலக்கம்:2150,ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/102 தலைப்பு:باب الاقامة كيف هی )


عن الأسود بن يزيد عن بلالٍ أنه كان يثني الأذان و يثني الإقامة . (طحاوى شريف : 1/ 81، كتاب الصلاة باب الأذان كيف هو؟)


பிலால் (ரளி) அவர்களின் அறிவிப்பிலும் இகாமத் இரண்டிரண்டாக என வந்துள்ளது.

(ஆதாரம்:ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/101 தலைப்பு:باب الاقامة كيف هی முஸன்னஃப் அப்துர்ரஜ்ஜாக் 1/346,தலைப்பு:باب بدء الاذان ஹதீஸ் 1794)


பஜ்ர் பாங்கில் الصلوة خير من النوم சேர்ப்பது 


أنه قال: يا رسول الله! علمني الأذان فذكر الحديث، وفيه بعد ذكر حي على الفلاح، "فإن كان صلاة الصبح، قلت: الصلاة خير من النوم، الصلاة خير من النوم


ஹள்ரத் அபூமஹ்தூரா (ரளி) அவர்களின் அறிவிப்பில் வருகிறது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

பஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லும் போது الصلوة خير من النوم الصلوة خير من النوم கூறுங்கள் 

(ஆதாரம்:ஸுனனு அபூதாவூத் 1/79,தலைப்பு:باب كيف الاذان அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகி 1/422,தலைப்பு:باب التثويب فی اذان الصبح)


 عن انس رضي الله عنه  قال : « من السنة إذا قال المؤذن في أذان الفجر حي على الفلاح ، قال : الصلاة خير من النوم

அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: முஅத்தின் பஜ்ர் பாங்கில் حي علی الفلاح சொல்லும் போது الصلوة خير من النوم, الصلوة خير من النوم சொல்ல வேண்டும் இது சுன்னத்தாகும்.

(ஆதாரம்:அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகி 1/423,தலைப்பு:باب التثويب فی اذان الصبح ஸஹீஹ் இப்னு குஜைமா 1/233,தலைப்பு:باب التثويب فی اذان الصبح ஹதீஸ் இலக்கம்:386)


பாங்கு,இகாமத் முறை 


عن جابر - رضي الله عنه - ، أن رسول الله صلى الله عليه وسلم قال لبلال :  إذا أذنت فترسل ، وإذا أقمت فاحدر


ஹள்ரத் ஜாபிர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிலால் (ரளி) அவர்களுக்கு கூறினார்கள் பாங்கு சொல்லும் போது நிறுத்தி நிறுத்தி கூறுங்கள் இகாமத் சொல்லும் போது விரைவாக கூறுங்கள் 

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/48, தலைப்பு:باب ما جاء فى الترسل فى الاذان ,முஸ்னத் அஹ்மத் இப்னு ஹுமைத்  பக்கம்:310, ஹதீஸ் இலக்கம்:1008,அஸ்ஸுனனுல் குப்ரா லில்பைஹகி 1/428, தலைப்பு:باب ترسيل الاذان و حذم الاقامة )

عن عمار بن سعد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم  أمر بلالاً أن يجعل إصبعيه في أذنيه و قال إنه ارفع لصوتك 


ஹள்ரத் அம்மார் இப்னு ஸஃத்  ரளி 
அவர்கள்  நபிஸல்ல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிலால் (ரளி) அவர்களுக்கு காதில்  விரலை வைத்து பாங்கு கூறும்படி  ஏவினார்கள்.நபி ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள் இந்த செயலானது உனது சப்தத்தை உயர்த்தும்.

(ஆதாரம்:ஸுனன் இப்னுமாஜா 1/52, தலைப்பு:باب السنة فى الاذان)

பாங்குக்கு பதில் சொல்வது 

عن عمر بن الخطاب رضي الله عنه قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: " إذا قال المؤذن: الله أكبر الله أكبر، فقال أحدكم: الله أكبر الله أكبر، ثم قال: أشهد أن لا إله إلا الله قال: أشهد أن لا إله إلا الله، ثم قال: أشهد أن محمداً رسول الله قال: أشهد أن محمداً رسول الله، ثم قال: حي على الصلاة قال: لا حول ولا قوة إلا بالله، ثم قال حي على الفلاح قال: لا حول ولا قوة إلا بالله، ثم قال: الله أكبر الله أكبر قال: الله أكبر الله أكبر، ثم قال: لا إله إلا الله، قال: لا إله إلا الله من قلبه دخل الجنة

இப்னு உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று சொன்னால் நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்(அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்னால் நீங்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம் :ஸஹீஹ் முஸ்லிம் 1/167 , தலைப்பு:باب استحباب القول مثل قول المؤذن لمن سمعه ,ஸுனன் அபூதாவூத் 1/85, தலைப்பு:باب ما يقول اذا سمع المؤذن ,ஸஹீஹ் இப்னு குஜைமா 1/248 தலைப்பு:باب ذكر فضيلة هذا القول عند سماع الاذان ஹதீஸ் இலக்கம்:417, ஸஹீஹ் இப்னு ஹிப்பான் பக்கம்:535, ذكر إيجاب دخول الجنة ..... ஹதீஸ் இலக்கம்:1685)



عن جابر بن عبد الله رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قال حين يسمع النداء: اللهم رب هذه الدعوة التامة، والصلاة القائمة، آت محمدًا الوسيلة والفضيلة، وابعثه مقامًا محمودًا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة


ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதை கூறுகிறார்கள்; 


அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம (த்)தி ஆ( த்) தி முஹம்மதனில் வஸீல(த்)த வல்ஃபழீல(த்)த வப்அஸ்ஹு ம(க்)காம(ன்)ம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ் 

பொருள்:

(முழுமையான இந்த அழைப்புக்குரிய இறைவனே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும், சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!’) என்று யார் பாங்கோசை யைக் கேட்ட பின் கூறுவாரோ அவருக்கு மறுமையில் நாளில் என்னுடைய பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/86,தலைப்பு:باب الدعاء عند النداء ஸுனன் அபூதாவூத் 1/85,தலைப்பு:باب ما جاء فی الدعاء ,ஜாமிஉத்திர்மிதி 1/51 தலைப்பு:باب منه اي ما يقول اذا اذن المؤذن)

ஸுனன் குப்ரா பைஹகீ, மற்ற நூலிலும் انك لا تخلف الميعاد
(நிச்சயமாக வாக்குறுதிக்கு மாறுசெய்யமாட்டாய்) வார்த்தைகளில் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடருடன் வந்துள்ளது.

(ஆதாரம்:அஸ்ஸுனனுல்குப்ரா 1/410,தலைப்பு:باب ما يقول اذا فرغ من ذلك கிதாபுத் தஃவாதுல் கபீர் லில்பைஹகீ 1/34,இஹ்யா உலூமுத்தீன் லில்கஜ்ஜாலி 1/182,பாடம்:كتاب اسرار الصلوة الباب الاول )









Wednesday, October 16, 2019

தொழுகை தடைசெய்யப்பட்ட நேரங்கள்

ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்


தொடர்:14

தொழுவது தடை செய்யப்பட்ட நேரங்கள்


பஜ்ர், அஸ்ர் தொழுகைக்கு பிறகு

عن ابی سعيد الخدري رضي الله عنه يقول سمعت رسول الله ﷺ يقول لا صلوة بعد الصبح حتی ترتفع الشمس و لا صلوة بعد العصر حتی تغيب الشمس

சுபுஹ் தொழுகைக்குப் பின் சூரியன் உதிக்கும் வரை தொழுவதற்கும், அஸர் தொழுகைக்குப் பின் சூரியன் மறையும் வரை தொழுவதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) தடை செய்தார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/82,83 தலைப்பு:باب لا تتحری الصلوة قبل غروب الشمس ,ஸஹீஹ் முஸ்லிம் 1/275,தலைப்பு:باب الاوقات التی نهی عن الصلوة فيها )

இதே கருத்தில் ஹள்ரத் உமர் இப்னு கத்தாப்,ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்,ஹள்ரத் அபூஹுரைரா ரளி அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/82,தலைப்பு:باب الصلوة بعد الفجر حتی ترتفع الشمس ,ஸஹீஹ் முஸ்லிம் 1/275,தலைப்பு:باب الاوقات التی نهی عن الصلوة فيها ,ஜாமிஉத்திர்மிதி 1/45,தலைப்பு:باب ماجاء فی كراهية الصلوة بعد العصر )

عن ابی هريرة رضي الله عنه قال قال رسول الله ﷺ من لم يصل ركعتي الفجر فليصلهما بعد ما تطلع الشمس

யார் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரகஅத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரகஅத்துகளையும் சூரியன் உதித்தபின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/96,தலைப்பு:باب ماجاء فی اعادتهما بعد طلوع الشمس )

சுப்ஹ் தொழுகைக்கு பிறகு

சுப்ஹ் தொழுகைக்கு பிறகு இரண்டு ரக்அத் முன் சுன்னத்தை  தவிர வேறு எதுவும் தொழக்கூடாது.

عن ابن عمر رضي الله عنه عن حفصة رضي الله عنها قالت كان رسول الله ﷺ اذا طلع الفجر لا يصلی الا ركعتين خفيفتين

ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் உதயமாகிவிட்டால் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) மட்டுமே தொழுவார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/250,و اللفظ له باب استحباب ركعتی الفجر ,ஸஹீஹுல் புகாரி 1/157,தலைப்பு:باب التطوع بعد المكتوبة,ஜாமிஉத்திர்மிதி 1/96,தலைப்பு:باب ما جاء لا صلوة بعد الفجر الا ركعتين )



சூரியன் மறைந்த பிறகு

சூரியன் மறைந்த பிறகு பர்ளுக்கு முன்பாக நபில் தொழுவது தடுக்கப்பட்டது.

