Friday, January 18, 2019

குர்ஆன்,ஹதீஸ் ஒளியில் ஹனஃபி தொழுகை முறை


ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்
தொடர் :3


இமாம் 'வலல்லாள்ளீன்' கூறும் போது பின்பற்றி தொழுபவர்,
ஆமீன் கூறவேண்டும்.

عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الإمام ليؤتم به فإذا كبر فكبروا وإذا قرأ فأنصتوا وإذا قال ( غير المغضوب عليهم ولا الضالين ) فقولوا آمين

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இமாம் 'வலல்லாள்ளீன்'  கூறினால் மற்றொரு அறிவிப்பில் ஓதுபவர் 'வலல்லாள்ளீன்' கூறினால்,நீங்கள் ஆமீன் கூறுங்கள்.(ஸஹீஹ் புகாரி)

عن أبي هريرة رضي الله عنه
أن رسول الله صلى الله عليه وسلم قال: (إذا قال الإمام: {غير المغضوب عليهم ولا الضالين}. فقالوا آمين،

அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; இமாம் ஆமீன் கூறினால்,நீங்களும் ஆமீன் கூறுங்கள்.(ஸஹீஹ் புகாரி)

இமாம்,பின்தொடர்பவர் ,தனித்து தொழுபவர் ஆமீன் மெதுவாக சொல்வது

عن وائل بن حجر رضي الله عنه قال : كان رسول الله صلى الله عليه وسلم : إذا قرأ ( وَلَا الضَّالِّينَ ) ، قال : آمين ، وخفض بها صوته

வாயில் இப்னு ஹுஜ்ர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதேன்.அண்ணலார் 'வலல்ளாள்ளீன்' கூறும் பொழுது ஆமீன் என்பதை மெதுவாக கூறினார்கள்.

(முஸ்னத் அபூதாவூத் தயாலிஸி,முஸ்னத் அஹ்மத்,அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி)

عن أبي  وائل  قال : كان عمر وعلى رضى الله عنهما لا يجهران ( بسم الله الرحمن الرحيم ) ولا بالتعوذ ، ولا بالتأمين

அபூவாயில் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
உமர் (ரளி), அலி (ரளி) இருவரும்  பிஸ்மில்லாஹ்,அஊது,ஆமீன் சப்தமிட்டு ஓதமாட்டார்கள். 
(ஷர்ஹு மஆனில் ஆஸார்)

خمس يخفين : سبحانك اللهم وبحمدك ، والتعوذ ، و بسم الله الرحمن الرحيم ، وآمين ، واللهم ربنا لك الحمد "

ஹஜ்ரத் இப்ராஹிம் நகயி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ஐந்து காரியங்களை மெதுவாக கூறவேண்டும்.
ஸுப்கானல்லாஹும்ம,அஊது,
பிஸ்மில்லாஹ்,ஆமீன்,
அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து(ஆதாரம்:முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக்)

ருகூஉ செய்வது

وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ
அல்லாஹ் அருளுகிறான்:ருகூஉ செய்பவர்களுடன் சேர்ந்து ருகூஉ செய்யுங்கள்.(பகரா)

عن أبي هريرة - رضي الله عنه  قال : " إذا قمت إلى الصلاة فكبر ، ثم اقرأ ما تيسر معك من القرآن ، ثم اركع حتى تطمئن راكعا

ஹஜ்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவருக்கு தொழுகையை கற்றுக்கொடுத்தவாறு கூறினார்கள்:தொழுகைக்கு நின்றால்,தக்பீர் கூறுங்கள்.பிறகு குர்ஆனில் உம்மால் முடிந்தளவு ஓதுங்கள். பிறகு நிதானமாக ருகூஉ செய்யுங்கள் (ஆதாரம்:ஸஹுஹுல் புகாரி,முஸ்லிம்)

தக்பீர் கூறியவாறு  ருகூஉ செய்வது

يَقُولُ : " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ ، يُكَبِّرُ حِينَ يَقُومُ ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ

அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம்  அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது நின்ற நிலையில் தக்பீர் கூறுவார்கள்.பிறகு ருகூவிற்கு செல்லும் போது தக்பீர் கூறுவார்கள் (ஆதாரம்:புகாரி,முஸ்லிம்)

ருகூஉ செய்யும் முறை

يا بني إذا ركعت فضع كفيك على ركبتيك ، وأفرج بين أصابعك ، وارفع يديك عن جنبيك

அனஸ் (ரளி) அவர்கள் கூறினார்கள் :நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்;மகனே நீர் ருகூஉ செய்யும் போது உனது இரு உள்ளங்கைகளையும் உனது இரு மூட்டுக்கலின் மீது வைத்துவிடு. மேலும்,உனது விரல்களை விரித்து வைத்துவிடு.உனது விலாப்புறத்தை விட்டும்,உனது இருகைகளையும் உயர்த்திக் கொள். (ஆதாரம் :முஃஜமுல் அவ்ஸத் லித்தப்ரானி,அல்முஃஜமுஸ்ஸஙீர் லித்தப்ரானி)

إن رسول الله صلى الله عليه وسلم ركع فوضع يديه على ركبتيه كأنه قابض عليهما ووتر يديه فنحاهما عن جنبيه

அபூஹுமைத் (ரளி) அவர்கள் அவர்கள் கூறுகிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூஉ செய்யும் போது இரு கைகளையும் முட்டுக்கலின் மீது வைப்பார்கள்.இரண்டையும் அழுத்தமாக பிடித்ததை போன்று.மேலும் இருகைகளையும் விரித்துவைத்திருப்பார்கள்.விலாப்புறத்தை விட்டு விலகி வைப்பார்கள்.

: " فَإِذَا رَكَعْتَ ، فَضَعْ رَاحَتَيْكَ عَلَى رُكْبَتَيْكَ ، ثُمَّ فَرِّجْ بَيْنَ أَصَابِعِكَ ، ثُمَّ أَمْكُثْ حَتَّى يَأْخُذَ كُلُّ عُضْوٍ مَأْخَذَهُ

மற்றோர் அறிவிப்பில் 
உமர் (ரளி) அவர்கள் கூறினார்கள்:ருகூஉ செய்யும் போது உனது இரு மூட்டுக்களின் மீது உள்ளங்களை வைத்துக் கொள்.பிறகு உனது விரல்களை விரித்து வைத்து ஒவ்வொரு உறுப்பும் அதனின் இடத்தை அடையும் வரை நிதானித்து இரு. (ஆதாரம்:திர்மிதி,ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

ருகூவில் தஸ்பீஹ்

عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ ، يَقُولُ : لَمَّا نَزَلَتْ فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " اجْعَلُوهَا فِي رُكُوعِكُمْ " ، فَلَمَّا نَزَلَتْ سَبِّحْ اسْمَ رَبِّكَ الْأَعْلَى قَالَ : " اجْعَلُوهَا فِي سُجُودِكُمْ " .

உக்பதுப்னு ஆமிர் (ரளி) அவர்கள் கூறினார்கள்:இறைவசனம் இறங்கிய பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;அதனை ருகூவில் ஓதுங்கள் பிறகு இறைவசனம் இறங்கிய பொழுது அதனை ருகூவில் ஓதுங்கள் என்றார்கள்.(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத்,ஸுனன் இப்னுமாஜா)

فكان يقول في ركوعه : سبحان ربي العظيم وفي سجوده سبحان ربي الأعلى

ஹுதைஃபா ரளி அவர்கள் கூறினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதேன்.அண்ணலார் அவர்கள் ருகூவில் ஸுப்ஹான ரப்பியல் அளீம் ஓதுவார்.ஸஜ்தாவில் ஸுப்ஹான ரப்பியல் அஃலா ஓதுவார்.(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத்,ஜாமிஉத்திர்மிதி)