عن طاؤس قال سئل ابن عمر رضي الله عنه عن الركعتين قبل المغرب فقال ما رايت احدا علی عهد رسول الله ﷺ يصليهما

தாவூஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள்;

இப்னு உமர் ரளி அவர்களிடத்தில் மஃரிப் தொழுகைக்கு முன்பாக இரண்டு ரக்அத்தை குறித்து கேட்கப்பட்டது.அன்னார் கூறினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இரண்டு ரக்அத் தொழுத யாரையும் நான் பார்க்கவில்லை.

(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/189,தலைப்பு:باب الصلوة قبل المغرب ,முஸ்னத் அப்த் இப்னு ஹுமைத் பக்கம்:256,ஹதீஸ் இலக்கம்:804,அல்குனா வல் அஸ்மா லித்தவ்லாபி பக்கம்:463,ஹதீஸ் இலக்கம்:1640)

عن جابر رضي الله عنه قال طفنا فی نساء رسول الله ﷺ فسالناهنّ هل رايتن رسول الله ﷺ يصلی هاتين ركعتين قبل المغرب حين يؤذن المؤذن فقلن لا

ஜாபிர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவிகளிடத்தில் வருகை தந்தோம்.மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஃரிப் தொழுகைக்கு முன்பாக முஅத்தின் பாங்கும் சொல்லும் போது  இரண்டு ரக்அத் தொழுதுள்ளார்களா? என்று அவர்களிடத்தில் கேட்டோம்.அவர்கள்  இல்லை என கூறினார்கள்.(ஆதாரம்:முஸ்னதுஷ்ஷாமியீன் லில் இமாமி அத்தப்ரானி 3/212 ஹதீஸ் இலக்கம்:2110)

عن منصور عن ابيه قال ما صلی ابوبكر و عمر و عثمان رضي الله عنه  الركعتين قبل المغرب

மன்சூர் அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிவித்துள்ளார்கள்; அபூபக்கர் (ரளி) உமர் (ரளி) உஸ்மான் (ரளி) அவர்கள் மஃரிபிற்கு முன்பாக இரண்டு ரக்அத் தொழவில்லை.

(ஆதாரம்:கன்ஜுல்உம்மால் 8/25,المغرب و ما يتعلق ஹதீஸ் இலக்கம்:21809,இஹ்திஹாஃபுல் ஹியரதுல் முஹிர்ரா 2/408,தலைப்பு:باب الصلاة قبل المغرب و بعدها , ஹதீஸ் இலக்கம்:2332,முஸன்னஃப் அப்துர்ரஜ்ஜாக் 2/289,தலைப்பு:باب الركعتين قبل المغرب ஹதீஸ் இலக்கம்:3998)



குத்பா சமயத்தில்

عن سلمان الفارسي رضي الله عنه قال قال النبي ﷺ لايغتسل رجل يوم الجمعة و يتطهر ما استطاع من طهر و يدهن من دهنه او يمس من طيب بيته ثم يخرج فلا يفرق بين اثنين ثم يصلی ما كتب له ثم ينصت اذا تكلم الامام الا غفر له ما بين و بين الجمعة الاخری

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;

'ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப் பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.'
என ஸல்மான் பார்ஸி(ரலி) அறிவித்தார்.


فان لم يجد الامام خرج صلی ما بداله و ان وجد الامام قد خرج جلس فاستمع و انصت حتی يقضي الامام جمعته و كلامه

ஹள்ரத் நபீஷா ஹுதலி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; இமாம் குத்பாவிற்கு வெளியேறாமல் இருந்து சந்தர்ப்பம் கிடைத்தால் தொழுது கொள்

ளலாம்.இமாம் குத்பாவிற்கு வெளியேறிவிட்டால் குத்பா,தொழுகையை முடிக்கும் வரை அமர்ந்து கவனத்துடன்,மெளனமாக குத்பாவை கேட்கவேண்டும்.


عن ابن عمر رضي الله عنه قال سمعت النبي ﷺ يقول اذا دخل احدكم المسجد و الامام علی المنبر فلا صلوة ولا كلام حتی يفرغ الامام


இமாம் மிம்பர் மீது இருக்கும் நிலையில் உங்களில் ஒருவர் மஸ்ஜிதில் நுழைந்தால்,
இமாம் (குத்பா) முடிக்கும் வரை தொழுகை,பேச்சும் இல்லை.

சூரியன் உதயமாகுதல்,உச்சியடைதல் மறைதல்

عن عقبة ابن عامر الجهني رضي الله عنه يقول ثلث ساعات كان رسول الله ﷺ ينهانا ان نصلي فيهنّ او ان نقبر فيهنّ موتانا حين تطلع الشمس بازغة حتی ترتفع و حين يقوم قائم الظّيرة حتی تميل الشمس و حين تضيف الشمس للغروب حتی تغرب

மூன்று நேரங்களில் தொழவோ, இறந்தவர்களை அடக்கம் செய்யவோ வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள்.
1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை.
2. நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் சாயும் வரை.
3. சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை.

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/276,الاوقات التی نهی عن الصلوة فيها ,ஜாமிஉத்திர்மிதி 1/200,தலைப்பு:باب ما جاء فی كراهية الصلوة علی الجنازة ,அல்ஜம்உ பைனஸ்ஸஹீஹைன் லில்ஹுமைதி 3/351,ஹதீஸ் இலக்கம்:2993)



عن ابی هريرة رضي الله عنه قال قال رسول الله ﷺ من لم يصل ركعتي الفجر فليصلهما بعد ما تطلع الشمس

யார் ஃபஜ்ருடைய(சுன்னத்) இரண்டு ரகஅத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரகஅத்துகளையும் சூரியன் உதித்தபின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/96,தலைப்பு:باب ماجاء فی اعادتهما بعد طلوع الشمس )





Friday, September 13, 2019

தொழுகையின் நேரங்கள்


ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்


தொடர்:13


தொழுகையின் நேரங்கள்

பஜ்ர் தொழுகையின் நேரம்

وقت صلوة الصبح من طلوع الفجر ما لم تطلع الشمس

ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரளி) அவர்கள் அறிவித்தது;
பஜ்ர்  தொழுகையின் நேரம் சுப்ஹ் ஸாதிக்கிலிருந்து சூரியன் உதயமாகும் வரையிலாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/223,தலைப்பு:باب اوقات الصلوات الخمس)

عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله ﷺ  انّ للصلوة اوّلا و اخرا ........ و انَّ اول وقت الفجر حين يطلع الفجر و اِنّ اٰخر وقتها حين تطلع الشمس


ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்தது;
நிச்சயமாக தொழுகைக்கு ஆரம்ப நேரமும் இறுதிநேரமும் உண்டு.பஜ்ரு உதயமாகும் போது  பஜ்ரின் ஆரம்ப நேரமாகும்.சூரியன் உதயமாகும் வரை அதனின் இறுதிநேரமாகும் என நபி ஸல்லல்லாஹு நவின்றார்கள்.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/39,40 ابواب الصلوة ,முஸ்னத் அஹ்மத் 7/28,ஹதீஸ் இலக்கம்:7172)

லுஹர் தொழுகை நேரம்


عن عبد الله بن عمرۥ رضي الله عنه انَّ رسول الله ﷺ قال وقت الظهر اذا زالت الشمس و كان ظل الرجل كطوله مالم تحضر العصر

ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரளி) அறிவித்தது;  சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனின் உயரத்திற்கு சமமாகி அஸர் நேரம் ஆகாத வரையில் லுஹர் தொழுகையின் நேரமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/223,தலைப்பு:باب اوقات الصلوات الخمس)

عن عبد الله بن رافع مولی ام سلمة رضي الله عنه زوج النبي ﷺ انه سال اباهريرة عن وقت الصلوة فقال ابوهريرة رضي الله عنه انا اخبرك صلّ الظهر اذا كان ظلك مثلك و العصر اذا كان ظلك مثليك 

ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு ராபிஃ அவர்கள், உம்முல் முஃமினீன் உம்மு ஸலமா (ரளி) அவர்களின் அடிமை.அவர்கள் ஹள்ரத் அபூஹுரைரா ரளி அவர்களிடத்தில் தொழுகையின் நேரம்  குறித்து கேட்டபோது அதற்கு அபூஹுரைரா (ரளி) அவர்கள், உனக்கு இதனை குறித்து அறிவிக்கிறேன் என்றார்கள் 
உனது நிழல் உன்னை போன்று ஆகும் போது லுஹர் தொழுவாயாக!  உனது நிழல் உன்னை போன்று இருமடங்காகும் போது அஸர் தொழுவாயாக. (ஆதாரம் முவத்தா இமாம் மாலிக் 5,6 وقوت الصلوة)

லுஹர் தொழுகையின் நேரம் ஜவாலுக்கு பிறகு ஆரம்பித்து நிழல் (مثلين)  இருமடங்காகும் வரை நீடிக்கிறது.

அசர் தொழுகையின் நேரம்

லுஹர் தொழுகையின் நேரம் முடிந்த உடன் அஸர் நேரமாகிவிடும்.சூரியன் மறையும் வரை நீடிக்கும்.

عن ابي هريرة رضي الله عنه ان رسول الله ﷺ قال من ادرك ركعة من العصر قبل ان تغرب الشمس فقد ادرك العصر

ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள் சூரியன் மறைவதற்கு முன் அஸர் தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்தவர் அஸரை அடைந்து கொண்டார்.

(ஆதாரம் ஸஹீஹுல் புகாரி 1/82, தலைப்பு:باب من ادرك من الصلاة ركعة ,ஸஹீஹ் முஸ்லிம் 1/221,தலைப்பு:باب من ادرك ركعة من الصلوة فقد ادرك تلك الصلوة )

மஃரிப் தொழுகையின் நேரம்


عن عبد الله بن عمرۥ بن العاص رضي الله عنه ان رسول الله ﷺ قال وقت المغرب ما لم يغب الشفق 

மஃரிப் தொழுகையின் நேரம் செம்மேகம் மறையாத வரையாகும்.