ருகூவின் தஸ்பீஹ்,தஸ்பீஹின் எண்ணிக்கை

روي عن ابن مسعود رضي الله عنه : أن النبي صلى الله عليه وسلم قال { إذا ركع أحدكم فقال : سبحان ربي العظيم ثلاثا فقد تم ركوعه

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்;உங்களில் ஒருவர் ருகூஉ செய்யும் பொழுது அவரின் ருகூவில் ஸுப்ஹான ரப்பியல் அளீம் மூன்று கூறுவதால் அவரின் ருகூவானது முழுமை பெற்றுவிட்டது.இது குறைந்த பட்சமாகும்.(ஆதாரம்:ஜாமிஉத்திர்மிதி)

இமாம் தஸ்பீஹ், முக்ததி (பின்பற்றுபவர்) ஹம்து சொல்வது


أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد

அபூஹுரைரா ரளி அவர்கள் கூறினார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்;இமாம் 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' என்று சொல்லும் போது நீங்கள் 'அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து' கூறுங்கள் (ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம்,ஸஹீஹுல் புகாரி)

தனியாக தொழுபவர் இரண்டும் (ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்,ரப்பனா லகல்)  கூறுவது



عن أبي هريرة رضي الله عنه قال { كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حين يقوم ، ثم يكبر حين يركع ، [ ص: 244 ] ثم يقول : سمع الله لمن حمده ، حين يرفع صلبه من الركعة ، ثم يقول وهو قائم : ربنا ولك الحمد

அபூஹுரைரா அவர்கள் கூறினார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் நிலை நிற்கும் போது தக்பீர் கூறுவார்கள்.ருகூஉ செய்யும் போது தக்பீர் கூறுவார்கள்.பிறகு ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' கூறுவார்கள்.பிறகு நிலைக்கு வந்த பிறகு ரப்பனா லகல் ஹம்து' கூறுவார்கள் 
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி)

நிலை நிற்றல் (கவ்மா)

ثم اركع حتى تطمئن راكعا ثم ارفع حتى تعتدل قائما

ஹஜ்ரத் அபூஹுரைரா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவருக்கு தொழுகையை கற்றுக் கொடுத்தவாறு நவின்றார்கள்;ருகூஉ செய்யுங்கள் நிதானமாக செய்யுங்கள் பிறகு நிதானமாக (ருகூவிலிருந்து) நிலையில்  எழுந்திருங்கள் (ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி,ஸஹீஹ் முஸ்லிம்)

நிலைநிற்றல் (கவ்மா) முறை


وإذا رفع رأسه استوى قائما ، حتى يعود كل فقار إلى مكانه

அபூஹுமைத் ஸாயிதி ரளி அவர்கள் கூறுகிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ருகூவிலிருந்து) தலையை உயர்த்தி நேராக நிலைக்கு திரும்புவார்கள்.ஒவ்வொரு மூட்டும் அதனுடைய இடத்தை அடையும் வரை.(ஆதாரம்:புகாரி)

وكان إذا رفع رأسه من الركوع لم يسجد حتى يستوي قائما

ஆயிஷா ரளி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையை குறித்து விளக்கியவாறு கூறுகிறார்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி நேராக நிற்காதவரை ஸஜ்தா செய்வதில்லை.(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம்)

நிலை நிற்றலில் (கவ்மாவில்) ஓதும் துஆ


قال كنا يوما نصلي وراء النبي صلى الله عليه وسلم فلما رفع رأسه من الركعة قال سمع الله لمن حمده قال رجل وراءه ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه

ரிஃபாஅதுப்னு ராபியி ஜுரகி அவர்கள் கூறுகிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் நின்று தொழுது கொண்டிருந்தேன்.எப்பொழுது அண்ணலார் தலையை உயர்த்தினார்களோ, 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' கூறினார்கள்.ஒருவர் அவருக்கு பின்னால் 'ரப்பனா லகல் ஹம்து ஹம்தன் கஸீரா தய்யிபன் முபாரகன் ஃபீஹி' என்று ஓதினார்.(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி,அபூதாவூத்)

ருகூவிற்கு செல்லும் போது எழும் போது கையை உயர்த்துவது கூடாது


قَدْ أَفْلَحَ ٱلْمُؤْمِنُونَ   ٱلَّذِينَ هُمْ فِي صَلاَتِهِمْ خَاشِعُونَ

அல்லாஹுதஆலா கூறுகிறான் திட்டமாக முஃமீன்கள் வெற்றி பெற்று விட்டனர்.அவர்கள் தொழுகையில் உள்ளச்சத்துடன் இருப்பார்கள்.

مخبتون متواضعون لا يلتفتون يميناً ولا شمالاً ولا يرفعون أيديهم في الصلاة

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் இந்த வசனத்தின் விரிவுரையில் கூறுகிறார்கள்: உள்ளச்சம் என்பதை கொண்டு கருத்து அடக்கம்,இயலாமை உடன் நிற்பதாகும்.வலது,இடது பார்க்க கூடாது.கைகளை தொழுகையில் உயர்த்த மாட்டார்கள்.
(தப்ஸீர் இப்னு அப்பாஸ்)

خاشعون الذين لايرفعون ايديهم فى الصلوة الافى التكبيرة الاولى

இமாம் ஹஸன் பஸரி ரஹ் அவர்கள் இந்த வசனத்தின் விரிவுரையில் கூறுகிறார்கள்:உள்ளச்சம் மிக்கவர்கள் என்பதன் கருத்து தக்பீர் தஹ்ரீமா தவிர தொழுகையில் கை உயர்த்த மாட்டார்கள்.

عبد الله بن مسعود ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه إلا في أول مرة قال

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் கூறுகிறார்கள்:நான் உங்களுக்கு நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையை அறிவிக்க வேண்டாமா? அறிவிப்பாளர் கூறுகிறார்;இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் (தொழுகைக்கு) நின்றார்கள். முதல் தடவை இரு கைகளை உயர்த்தினார்கள்.பிறகு கைகளை உயர்த்தவில்லை.(ஆதாரம்:ஸுனன் நஸாயி,அபூதாவூத்,திர்மிதி)


فقال : صليت خلف رسول الله صلى الله عليه وسلم وخلف أبي بكر وعمر فلم يرفعوا أيديهم إلا في التكبيرة التي تفتتح بها الصلاة

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளி அவர்கள் கூறினார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,அபூபக்கர் ரளி, உமர் ரளி அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதுள்ளேன்.அனைவரும் தொழுகையின் ஆரம்பத்திலே தவிர கையை உயர்த்தவில்லை.(ஆதாரம்:முஃஜமு ஷைக் லி அபிபக்கர் இஸ்மாயீலி,முஸ்னத் அபி யஃலா அல்மூஸிலி)


عن علي رضي الله عنه قال كان رسول الله ﷺ اذا قام الی الصلوة المكتوبة كبر و رفع يديه حذو منكبيه و فی رواية انه كان يرفع يديه فی اوّلِ الصَلاَةِ ثُمَّ لا يعود 
அலி ரளி அவர்கள் கூறினார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடமையான தொழுகைகளுக்கு நிற்கும் போது,தக்பீர் கூறியவாறு இரு கைகளையும் தோள்புஜத்திற்கு நேராக உயர்த்துவார்கள். மற்றொரு அறிவிப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையின் ஆரம்பத்தில் தவிர கையை உயர்த்த மாட்டார்கள் என்று வந்துள்ளது.(ஆதாரம்:முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக்,கிதாபுல் இலல் லித்தாரகுத்னி)

قال رأيت رسول الله صلى الله عليه وسلم إذا افتتح الصلاة رفع يديه حتیٰ يحاذي  منكبيه لا يعود برفعهما حتیٰ يسلم من صلوته