عن سلمة ابن الاكوع رضي الله عنه ان رسول الله ﷺ كان يصلی المغرب اذا غربت الشمس و تَوَارت بالحجاب

ஹள்ரத் ஸலமதுப்னுல் அக்வஃ (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூரியன் திரையில் (அடிவானில்) மறையும் போது மஃரிப் தொழுவார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/228,தலைப்பு:باب بيان اول وقت المغرب عند غروب الشمس. ,ஸஹீஹுல் புகாரி 1/79,தலைப்பு:باب وقت المغرب )

ஹள்ரத் ஜாபிர் (ரளி) அவர்களின் நீண்ட ஹதீஸில்

اذن للعشاء حين اذهب بياض النهار و هو 
الشفق 

பகலின் வெண்மை செல்லப்படும் நேரத்தில் பாங்கு சொல்வர்.அது செம்மேகமாக இருக்கும்.

(ஆதாரம்: அல்முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானி 5/122,ஹதீஸ் இலக்கம்:6787,மஜ்மஉஜ்ஜவாயித் லில்ஹைஸமி 2/42,தலைப்பு:باب بيان الوقت ஹதீஸ் இலக்கம்:1686)

ஹள்ரத் அபூமஸ்ஊத் (ரளி) அவர்களின் அறிவிப்பில் ஜிப்ரயீல் அலை அவர்கள் தொழுகை நடத்தியதாக வருகிறது.அதில் يالمغرب حين تسقط الشمس و يصلی العشاء حين يسود الافق

மஃரிப் தொழுகை சூரியன் மறைந்த போது தொழுகை நடத்தினார்கள்.இஷா தொழுகை அடிவானம் கருத்த போது தொழுகை நடத்தினார்கள்.

(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/63,தலைப்பு:باب فی المواقيت ,ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 492,ذكر بان المصطفی لم يسفر بصلوة الغداء ஹதீஸ் இலக்கம்:1494)

முக்கிய குறிப்பு:(1) மேற்கூறிய ஹதீஸ்களிலிருந்து மஃரிப் தொழுகை சூரியன் மறைந்ததிலிருந்து  ஆரம்பமாகிறது.வெண்மையான செம்மேகம் முடியும் வரை இருக்கும் என்பதை அறியமுடிகிறது.

(2) செம்மேகம் என்பது இரண்டு வகையாக உள்ளது.

1) செம்மேகம் 2)செம்மேகம்  வெண்மை

செம்மேகம்:சூரியன் மறைந்த பிறகு மேற்கில் சிவப்பு தோன்றும்.

செம்மேகம் வெண்மை:செம்மேகத்திற்கு பிறகு அடிவானில் தென்படும் வெண்மையாகும்.



செம்மேக வெண்மை என்பதை மேற்கூறிய ஹதீஸ்

حين يسود الأفق

(அடிவானம் கருத்துவிடும் போது) அடிவானம் கருப்பது வெண்மைக்கு பிறகுதான் தோன்றும்.

இஷா தொழுகை நேரம்

இஷாவின் நேரம் வெண்மையான செம்மேகம் மறைந்ததிலிருந்து ஆரம்பமாகி  பஜ்ர் உதயாகும் வரையில் இருக்கும்.

ஜிப்ரயீல் அலை அவர்கள் இமாமத் நடத்திய ஹதீஸில் வரும்
 صلی بي
 العشاء حين غاب الشفق 

ஜிப்ரயீல் (அலை) அவர்கள் செம்மேகம் மறைந்த போது எனக்கு தொழுகை நடத்தினார்கள்.

عن عبيد بن جريج انه قال لابی هريرة رضي الله عنه ما افراط صلوة العشاء قال طلوع الفجر 

ஹள்ரத் உபைத் இப்னு ஜுரைஜ் அவர்களின் அறிவிப்பு அவர்கள் ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்களிடத்தில் கேட்டார்கள் இஷாவின் கடைசி நேரம் எது? அவர்கள்  பஜ்ரு உதயமாகும் வரை கூறினார்கள்.

(ஆதாரம்:ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/118,தலைப்பு:باب فی الموقيت )

முஸ்தஹப்பான நேரங்கள்

பஜ்ரின் முஸ்தஹப்பான நேரம்

عن رافع بن خديج رضي الله عنه قال سمعت رسول الله ﷺ يقول اسفروا بالفجر فانه اعظم لاجر 

ராபிஃ இப்னு கதீஜ் (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்டதை அறிவிக்கிறார்கள்;

  பஜ்ர் நன்றாக வெண்மையில் தொழுங்கள். ஏனெனில் அதனின் நன்மை பெரியது.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/40,தலைப்பு: باب ما جاء فی الاسفار بالفجر ,ஸுனன் அபூதாவூத் 1/67,தலைப்பு:باب فی وقت الصبح,ஸுனன் நஸாயி 1/94,தலைப்பு:باب الاسفار )

முக்கிய குறிப்பு:இமாம் முஹத்திஸ் ஜமாலுத்தீன் முஹம்மத் அபூமுஹம்மத் அப்துல்லாஹ் இப்னு யூசுப் ஜயீலயி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் இந்த கருத்தில் ஹள்ரத் ராபிஃ இப்னு கதீஜ்,ஹள்ரத் பிலால்,ஹள்ரத் அனஸ்,ஹள்ரத் கதாதா இப்னு நுஃமான்,ஹள்ரத் இப்னு மஸ்ஊத் ஹள்ரத் அபூஹுரைரா,ஹள்ரத் ஹவாஉல் அன்சாரி ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோரிமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
(ஆதாரம்:நஸபுர்ராயா லிஜ்ஜயீலயீ 1/304)

عن رافع بن خديج رضي الله عنه قال قال رسول الله ﷺ لبلال اسفر بصلوة الصبح حتی ير القوم مواقع نبلهم 

ராபிஃ இப்னு கதீஜ் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிலால் (ரளி) அவர்களிடத்தில் கூறினார்கள் மக்கள் தங்களின் அம்புக்குறியை பார்க்கும் அளவிற்கு பஜ்ர் தொழுகையை நன்றாக வெளிச்சத்தில் தொழுங்கள்.

(ஆதாரம்:முஸ்னத் அஹ்மத் அபூதாவூத் தயாலிஸி 1/511,ஹதீஸ்:1001,அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 3/151,ஹதீஸ்:4288)

லுஹர் தொழுகையின் முஸ்தஹப்பான நேரம்

வெயில் காலத்தில் லுஹர் தொழுகையின் சுன்னத்தான நேரம்

عن ابي سعيد رضي الله عنه قال قال رسول الله ابردوا فان شدة الحر من فيح جهنم

அபூஸயீத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

வெப்பம் கடுமையாகும் போது லுஹரை தாமப்படுத்துங்கள் ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/77,தலைப்பு:باب الابراد بالظهر فی شدة الحر )

عن ابي هريرة رضي الله عن النبي ﷺ انه قال اذا اشتد الحر فابردوا بالصلوة فانّ شدة الحر من فيح جهنم

ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

   வெப்பம் கடுமையாகும் போது லுஹரை தாமப்படுத்துங்கள் ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/77,தலைப்பு:باب الابراد بالظهر فی شدة الحر ,ஸுனன் அபூதாவூத் 1/64,தலைப்பு:باب فی وقت صلوة الظهر ,ஸஹீஹ் முஸ்லிம் 1/224,தலைப்பு:باب استحباب الابراد بالظّهر ,ஸுனன் நஸாயி 1/87,الابراد بالظهر ,ஜாமிஉத்திர்மிதி 1/40, தலைப்பு:باب ما جاء فی تاخير الظهر فی شدة الحر, ஸுனன் இப்னுமாஜா 1/49,தலைப்பு:باب الابراد بالظهر فی شدة الحر )

குளிர் காலத்தில் லுஹரின் முஸ்தஹப்பான நேரம்

عن انس بن مالك رضي الله عنه كان رسول الله صلی الله عليه وسلم اذا كان الحر ابرد بالصلوة واذا كان البرد عجّل

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெயில் காலத்தில் தொழுகையை தாமதப்படுவார்கள்.குளிரில் விரைவுப்படுத்துவார்கள் என அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஆதாரம்:ஸுனன் நஸாயி 1/87,தலைப்பு:باب تعجيل الظهر فی البرد ,ஸஹீஹுல் புகாரி 1/124,தலைப்பு:باب اذا اشتد الحر يوم الجمعة)

அஸரின் முஸ்தஹப்பான நேரம்

عن ام سلمة رضي الله عنه قالت كان رسول الله ﷺ اشدّ تعجيلا للظهر منكم و انتم اشدّ تعجيلا للعصر منه 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுஹர் தொழுகையை உங்களை விட விரைவாக தொழுது கொண்டிருந்தார்கள்.நீங்கள் அன்னாரை விட விரைவாக தொழுது கொண்டுள்ளீர்கள் என உம்மு ஸலமா (ரளி) அவர்கள் என கூறினார்கள்.
(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/42,தலைப்பு:باب ما جاء تاخير صلوة العصر ,முஸ்னத் அஹ்மத் 18/266,ஹதீஸ் இலக்கம்:26526)

عن علي بن شيبان رضي الله عنه قال قدمنا علی رسول الله ﷺ المدينة فكان يؤخر العصر دامت الشمس بيضاء نقية



நாங்கள் நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் மதீனாவிற்கு வந்த போது அன்னார் அவர்கள் அஸர் தொழுகையை சூரியன் வெண்மையாக,தெளிவாகும் அளவிற்கு  பிற்படுத்தி தொழுது வந்தார்கள் என அலி இப்னு ஷைபான் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/65,தலைப்பு:باب فی وقت صلوة العصر,ஸுனன் இப்னுமாஜா 1/46,பாடம்:كتاب الصلوة தலைப்புகள்:ابواب مواقيت الصلوة )

عن عبد الله بن عمرۥ رضي الله عنه انّ النبي ﷺ قال..... فاذا صليتم العصر فانه وقت الی ان تصفرّ الشمس 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அஸர் தொழும் போது சூரியன் மஞ்சணிக்கும் நேரம் (முன்பு) வரை (தாமதப்படுத்துங்கள்)

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/222,தலைப்பு:باب اوقات الصلوات الخمس )

இந்த ஹதீஸ்களின் மூலம் அஸரை பிற்படுத்தி தொழவேண்டும் என தெரிகிறது.எனினும் சூரியன் மஞ்சணிக்கும் அளவிற்கு பிற்படுத்துவது சரியல்ல.