பராஇப்னு ஆஜிப் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போது,இரு கைகளையும் தோள்புஜத்திற்கு நேராக இருக்கும் அளவிற்கு உயர்த்துவார்கள்.தொழுகைக்கு ஸலாம் கொடுக்கும் வரை இரு கைகளையும் (பிறகு) உயர்த்தமாட்டார்கள். (ஆதாரம்:முஸ்னத் அபீஹனீஃபா பி ரிவாயதி அபி நயீம்,ஸுனன் அபூதாவூத்)

عن ابن عمر قال رايت رسول الله اذا افتتح الصلوة رفع يديه حذو منكبيه واذا اراد ان يركع وبعد ما يرفع رأسه من الركوع  فلايرفع ولا بين السجدتين

இப்னு உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் பார்த்தேன்.அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போது இரு கைகளை உயர்த்துவார்கள்.ருகூவிற்கு செல்லும் போது,எழும் போதும் 
இரு ஸஜ்தாவிற்கு மத்தியில் கைகளை உயர்த்த மாட்டார்கள்.(ஆதாரம்:முஸ்னத் அல்ஹுமைதி,முஸ்னத் அபி அவானா)

كنا مع رسول الله صلي الله عليه وسلم بمكة نرفع ايدينا في بدء الصلوة وفي داخل الصلوة عند الركوع فلما هاجر النبي صلي الله عليه وسلم الي المدينة ترك رفع يدين في داخل الصلوة عند الركوع وثبت علي رفع يدين في بدء الصلوة ۔۔۔ توفي

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் மக்காவில் இருந்த போது,தொழுகையின் ஆரம்பத்திலும்,ருகூஉ செய்யும் போதும் இரு கைகளை உயர்த்தி கொண்டு இருந்தோம்.அன்னார் அவர்கள் மதீனா ஹிஜ்ரத் செய்த வந்த பிறகு ருகூவில் கைகளை உயத்துவதை விட்டுவிட்டார்கள்.தொழுகையின் ஆரம்பத்தில் கைகளை உயர்த்துவதை மட்டும்  கடைப்பிடித்தார்கள்.(ஆதாரம்:அஹ்பாருல் ஃபுகஹா வல் முஹத்திஸீன் லில்கீரவானி)

தக்பீர் கூறியவாறு ஸஜ்தா செய்வது

أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

அல்லாஹுதஆலா கூறுகிறான்:ஈமான் கொண்டவர்களே! ருகூஉ செய்யுங்கள்.ஸுஜுது செய்யுங்கள்.உங்களின் இறைவனை வணங்குங்கள்.நன்மை செய்யுங்கள்.நீங்கள் வெற்றிபெறுவீர்கள்.(ஹஜ்)


عن ابي هريرة قال كان رسول الله صلي الله اذا قام الي الصلوة  ، يُكَبِّرُ حِينَ يَقُومُ ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ...........ثُمَّ يُكَبِّرُ حِينَ يَهْوِي سَاجِدًا

அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது, நிற்கும் நிலையில் தக்பீர் கூறுவார்கள்.பிறகு ஸஜ்தாவிற்கு குனியும் போதும் தக்பீர் கூறுவார்கள்.(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம்)

أن أبا هريرة كان يكبر في كل صلاة من المكتوبة وغيرها في رمضان وغيره.................. ثم يكبر حين يسجد

அபூஸலமா அப்துர் ரஹ்மான்  அவர்கள் அறிவிக்கிறார்கள்:அபூஹுரைரா (ரளி) அவர்கள் கடமையான, கடமையில்லாத தொழுகையில் ரமளான்,ரமளான் அல்லாத தொழுகையில் தக்பீர் கூறுவார்கள்.பிறகு தக்பீர் கூறியவாறு ஸஜ்தா செய்வார்கள்.(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி)

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Friday, January 11, 2019

ஹிதாயா நூல் குறித்த விளக்கம்

பிக்ஹ் நூல்களில் தனிச்சிறப்பு  பெற்று விளங்கும் நூல் மதரஸா பாடத்திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நூல் ஹிதாயா 
ஹிதாயா நூல் குறித்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளும் பதில்களும் 

(1)ஹிதாயாவில் பொய்யான ஹதீஸ்களும் பலகீனமான ஹதீஸ்களும் உண்டு.இதே போன்று மற்ற பிக்ஹ் நூல்களிலும் உண்டு.

(2)ஹிதாயாவில் கற்பனை சட்டங்கள் இருக்கிறது.
(3)குர்ஆன்,ஹதீஸிற்கு மாற்றமான சட்டங்களும் உண்டு.

(4)ஹிதாயாவில் அறிவிப்பாளர் தொடர்கள் இல்லை.

(5)ஹனபி உலமாக்கள் கூட அந்நூலின் ஆசிரியர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது குறித்து ஐந்து தொடர்களாக பதில் அளித்திருந்தோம்.அதனை ஒட்டு மொத்தமாக pdf file வாசிக்க பின்வரும் லிங்க் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்

https://drive.google.com/file/d/1BAERTMRB3rmVI9jZ9g1-E6BLjUA3P8T9/view?usp=sharing

Wednesday, January 2, 2019

குர்ஆன்,ஹதீஸ் ஒளியில் ஹனஃபி தொழுகை முறை



ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன் ஹதீஸின் ஒளியில்
தொடர் :2


தொப்புளுக்கு கீழே கைகட்டுதல்


ஹஜ்ரத் வாயில் இப்னு ஹுஜ்ர் (ரளி) கூறுகிறார்கள் :

رايت النبي صلي الله يضع يمينه علي شماله في الصلوة تحت السرة நான் பார்த்தேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் வலது கையை இடது கையின் மீது தொப்புளுக்கு கீழ்  வைத்து கட்டினார்கள்.
(ஆதாரம்:முஸன்னபஃப் இப்னு அபிஷைபா)

عن علي رضي الله من السنة وضع اليمين على الشمال تحت السرة
ஹஜ்ரத் அலி (ரளி) அவர்கள் கூறினார்கள்: தொழுகையில் தொப்புளுக்கு கீழே   வலது கையை இடது கையின் மீது வைப்பது சுன்னத்திலிருந்து உள்ளதாகும்.(ஆதாரம்:முஸ்னத் அஹ்மத், முஸன்னஃப் இப்னு அபி ஷைபா, தாரகுத்னி,சுனன் பைஹகி)

عن أبي هُرَيْرَةَ قال: وَضَعَ الْكَفَّ على الْكَفِّ في الصَّلَاةِ تَحْتَ السُّرَّةِ
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:தொழுகையில் தொப்புளுக்கு கீழ் கையின் மீது கை வைக்கப்படும் (கட்டப்படும்).(ஆதாரம்:அபூதாவூத்)

ஸுப்கானல்லாஹும்ம வபிஹம்திக என்ற ஸனா ஓதுவது

நிலை நிற்கும் போது உமது இறைவனின் புகழைக்கொண்டு தஸ்பீஹ் செய்வீராக! (தூர்)

حدثنا ابن حُميد, قال: ثنا ابن المبارك, عن جُوَيبر, عن الضحاك ( وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ )  قال: إذا قام إلى الصلاة قال: سبحانك اللهمّ وبحمدك, وتبارك اسمك ولا إله غيرك.

ளஹ்ஹாக் தாபியி அவர்கள் வசனத்தின் விரிவுரையில் கூறுகிறார்கள்:தொழுகையில் நிலை நிற்கும் போது سبحانك اللهمّ وبحمدك, وتبارك اسمك ولا إله غيرك. ஓதவேண்டும்.
(ஆதாரம்:ஸுனன் ஸயீத் இப்னு மன்ஸுர்,முஸன்னஃப் இப்னு அபிஷைபா,இப்னு ஜரீர்,இப்னுல் முன்திர்)

قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة بالليل كبر ثم يقول سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك

ஹஜ்ரத் அபூஸயீத் குத்ரி ரளி அவர்கள் கூறுகிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது தக்பீர் கூறுவார்கள்.பிறகு இந்த துஆவை ஓதுவார்கள் (ஆதாரம்:அபூதாவூத்,திர்மிதி,நஸாயி,இப்னுமாஜா,மிஷ்காத்,முஸ்னத் அஹ்மத்)

عَنْ عَبْدَةَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ صلى الله عليه وسلم كَانَ يَجْهَرُ بِهؤُلاَءِ الْكَلِمَاتِ يَقُولُ: "سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ. تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ. وَلاَ إِلهَ غَيْرُكَ". رواه مسلم.