மஃரிப் தொழுகையின் முஸ்தஹப்பான நேரம்

சூரியன் மறைந்தவுடன் தாமதமின்றி தொழுவது முஸ்தஹப்பாகும்.

عن سلمة رضي الله عنهما قال كنا نصلی مع النبي ﷺ المغرب اذا تورات بالحجاب

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மஃரிப் தொழுகையை சூரியன் மறைந்த பிறகு தொழுதோம் என ஸலமா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/79,தலைப்பு:باب وقت المغرب )

عن ابي ايوب رضي الله عنه قال قال النبي ﷺ لا تزال امتی بخير او قال علی الفطرة ما لم يؤخروا المغرب الی ان تشتبك النجوم

அபூஅய்யூப் (ரளி) அவர்கள் அறிவித்தது;  மக்கள் மஃரிப் தொழுகையை நட்சத்திரங்கள் தோன்றும் அளவிற்கு தாமதப்படுத்தாத வரையில் 
எனது உம்மத் நலவு அல்லது  இயல்பின் மீது இருந்து கொண்டே இருப்பார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்,ஸுனன் அபூதாவூத் 1/66,தலைப்பு:باب فی وقت المغرب ஸுனன் இப்னுமாஜா 1/50,தலைப்பு:باب وقت صلوة المغرب)

இஷா தொழுகையின் முஸ்தஹப்பான நேரம்

இஷா தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதிவரை பிற்படுத்துவது விரும்பத்தக்கது.

عن ابی هريرة رضي الله عنه قال قال رسول الله ﷺ لولا ان اشق علی امتی لامرتهم ان يؤخروا العشاء الی ثلث الليل او نصفه

ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிப்பதாவது;

எனது உம்மத்தினருக்கு கடினம் என்ற பயம் இல்லாமல் இருந்திருந்தால் இஷா தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதி அல்லது இரவின் பாதி வரை பிற்படுத்துவதை கட்டளையிட்டிருப்பேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/42,தலைப்பு:باب ما جاء فی تاخير العشاء الاخرة )

و لا يبالی بتاخير العشاء الی ثلث الليل ثم قال الی شطر الليل

இஷாவை இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை இருக்கும் வரை அல்லது இரவின் பாதி வரை தாமதப்படுத்துவதை பற்றிப் பொருட்படுத்தமாட்டார்கள் என ஹள்ரத் அபூபர்ஜா (ரளி) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/77,தலைப்பு:باب وقت الظهر عند الزوال )

Saturday, August 24, 2019

நபில் தொழுகைகள்


ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்


தொடர்:12

நபில் தொழுகைகள்

தஹஜ்ஜுத் தொழுகை

தஹஜ்ஜுத் தொழுகை, நபிலான தொழுகைகளில் அதிகப்படியான முக்கியத்துவமும் சிறப்பும் பெறுகிறது.
அபூஹுரைரா (ரளி) அவர்களின் அறிவிப்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்;

افضل الصلاة بعد الفريضة صلاة الليل

கடமையான தொழுகைகளில் அனைத்து விட சிறந்தது தஹஜ்ஜுத் எனும் இரவுத்தொழுகையாகும்.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/99 பாடம்:باب ما جاء فی صلوة الليل )

இதனின் சிறப்பு குறித்து ஹள்ரத் அலி (ரளி) அவர்கள் அறிவிப்பு

قال رسول الله ﷺ انّ فی الجنة غرفًا تری ظهورهَا من بطونهَا و بطونهَا من ظهورهَا فقام اعرابيّ فقال لمن هي يا رسول الله ﷺ فقال لمن اطاب الكلام و اطعم الطعام و ادام الصيام و صلّٰی بالليل و الناس نيام

சுவனத்தில் உள்ளே உள்ளவை வெளியேயும்,வெளியில் உள்ளவை உள்ளேயும் காட்சியளிக்கக் கூடிய மாடங்கள் உள்ளன என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள் ஒரு கிராமப்புற அரபி எழுந்து நின்று கேட்டார்.யா ரசூலுல்லாஹ்! இந்த மாடங்கள் யாருக்குரியது? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நல்லதை பேசுபவர், (ஏழைகளுக்கு)உணவு அளிப்பவர்,எப்பொழுதும் நோன்பு நோற்பவர்,மக்கள் தூங்கும் சமயம் இரவுத்தொழுபவர்.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 2/19,தலைப்பு:باب مَا جاء فی قول المعروف)

தஹஜ்ஜுத் நேரம்

தஹஜ்ஜுத் நேரம் இரவின் பாதியிலிருந்து ஆரம்பமாகிறது.சுன்னத்தான முறையானது; இஷா தொழுது விட்டு உறங்கி எழுந்து தஹஜ்ஜுத் தொழவேண்டும். இவ்வாறுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரவுத்தொழுகையை குறித்து ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்;

كَانَ يَنَامُ اَوَّلهُ و يقوم اٰخرهُ فيُصلّیْ ثُمَّ يَرْجِعُ الی فراشه

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவின் ஆரம்ப பகுதியில் உறங்குவார்கள்.இரவின் கடைசியில் எழுந்து நின்று வணங்குவார்கள்.பிறகு படுக்கைக்கு திரும்புவார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/154,தலைப்பு:باب من نَام اول الليل و احي اٰخره ,ஸஹீஹ் முஸ்லிம் 1/255,தலைப்பு:باب صلوة الليل و عدد ركعات النبي ﷺ)

தஹஜ்ஜுத் தொழுகையின் எண்ணிக்கை

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழக்கத்தின் படி தஹஜ்ஜுத் தொழுகையின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடுகள் உள்ளது.நான்கு,ஆறு,எட்டு,
பத்துவரை அறிவிப்புகள் வந்துள்ளது.

عن عبد الله بن ابی قيس قال ساَلْتُ عائشة رضي الله عنها بكم كان رسول الله ﷺ يوتر قالت باربع و ثلاث و ست و ثلاث و ثمان و ثلاث ولم يكن يوتر باكثر من ثلاث عشرة ولا انقص من سبع

ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு கைஸ் அவர்கள் கூறுகிறார்கள் நான் ஆயிஷா (ரளி) அவர்களிடத்தில் கேட்டேன்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனை ரக்அத் வித்ர் (இரவுத்தொழுகை) தொழுவார்கள்? அன்னை அவர்கள் கூறினார்கள்; நான்கு மூன்றுடன்,ஆறு மூன்றுடன்,எட்டு மூன்றுடன் மேலும் அண்ணலாரின் வித்ரின் ரக்அத்துகள் (தஹஜ்ஜுத்துடன்)
பதின்மூன்றை விட அதிகமாகவும்,ஏழு விட குறைவாகவும் இருக்காது.

(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/200,தலைப்பு:باب فی صلوة الليل)

عن عائشة رضي الله عنها قالت كان رسول الله ﷺ يصلی من الليل تسع ركعات فيهنّ الوتر

ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் ஒன்பது ரக்அத் தொழுவார்கள்.வித்ரும் அதில் உண்டு.

(ஆதாரம்:ஸஹீஹ் இப்னு ஹுஜைமா 1/577,ஹதீஸ் இலக்கம்:1167)

ஹள்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

انَّ رسول الله ﷺ  صلی بعد العتمة ثلاث عشرة ركعة

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஷா தொழுகைக்கு பிறகு பதின்மூன்று ரக்அத்துகள் தொழுது கொண்டிருந்தார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹ் இப்னு ஹுஜைமா1/576,
ஹதீஸ் இலக்கம்:1165)

குறிப்பு:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்சொன்ன ரக்அத்துகள் பலநேரங்களில் தொழுதது.
ஆனால் வழக்கம் எட்டு ரக்அத்துகள் தஹஜ்ஜுத் தொழுகையாக இருந்தது.


ஹள்ரத் ஆயிஷா (ரளி) அவர்கள் நவின்றார்கள்;

مَا كان رسول الله ﷺ يزيد فی رمضان و لا فی غيره علی احدی عشرة ركعة

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளானில், ரமளான் அல்லாத காலத்தில் பதினொன்று ரக்அத்துகளை விட அதிகமாக தொழவில்லை.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/154,தலைப்பு:باب قيام النبي ﷺ بالليل فی رمضان و غير ه ,ஸஹீஹ் முஸ்லிம் 1/254,தலைப்பு:باب صلوة الليل و عدد ركعات النبي ﷺ ,ஸுனனுன் நஸாயி 1/248,தலைப்பு:باب كيف الوتر بثلاث )

இஷ்ராக் தொழுகை


இஷ்ராக் தொழுகையின் நேரம் சூரியன் உதயமாகி பதினைந்து, இருபது நிமிடம் கழிந்த பிறகு ஆரம்பமாகும்.இரண்டு அல்லது நான்கு ரக்அத் தொழப்படும்.இதனின் நன்மை ஒரு ஹஜ் உம்ராவிற்கு சமமானது.

عن انس رضي الله عنه قال قال رسول الله ﷺ من صلی الفجر فی جماعة ثم قعد يذكر الله حتی تطلع الشمس ثم صلی ركعتين كانت له كاَجر حجة و عمرة قال قال رسول الله ﷺ تامّة تامة تامة

அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எவர் பஜ்ரு தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தொழுத பிறகு அல்லாஹ்வை திக்ரு செய்தவாறு சூரியன் உதயமாகும் வரை அமர்ந்துவிடுகிறார்.பிறகு இரண்டு ரக்அத் தொழுகிறார்.அவருக்கு ஒரு ஹஜ், உம்ராவின் நன்மைக்கு நிகரானவை உண்டு.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'பூர்த்தியான' என்ற வார்த்தையை மூன்று தடவை நவின்றார்கள்.

(ஆதாரம்:ஸுனனுத்திர்மிதி 1/130,தலைப்பு:باب ما ذكر مما يستحب من الجلوس فی المسجد الخ ,அத்தர்ஙீப் வத்தர்ஹீப் லில்முன்திரி 1/178,தலைப்பு:الترغيب فی جلوس المرء فی مصلاه )




عن حسن بن عليّ رضي الله عنه قال قال رسول الله ﷺ من صلّی الفجر ثم قعد فی مجلسه يذكر الله عز وجلّ حتّی تطلع الشمس ثم قال فصلّی ركعتين حرّم الله علی النَّار ان تلحفه او تطعمه

ஹஸன் இப்னு அலி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள் எவர் பஜ்ரு தொழுது தனது இடத்தில் சூரியன் உதயமாகும் வரை அமர்ந்து அல்லாஹ்வை திக்ரு செய்கிறார்.பிறகு அவர் இரண்டு ரக்அத் தொழுதால் நெருப்பு அவரை கரிப்பதை அல்லாஹ் தடைசெய்துவிட்டான்.

(ஆதாரம்:ஷுஅபுல் ஈமான் லில்பைஹகீ 3/85, பிரிவு:فصلی  مشی الی المساجد ஹதீஸ் இலக்கம்:2958,ஜாமிஉல் அஹாதீஸ் லிஸ்ஸுயூத்தி 20/494,ஹதீஸ் இலக்கம்:22717)

ஹஜ்ரத் அபுஉமாமா (ரளி) அவர்கள் இதே கருத்தில் அறிவிக்கிறார்கள்

 ثم صلى  ركعتين و اربع ركعات

பிறகு அவர் இரண்டு ரக்அத் அல்லது நான்கு ரக்அத் தொழுதார்.

(ஆதாரம்:அத்தர்ஙீப் வத்தர்ஹீப் லில்முன்திரி 1/178,الترغيب فی جلوس المرء فی مصلاه الخ )

லுஹா தொழுகை

லுஹா தொழுகையின் சிறப்பு


عن ابی الدرداء رضي الله عنه قال  قال رسول الله ﷺ من صلی الضحٰی ركعتين لم يكتب من الغافلين و من صلی اربعا كتب من العابدين و من صلی ستا كفي  ذلك اليوم و من صلی ثمانيا كتبه الله من القانتين و من صلی ثنتي عشرة بنی الله له بيتا فی الجنة

ஹள்ரத் அபுத்தர்தா (ரளி) கூறுகிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: லுஹா தொழுகை இரண்டு ரக்அத் தொழுதால், அவரின் பெயர் மறதியாளர்களில் எழுதப்படாது.நான்கு ரக்அத் தொழுதால், அவரின் பெயர் வணக்கசாலியில் எழுதப்படும்.ஆறு ரக்அத் தொழுதால்,அன்றைய நாள் அவருக்கு போதுமாக்கப்படும்.எட்டுரக்அத் தொழுதால்,வழிப்படுபவர்களில் அவரை அல்லாஹ் எழுதுகிறான்.பன்னிரெண்டு ரக்அத் தொழுதால் அல்லாஹ் அவருக்கு சுவனத்தில் வீட்டை கட்டுகிறான்.

(ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித் லில்ஹைஸமி 2/494,தலைப்பு:باب صلوة الضحٰی ,ஹதீஸ் இலக்கம்:3419)

عن بريدة رضي  الله عنه قال انّ  رسول الله ﷺ يَقُولُ: فِي اْلإِنْسَانِ ثَلثُمِائَةٍ وَسِتُّونَ مَفْصِلاً، فَعَلَيْهِ أَنْ يَتَصَدَّقَ عَنْ كُلِّ مَفْصِلٍ مِنْهُ بِصَدَقَةٍ قَالُوا: وَمَنْ يُطِيقُ ذلِكَ يَانَبِيَّ اللهِ؟ قَالَ: النُّخَاعَةُ فِي الْمَسْجِدِ تَدْفِنُهَا، وَالشَّيْءُ تُنَحِّيهِ عَنِ الطَّرِيقِ، فَإِنْ لَمْ تَجِدْ فَرَكْعَتَا الضُّحَي تُجْزِئُكَ.


மனிதனுடைய உடம்பில் முந்நூற்று அறுபது இணைப்புகள் உள்ளன, ஒவ்வோர் இணைப்பும் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு நன்றி செலுத்தும் முகமாக ஒரு தருமம் செய்வது அவன் மீது கடமை'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னபோது, யாரஸூலல்லாஹ், இவ்வளவு தர்மம் யாரால் செய்ய இயலும்?' என்று ஸஹாபாக்கள் வினவினர். பள்ளிவாசலில் எச்சில் இருக்கக் கண்டால், அதை மண்ணில் புதைப்பது தர்மம். இடர் தரும் பொருட்களை வழியிலிருந்து அகற்றுவது தர்மம். இந்த காரியங்களைச் செய்யச் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால், ளுஹாவுடைய இரண்டு ரக்அத் தொழுவது இந்த தர்மங்கள் யாவற்றுக்கும் பகரமாக உமக்குப் போதுமாகிவிடும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஆதாரம்:அபூதாவூத்,தலைப்பு:باب اماطة الاذی فی الطريق , இலக்கம்:52)

லுஹா தொழுகையின் நேரம்

சூரியன் உதயமாகி ஒரு ஈட்டியின்  அளவு உயர்ந்தது முதல் லுஹா தொழலாம்.எனினும்,சிறந்தது பகல் பொழுதின் நான்கில் ஒரு பகுதி (மூன்றுமணி நேரம்) சென்ற பிறகு தொழுவது சிறந்தது.இவ்வாறுதான் ஹள்ரத் ஜைத் இப்னு அர்கம் (ரளி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்ட்டுள்ளது.

صلوة الاوّابين حين ترمض الفصال

ஜைத் இப்னு அர்கம் (ரளி) அவர்கள் லுஹா தொழுது கொண்டிருந்த ஒரு கூட்டாத்தாரைக் கண்டார்கள்.அப்போது இந்தத் தொழுகையை இந்நேரத்தில் அல்லாமல் வேறு நேரத்தில் தொழுவது சிறந்தது என இவர்கள் அறியவேண்டாமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுடுமணலில் ஒட்டகக்குட்டியின் கால் குழம்புகள் கரிந்துவிடும் நேரமே அவ்வாபீன் தொழுகையின் நேரமாகும் எனக் கூறினார்கள்.

(ஆதாரம் ஸஹீஹ் முஸ்லிம் 1/257,தலைப்பு:باب صلوة الليل و عدد ركعات النبي ﷺ الخ )

முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை கொண்டு பகலில் நான்கில் ஒரு பகுதியில் ஆரம்பமாகிறது என கூறுகிறார்கள்.

குறிப்பு:இந்த ஹதீஸின் மூலம் லுஹா தொழுகைக்கு அவ்வாபீன் என்றும் சொல்லப்படும் என அறியமுடிகிறது.


அவ்வாபீன் தொழுகை

மஃரிப் தொழுகைக்கு பிறகு ஆறு

ரக்அத் தொழுவது. ஹதீஸ்களில் இதற்கு அளப்பரிய நன்மை வந்துள்ளது.

عن ابي هريرة رضي الله عنه قال قال رسول اللهﷺ من صلی بعد المغرب ست ركعات لم يتكلم فيما فيهنَّ بسوء عدلن له بعبادة ثنتي عشرة سنة

அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள் எவர் மஃரிப் தொழுகைக்கு பிறகு ஆறு ரக்அத் தொழுது அதற்கு மத்தியில் எந்த ஒரு தீமையை செய்யவில்லையோ அவருக்கு பன்னிரெண்டு வருடங்களின் வணக்கத்தின் நன்மை கிடைக்கும்.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி1/98,
தலைப்பு:باب ما جاء فی فضل التطوع ست ركعات بعد المغرب ,இப்னு மாஜா 1/98 ,باب ما جاء فی الصلاة بين المغرب و العشاء , அத்தர்ஙீப் வத்தர்ஹீப் லில்முன்திரி 1/227,الترغيب فی الصلوة بين المغرب و العشاء )

ஹள்ரத் அம்மார் இப்னு யாஸிர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

رايت حبيب رسول الله ﷺ يصلی بعد المغرب ست ركعات و قال من صلی بعد المغرب ست ركعات غفرت له ذنوبه و ان كان مثل زبد البحر

நான் எனது ஹபீப் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்தேன்.மஃரிப் தொழுகைக்கு பிறகு ஆறு ரக்அத்துகள் தொழுவார்கள்.மேலும் கூறினார்கள்; யார் மஃரிப் தொழுகைக்கு பிறகு ஆறு ரக்அத்துகள் தொழுகிறாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்.

இந்த தொழுகைக்கும் அவ்வாபீன் என்று சொல்லப்படும்.இவ்வாறுதான் ஸஹாபாக்களின் வழிமுறையிலிருந்து  நிரூபணமாகியுள்ளது.

عن عبد الله بن عمر رضي الله عنه قال صلاة الاوابين ما بين ان ينكفت اهل المغرب الی ان يثوب الی العشاء

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது;
ஸலாதுல் அவ்வாபீன் நேரமானது மஃரிப் தொழுகையை முடித்த பிறகு இஷா வரையிலாகும்.

عن ابن عباس رضي الله عنه قال انَّ الملائكة لتحف بالذين يصلون بين المغرب الی العشاء و هي صلوة الاوبين

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; மஃரிப் இஷாவிற்கு மத்தியில் தொழுபவர்களை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றார்கள்.இது ஸலாதுல் அவ்வாபீன்

தஸ்பீஹ் தொழுகை

தஸ்பீஹ் தொழுகை மிகவும் முக்கியத்திற்குரியது.ஒரு ஸலாமுடன் நான்கு ரக்அத்துகளாகும்.ஒவ்வொரு ரக்அத்திலும் எழுபத்தைந்து தடவை ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று ஓதவேண்டும்.இதன் வழிமுறை ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளது.

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ  لِلْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ يَا عَبَّاسُ يَا عَمَّاهُ : أَلَا أُعْطِيكَ ، أَلَا أَمْنَحُكَ ، أَلَا أَحْبُوكَ ، أَلَا أَفْعَلُ بِكَ ، عَشْرَ خِصَالٍ إِذَا أَنْتَ فَعَلْتَ ذَلِكَ ، غَفَرَ اللَّهُ لَكَ ذَنْبَكَ أَوَّلَهُ وَآخِرَهُ قَدِيمَهُ وَحَدِيثَهُ خَطَأَهُ وَعَمْدَهُ صَغِيرَهُ وَكَبِيرَهُ سِرَّهُ وَعَلَانِيَتَهُ ، عَشْرَ خِصَالٍ أَنْ تُصَلِّيَ أَرْبَعَ رَكَعَاتٍ تَقْرَأُ فِي كُلِّ رَكْعَةٍ فَاتِحَةَ الْكِتَابِ وَسُورَةً ، فَإِذَا فَرَغْتَ مِنْ الْقِرَاءَةِ فِي أَوَّلِ رَكْعَةٍ ، وَأَنْتَ قَائِمٌ قُلْتَ : سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ خَمْسَ عَشْرَةَ مَرَّةً ، ثُمَّ تَرْكَعُ ، فَتَقُولُهَا وَأَنْتَ رَاكِعٌ عَشْرًا ، ثُمَّ تَرْفَعُ رَأْسَكَ مِنْ الرُّكُوعِ ، فَتَقُولُهَا عَشْرًا ، ثُمَّ تَهْوِي سَاجِدًا ، فَتَقُولُهَا وَأَنْتَ سَاجِدٌ عَشْرًا ، ثُمَّ تَرْفَعُ رَأْسَكَ مِنْ السُّجُودِ ، فَتَقُولُهَا عَشْرًا ، ثُمَّ تَسْجُدُ فَتَقُولُهَا عَشْرًا ، ثُمَّ تَرْفَعُ رَأْسَكَ ، فَتَقُولُهَا عَشْرًا ، فَذَلِكَ خَمْسٌ وَسَبْعُونَ فِي كُلِّ رَكْعَةٍ ، تَفْعَلُ ذَلِكَ فِي أَرْبَعِ رَكَعَاتٍ ، إِنْ اسْتَطَعْتَ أَنْ تُصَلِّيَهَا فِي كُلِّ يَوْمٍ مَرَّةً ، فَافْعَلْ فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي كُلِّ جُمُعَةٍ مَرَّةً ، فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي كُلِّ شَهْرٍ مَرَّةً ، فَإِنْ لَمْ تَفْعَلْ فَفِي كُلِّ سَنَةٍ مَرَّةً ، فَإِنْ لَمْ تَفْعَلْ ، فَفِي عُمُرِكَ مَرَّةً


அப்பாஸ் (ரளி) அவர்களை நோக்கி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எனது பெரிய தந்தையே! உங்களைச்சேர்த்து நடக்கட்டுமா? உங்களுக்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் வழங்கட்டுமா? உங்களுக்குப் பிரயோசனம் அளிக்கட்டுமா? எனக் கேட்டார்கள். ஆம் அழ்ழாஹ்வின் தூதரே! என கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் எனது பெரிய தந்தையே! நான்கு ரக்அத்துக்கள் தொழுங்கள். ஒவ்வொரு ரக்அத்திலும் ஸூரத்துல் பாதிஹாவையும், மற்றொரு ஸூராவையும் ஓதிக்கொள்ளுங்கள். ஓதல் முடிந்ததும் அல்லாஹு அக்பர், வல்ஹம்துலில்லாஹ், வஸுப்ஹானல்லாஹ், வலா இலாஹ இல்லல்லாஹ் என ருகூஃ செய்வதற்கு முன்னர் பதினைந்து முறை கூறுங்கள், பின்னர் ருகூஃ செய்து அதனைப் பத்து முறை கூறுங்கள், பின்னர் உங்களது தலையை உயர்த்தி அதனைப் பத்து முறை கூறுங்கள், பின்னர் ஸுஜுது
 செய்து அதனைப் பத்து முறை கூறுங்கள், பின்னர் உங்களது தலையை உயர்த்தி அதனைப் பத்துமுறை கூறுங்கள், பின்னர் இரண்டாம் முறை ஸுஜூது செய்து அதனைப் பத்து முறை கூறுங்கள், பின்னர் உங்களது தலையை உயர்த்தி எழுவதற்கு முன்னர் அதனைப் பத்து முறை கூறுங்கள். அது ஒவ்வொரு ரக்அத்திலும் எழுபத்தி ஐந்து விடுத்தமாகும். அது நான்கு ரக்அத்துக்களில் முன்நூறு விடுத்தமாகும். உங்களது பாவம் அடர்ந்த மணலினளவு இருந்தாலும் அவற்றை அல்லாஹ் உங்களுக்கு மன்னித்துவிடுவான் எனக் கூறினார்கள். (அதற்கு அப்பாஸ் (ரளி) அவர்கள் ஒரு நாளையிலே அவற்றைச் செய்ய யாருக்குத்தான் முடியும்? எனக் கேட்டார்கள். (அதற்கவர்கள்) ஒவ்வொரு நாளும் உங்களால் செய்ய முடியாவிட்டால் வெள்ளிக் கிழமையில் ஒருமுறை செய்யுங்கள், ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் உங்களால் செய்யமுடியாவிட்டால் மாதத்தில் ஒரு முறை செய்யுங்கள்,
வருடத்தில் ஒரு முறையாவது செய்யுங்கள் எனும் அளவுவரை அதனைக் கூறிக்கொண்டே இருந்தார்கள்.

(ஆதாரம்: அபூதாவூத் 1/190 பாடம்:باب صلوة التسبيح ,ஜாமித்திர்மிதி 1/109,பாடம்:باب ماجاءَ فی صلوة التسبيح ,ஸுனன் இப்னுமாஜா 1/99,பாடம்:باب مَا جاء فی صلوة التسبيح ,அத்தர்ஙீப் வத்தர்ஹீப் லில்முன்திரி 1/268,الترغيب فی صلوة التسبيح )

தஸ்பீஹ் தொழுகையின் மற்றொரு வழிமுறையும் அறிவிப்பில் உள்ளது.ஸனாவிற்கு பிறகு பதினைந்து தடவை தஸ்பீஹ் ஓதவேண்டும்.பிறகு ருகூவிற்கு முன்பாக,முதல் ருகூவின் நிலையில், ருகூவிற்கு பிறகு,முதல் ஸஜ்தாவில்,ஸஜ்தாவிற்கு பிறகு அமரும் போது,பிறகு இரண்டாவது ஸஜ்தாவில் பத்து பத்து தடவை பிறகு இரண்டாவது ஸஜ்தாவிற்கு அமராமல் எழுந்துவிடவேண்டும்.மீதி அதே முறையில்தான்.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி 1/109,பாடம்:مَا جاء فی صلوة التسبيح ,அத்தர்ஙீப் வத்தர்ஹீப் லில்முன்திரி 1/269,الترغيب فی صلوة التسبيح )

இரண்டு முறையில் எதனை வேண்டுமானாலும் அமல் செய்யலாம்.எனினும்,ஒவ்வொரு ரக்அத்தில் எழுபத்தைந்து முறை தஸ்பீஹ் ஓதவேண்டும் என்பதை கவனித்தில் கொள்ளவேண்டும்.

ஸலாதுல் ஹாஜத் (தேவை நிறைவேற தொழுகை)

அடியானுக்கு அவசிய தேவை வந்தால், நல்ல முறையில் உளுச்செய்து,அவர் இரண்டு ரக்அத் தொழுகவேண்டும்.பிறகு, அல்லாஹ்வை புகழ்ந்து,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதி,அடக்கத்துடன் இயலாமையை வெளிப்படுத்தி மனஓர்மையுடன் துஆ செய்தால் அல்லாஹ் நிச்சயம் நமது தேவையை நிறைவேற்றுவான்.

ஹதீஸ்களில் வந்துள்ளது

عبد الله بن أبي أوفى أن النبي صلى الله عليه وسلم قال: من كانت له حاجة إلى الله تعالى أو إلى أحد من بنى آدم فليتوضأ وليحسن وضوءه ثم ليصل ركعتين ثم ليثن على الله تعالى ويصل على النبي صلى الله عليه وسلم وليقل: (لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين. أسالك موجبات رحمتك وعزائم مغفرتك والعصمة من كل ذنب والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنباً إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين)

அப்துல்லாஹ் இப்னு அபீஅவ்ஃபா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

யாருக்காவது அல்லாஹ்விடமோ, அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும். அதை அழகிய முறையில் செய்யட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும். பின்பு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, "லாயிலாஹ இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீம். சுப்ஹானல்லாஹி ரப்பில் அர்ஷில் அழீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்அலுக மூஜிபாதி ரஹ்மதிக, வஅஸாயிம மக்ஃபிரதிக. வல்கனீமத மின் குல்லி பிர்ரின் வஸ்ஸலாமத்த மின் குல்லி இஸ்மின் லாததஃலீ தன்பன் இல்லா கஃபர்தஹு வலா ஹம்மன் இல்லா ஃபர்ரஜ்தஹு வலா ஹாஜதன் ஹிய லக ரிளன் இல்லா களைதஹா யா அர்ஹமர் ராஹிமீன்' என்று கூறட்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி,1/108,பாடம்:باب مَا جَاء صلوة الحَاجة ,ஸுனன் இப்னுமாஜா 1/98,பாடம்:باب مَا جاء فی صلوة الحَاجة அத்தர்ஙீப் வத்தர்ஹீப் லில் முன்திர் 1/273,الترغيب فی صلوة الحَاجة و دعائها )

ஹள்ரத் அபுத்தர்தா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

اني سمعت رسول الله ﷺ يقول من توضا فاسبغ الوضوء ثم صلی ركعتين يتمهما اعطاه الله ما سال معجلا او مؤخرا

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  கூறுவதை கேட்டேன்; எவர் நல்ல முறையில் உளூச்செய்து பிறகு உள்ளச்சத்துடன் பணிவுடன் இருரக்அத்துகள் தொழுதால் அல்லாஹுதஆலா அவரின் வேண்டுதலை விரைவாகவோ அல்லது தாமதமாகவோ நிறைவேற்றுவான்.

(ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் இப்னு ஹன்பல் 18/568,ஹதீஸ் எண் 27370,ஙாயதுல் மக்ஸத் ஃபீ ஜவாயிதில் முஸ்னத் லில்ஹைஸமி 1/1362,பாடம்:صلوة الحَاجة )

தஹிய்யத்துல் உளூ

தஹிய்யத்துல் உளூ இரண்டு ரக்அத்துகளாகும்.உளுவிற்கு பிறகு தொழவேண்டும்.ஹதீஸ்களில் இது குறித்து ஏராளமான சிறப்புகள் வந்துள்ளது.

عن أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ : " أَنَّ النَّب

ِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلاَلٍ عِنْدَ صَلاَةِ الفَجْرِ  يَا بِلاَلُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الإِسْلاَمِ ، فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الجَنَّةِ  قَالَ: " مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي : أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا ، فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ، إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ " .
دف نعليك : يعني حركة نعليك وصوتهما في الأرض .

ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

   ஒரு நாள் பஜ்ருத் தொழுகை நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களிடம், பிலால்! நீர் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து அதிகமான நன்மை கிடைக்குமென எந்த அமலின் மீது ஆதரவு வைக்கிறீர்? ஏனேனில், சுவர்க்கத்தில் எனக்கு முன்னால் உமது பாத அணிகலன்களின் சப்தத்தை நேற்றிரவு கனவில் நான் கேட்டேன்'' என்று கேட்டதற்கு எனது அமல்களில் அதிக நன்மைகளுக்குரியது என நான் ஆதரவு வைப்பது, இரவிலோ, பகலிலோ எப்பொழுது உளூச் செய்தாலும், அந்த உளூவைக் கொண்டு அந்த நேரத்தில் அல்லாஹ் நல்லுதவி செய்யுமளவு தவறாமல் தஹியத்துல் உளூ இரண்டு ரக்அத் தொழுதுவிடுவேன் இதுதான் என்னுடைய அமல்களில் அதிக ஆதரவு கொள்ளத் தக்கது'', என்று ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/154,பாடம்:باب فضل الطهور بالليل و النهار ,ஸஹீஹ் முஸ்லிம் 2/292,பாடம்:باب من فضائل ام سليم ام انس بن مالك و بلال ,அத்தர்ஙீப் வத்தர்ஹீப் லில் முன்திரி 1/106,الترغيب فی ركعتين بعد الوضوء)

عن عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله ﷺ  مامن مسلم يتوضا فيحسن وضوءه ثم يقوم فيصلی ركعتين مقبل عليهما بقلبه و وجهه الا وجبت له الجنة


உக்பதுப்னு ஆமிர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்;           ஒரு முஸ்லிம் நல்லமுறையில் உளூச்செய்து  அகத்தையும்,முகத்தையும் ஒருமுகப்படுத்தி,முழுமையான கவனத்துடன் இரண்டு ரக்அத் தொழுவாரானால் அவருக்கு சுவனம் கட்டாயம் கிடைக்கும்.

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/122,பாடம்:باب الذكر المستحب عقب الوضوء ,ஸுனன் நஸாயி 1/36,பாடம்:باب ثواب من احسن الوضوء ثم صلی ركعتين )

عن زيد بن خالد الجهنيّ رضي الله عنه ان النبي ﷺ قال من توضا فاحسن وضوءه ثم صلی ركعتين لا يسهو فيهما غفر له ما تقدم من ذنبه

ஜைத் இப்னு காலிதில் ஜுஹைனி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்;   யார் நல்லமுறையில் உளூச்செய்து பிறகு கவனக்குறைவின்றி இரண்டு ரக்அத் தொழுதால் அவரின் முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/138,பாடம்:باب الكراهية الوسوسة و حديث النفس فی الصلوة ,ஷரஹுஸ்ஸுன்னா லில்பஙவி 2/524,பாடம்:باب فضل من تطهر فصلی عليه ,ஹதீஸ் இலக்கம்:1008,அத்தர்ஙீப் வத்தர்ஹீப் லில்முன்திரி 1/106,الترغيب فی ركعتين بعد الوضوء )

தஹிய்யத்துல் மஸ்ஜித்

முஸ்லிம் மஸ்ஜிதில் நுழைந்தால் அமர்வதற்கு முன்பாக இரண்டு ரக்அத் தொழுவது விரும்பத்தக்கது.எனினும், மக்ரூஹான நேரமாக இருக்ககூடாது.

عن ابي قتادة السلمي رضي الله عنه انّ رسول الله ﷺ قال اذا دخل احدكم المسجد فليركع ركعتين قبل ان يجلس

அபூகதாதா அஸ்ஸலமி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்; உங்களில் ஒருவர் மஸ்ஜிதில் நுழைந்தால் அமர்வதற்கு முன்பாக இரண்டு ரக்அத் தொழட்டும்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/63,பாடம்:باب اذا دخل احدكم المسجد فليركع ركعتين ,ஸஹீஹ் முஸ்லிம் 1/248,பாடம்:باب استحباب تحية المسجد بركعتين )

இஸ்திகாரா தொழுகை

ஏதேனும் காரியம் வருகிறது.அதனை செய்வது, விடுவதில் தடுமாற்றம் ஏற்படுகிறது.அல்லது அதனை செய்யலாமா? அல்லது வேண்டாமா? என முடிவு எடுக்கமுடியவில்லை.விரைவாக செய்யலாமா? அல்லது தாமதப்படுத்தி செய்யலாமா? அவர் இரண்டு ரக்அத் தொழுது, இஸ்திகாரா துஆ செய்த பிறகு அவரின் உள்ளம் எதன்பக்கம் சாய்கிறதோ அதனையே தேர்ந்தெடுக்கவும்.

عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَلِّمُنَا الاسْتِخَارَةَ فِي الأُمُورِ كُلِّهَا كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنْ الْقُرْآنِ يَقُولُ : إذَا هَمَّ أَحَدُكُمْ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلْ :

( اللَّهُمَّ إنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ , وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ , وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلا أَقْدِرُ , وَتَعْلَمُ وَلا أَعْلَمُ , وَأَنْتَ عَلامُ الْغُيُوبِ , اللَّهُمَّ إنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ (هنا تسمي حاجتك ) خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ : عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ , فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ , اللَّهُمَّ وَ

إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ (هنا تسمي حاجتك ) شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ : عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ , فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ ارْضِنِي بِهِ . وَيُسَمِّي حَاجَتَهُ  وَفِي رواية  ثُمَّ رَضِّنِي بِهِ

ஜாபிர் (ரளி) அவர்கள் கூறியதாவது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனில் உள்ள சூராக்களை கற்றுக்கொடுப்பது போன்று அனைத்து காரியங்களில் இஸ்திகாரா கற்றுக்கொடுத்தார்கள்.உங்களில்  எவரேனும் காரியம் செய்ய நாடினால் இரண்டு ரக்அத் (இஸ்திகாரா) தொழுங்கள் பிறகு துஆ செய்யுங்கள்
பொருள்:

யா அல்லாஹ்! உன்னுடைய அறிவின் பொருட்டால் நான் உன்னிடம் நன்மையை வேண்டுகிறேன். உனது ஆற்றலின் பொருட்டால் உன்னி;டம் ஆற்றலைத் தேடுகிறேன்.உன்னுடைய மகாத்தான அருளிலிருந்து உன்னிடம் நான் கேட்கிறேன். நிச்சயமாக நீ(எல்லாப் பொருட்களின் மீதும்) ஆற்றல் பெறுவாய். நான் (எதற்கும்) ஆற்றல் பெற மாட்டேன். நீ (அனைத்தையும்) அறிந்துள்ளாய். நான் (எதனையும்) அறிய மாட்டேன். நீ மறைவானவற்றை நன்கு அறிந்தவனாய் இருக்கிறாய். யா அல்லாஹ்! இந்த செயல் எனக்கு என்'னுடைய தீனிலும் என்னுடைய வாழ்விலும் என் செயலின் முடிவிலும் நன்மையாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதற்கு எனக்கு நீ ஆற்றலளித்து அதனை எனக்கு எளிதாக்கி வைத்து, பிறகு அதில் எனக்கு நீ பரக்கத்துச் செய்வாயாக!  இந்தச் செயல் எனக்கு என்னுடைய தீனிலும் என்னுடைய வாழ்விலும் என் செயலின் முடிவிலும் தீமையாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதனை என்னை விட்டும் நீ திருப்பிவிடுவாயாக! என்னையும் அதனை விட்டும் திருப்பி விடுவாயாக! நன்மை எங்கிருந்தாலும் அதனைச் செய்ய எனக்கு ஆற்றலளிப்பாயாக! பிறகு அதனைக் கொண்டு என்னைப் பொருந்திக் கொள்ளச் செய்வாயாக!

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/155 தலைப்பு:باب مَا جاء فی التطوع مثنی مثنی ,ஸுனன் அபூதாவூத் 1/222,தலைப்பு:باب فی الاستخارة ,ஜாமிஉத்திர்மிதி 1/109,தலைப்பு:باب ما جاء فی صلوة الاستحارة )

தவ்பா தொழுகை

எவரேனும் பாவம் செய்துவிட்டால் அவர் நல்லமுறையில் உளூசெய்து இரண்டு ரக்அத் தொழுது தவ்பா செய்யவேண்டும்.மேலும் அல்லாஹ்விடம் தனது பாவங்களை மன்னிக்கும்படி வேண்ட வேண்டும்.

عن أبي بَكْرٍ الصديق رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَا مِنْ عَبْدٍ يُذْنِبُ ذَنْبًا فَيُحْسِنُ الطُّهُورَ ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ ، ثُمَّ يَسْتَغْفِرُ اللَّهَ إِلَّا غَفَرَ اللَّهُ لَهُ ، ثُمَّ قَرَأَ هَذِهِ الْآيَةَ : "وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதை கேட்டதாக ஹள்ரத் அபூபக்கர் ஸித்திக் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் எவரேனும் அடியானிடத்தில் பாவம் வெளிப்பட்டால் அவர் உளூசெய்து (இரண்டு ரக்அத்) தொழுது அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடினால் அல்லாஹ் அவரின் பாவத்தை மன்னிப்பான்.பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த வசனத்தை ஓதினார்கள் அதனின் பொருள் இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் மானக்கேடான காரியத்தை செய்துவிட்டால்,அல்லது தமக்குதாமே அநியாயம் செய்து கொண்டால்,உடனே அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூர்ந்து,தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்புத் தேடிக்கொள்வார்கள்;
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் அறிந்து கொண்டே தாம் செய்திட்ட (பாவத்)தின் மீது நிலைத்திருக்கமாட்டார்கள்.
(ஆல இம்ரான் 135)

(ஆதாரம்: ஜாமிஉத்திர்மிதி 1/92,பாடம்:باب مَا جاء فی الصلوة عند التوبة ,சுனன் இப்னு மாஜா 1/100,பாடம்:باب مَا جاء فی ان الصلوة كفارة)

பிரயாண தொழுகை

பிரயாணம் புறப்படும் நேரத்திலும் திரும்பி வரும் போது இரண்டு ரக்அத் தொழுவது முஸ்தஹப்.

عن المطعم ابن المقدام رضي الله عنه قال قال رسول الله ﷺ مَا خلف عبد علی اهله افضل من الركعتين يركعهما عندهم حين يريد السفر

ஹள்ரத் முத்இம் இப்னு மிக்தாம் ( ரளி) அவர்கள்,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதை கூறுகிறார்கள்; அடியான் பிரயாணத்தை நாடும் பொழுது இரண்டு ரக்அத் தொழுவதானது அவனின் குடும்பத்தாரிடம் அதனை விட சிறந்த ஒன்றை விட்டு செல்லவில்லை.

(ஆதாரம்:முஸன்னஃப் இப்னு அபீஷைபா 3/552,553, الرجل يريد السفر الخ இலக்கம்:4914)

عن علي رضي الله عنه قال اذا خرجت فصل ركعتين

அலி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; பிரயாணத்திற்கு புறப்படும் பொழுது இரண்டு ரக்அத் தொழுங்கள்

(ஆதாரம்:முஸன்னஃப் இப்னு அபீஷைபா 3/553,الرجل يريد السفر ,இலக்கம்:4915)

عن ابن مسعود رضي الله عنه قال جاء رجل الی النبي ﷺ فقال يا رسول الله اني اريد ان اخرج الی البحرين فی تجارة

فقال رسول الله ﷺ صل ركعتين


இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து கூறினார் யாரசூலல்லாஹ் ﷺ வியாபாரத்திற்காக பஹ்ரைன் செல்ல நாடுகிறேன்.அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் இரண்டு தொழுது கொள்ளுங்கள்

(ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித் 2/572,பாடம்:باب الصلوة اذا اراد سفرا,  ஹதீஸ் இலக்கம்:3684)

عن كعب بن مالك رضي الله عنه انّ رسول الله ﷺ كان لا يقدم من سفر الا نهارا فی الضحی فاذا قدم بدء بالمسجد فصلی فيه  ركعتين ثم جلس فيه

கஃப் இப்னு மாலிக் (ரளி) அவர்கள் கூறியதாவது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கேனும் பயணம் சென்றால் முற்பகல் நேரத்தில்தான் திரும்புவார்கள்.அவ்வாறு திரும்பியதும் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத் தொழுதுவிட்டுப் பிறகு பள்ளிவாசலில் அமருவார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/248,பாடம்:باب استحباب ركعتين فی المسجد لمن قدم من سفر )

عن ابی هريرة رضي الله عنه عن النبي ﷺ قال اذا دخلت منزلك فصل ركعتين تمنعانك مدخل السوء و اذا خرجت فصل ركعتين تمنعانك مخرج السوء

ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்;

  உனது வீட்டில் நுழைந்தால் இரண்டு ரக்அத் தொழுது கொள். கெடுதி நுழைவதை விட்டும் உன்னை அவை தடுக்கும்.
பயணம் புறப்பட்டால் இரண்டு ரக்அத் தொழுது கொள்
வெளியின் கெடுதியை விட்டு உன்னை அவை தடுக்கும்.

(ஆதாரம் மஜ்மஉஜ்ஜவாயித் 2/572,பாடம்:باب الصلوة اذا دخل منزله ,ஹதீஸ் இலக்கம்:3686)

மழைத்தொழுகை

மழை பெய்யவில்லையெனில் இரண்டு ரக்அத் மழைத்தொழுகை தொழவேண்டும்.சில சமயங்களில் துஆ மட்டும் கேட்கலாம்.ஹதீஸ்களில் இரண்டு வழிமுறைகளும் வந்துள்ளது.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ  ، قَالَ : أَصَابَتِ النَّاسَ سَنَةٌ عَلَى عَهْدِ  النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَبَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فِي يَوْمِ جُمُعَةٍ قَامَ أَعْرَابِيٌّ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، هَلَكَ الْمَالُ وَجَاعَ الْعِيَالُ فَادْعُ اللَّهَ لَنَا ، "  فَرَفَعَ يَدَيْهِ وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً فَوَالَّذِي  نَفْسِي بِيَدِهِ مَا وَضَعَهَا حَتَّى ثَارَ السَّحَابُ أَمْثَالَ الْجِبَالِ ، ثُمَّ لَمْ يَنْزِلْ عَنْ مِنْبَرِهِ حَتَّى رَأَيْتُ الْمَطَرَ يَتَحَادَرُ عَلَى لِحْيَتِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَمُطِرْنَا يَوْمَنَا ذَلِكَ وَمِنَ الْغَدِ وَبَعْدَ الْغَدِ وَالَّذِي يَلِيهِ حَتَّى الْجُمُعَةِ الْأُخْرَى وَقَامَ ذَلِكَ الْأَعْرَابِيُّ أَوْ قَالَ غَيْرُهُ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، تَهَدَّمَ الْبِنَاءُ وَغَرِقَ الْمَالُ فَادْعُ اللَّهَ لَنَا ، فَرَفَعَ يَدَيْهِ فَقَالَ : اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا ، فَمَا يُشِيرُ بِيَدِهِ إِلَى نَاحِيَةٍ مِنَ السَّحَابِ إِلَّا انْفَرَجَتْ وَصَارَتْ الْمَدِينَةُ مِثْلَ الْجَوْبَةِ وَسَالَ الْوَادِي قَنَاةُ شَهْرًا وَلَمْ يَجِئْ أَحَدٌ مِنْ نَاحِيَةٍ إِلَّا حَدَّثَ بِالْجَوْدِ "

ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, ‘ தாருல்களா’ என்ற வாசல் வழியாக ஒருவர் பள்ளியினுள்; வந்தார். நின்;றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்து விட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தி, ‘ இறைவா எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! வானத்தில் திரண்ட மேகத்தையோ, பிரிந்து கிடக்கும் மேகங்களையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) ஸல்ஃ எனும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது). அப்போது அம்மலைக் குப் பின்புற மிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக 6 நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்க வில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்தும் போது, ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்துவிட்டன, பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே, மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, இறைவா! எங்கள் சுற்றுப் புறங் களில் (இம் மழையைப் பொழியச் செய்வா யாக!), எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற் குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகிய வற்றின் மீது (இம் மழையைப் பொழியச் செய்வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/138,தலைப்பு:باب الاستسقاء علی المنبر ,ஸஹீஹ் முஸ்லிம் 1/293,பாடம்:كتاب صلوة الاستسقاء )




عن عباد ابن تميم عن عمه (عبد الله بن زيد ) قال خرج النبي ﷺ الی المصلی يستسقي و استقبل القبلة فصلی ركعتين و قلب ردائه

அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மளைத்தொழுகைக்காக ஈத்காஹ் திடலுக்கு செல்வார்கள்.கிப்லாவின் பக்கம் முன்னோக்குவார்கள்.இரண்டு ரக்அத் தொழுகை நடத்தினார்கள்.தனது போர்வையை புரட்டிப்போடுவார்கள்.(கருத்து:வலது புறத்தை இடது தோள்புஜத்தின் மீதும் இடது புறத்தை வலது தோள்புஜத்தின் மீது மாற்றுவார்கள்)

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/140,பாடம்:باب الاستسقاء فی المصلی, ஸஹீஹ் முஸ்லிம் 1/293,صلوة الاستسقاء)