உமர் ரளி அவர்கள் தொழுகையில் நிலை நிற்கும் போது  இந்த கலிமாக்களை سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ. تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ. وَلاَ إِلهَ غَيْرُكَ"
சப்தமிட்டு ஓதுவார்கள் (ஆதாரம்:முஸ்லிம்)

ஸனாவிற்கு பிறகு அவூது ஓதுவது

குர்ஆன் ஓதும் பொழுது அல்லாஹ்விடம் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேடுங்கள் (அந்நம்ல்)

قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة بالليل كبر ثم يقول سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم
ஹஜ்ரத் அபூஸயீத் குத்ரி (ரளி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்கு இரவில் நிற்கும் போது தக்பீர் கூறுவார்.பிறகு سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ. تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ. وَلاَ إِلهَ غَيْرُكَ" ஓதுவார்கள்.மேலும்
அவூது பில்லாஹ் ஸமீஉல் அலீமி மினஷ்ஷைதானிர் ரஜீம்.(ஆதாரம்:அபூதாவூத்,திர்மிதி,
நஸாயி,இப்னு மாஜா,முஸ்னத் அஹ்மத்,பைஹகி)



أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم
அபூஸயீத் அல்குத்ரி அவர்கள் கூறுகிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிராஅத்திற்கு முன்பாக அவூது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜீம் ஓதுவார்கள் (ஆதாரம்:முஸன்னப் அப்துர் ரஜ்ஜாக்)

பிஸ்மில்லாஹ் ஓதுவது

-قال نعيم المجمر: صليت وراء أبي هريرة فقرأ بسم الله الرحمن الرحيم ثم قرأ بأم القرآن-الحديث وفيه-ويقول إذا سلم: والذي نفسي بيده إني لأشبهكم صلاة برسول الله-صلى الله عليه وسلم
ஹஜ்ரத் நயீம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் அபூஹுரைரா (ரளி) அவர்களுக்கு பின்னால் தொழுதேன்.அன்னார் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஓதினார்.பிறகு பாத்திஹா சூரா ஓதினார்.ஸலாம் கொடுத்த பிறகு கூறினார் எனது உயிர் எவன் கைவசத்தில் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நான் நபி ஸல்லல்லாஹு அவர்கள் தொழுது காட்டியது போன்று தொழுது காட்டினேன்.(ஆதாரம்:நஸாயி)

وعن علي رضي الله عنه كان إذا افتتح السورة في الصلاة يقرأ : بسم الله الرحمن الرحيم
ஹஜ்ரத் அலி (ரளி) அவர்கள் கூறினார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஓதிக்கொண்டு இருந்தார்கள்.(ஆதாரம்:தாரகுத்னி)

அவூது,பிஸ்மில்லா மெதுவாக ஓதுவது

عن أنس بن مالك رضي الله عنه { أن النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر رضي الله عنهما : كانوا يستفتحون الصلاة ب { الحمد لله رب العالمين } } 
ஹஜ்ரத் அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,அபூபக்கர் (ரளி) அவர்கள்,உமர் (ரளி) அவர்கள் தொழுகையை  அல்ஹம்துலில்லாஹ் உடன் தொடங்குவார்கள்.(ஆதாரம்:புகாரி)

وفي رواية " صليت مع أبي بكر وعمر وعثمان ، فلم أسمع أحدا منهم يقرأ بسم الله الرحمن الرحيم "
ஹஜ்ரத் அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,அபூபக்கர் (ரளி) அவர்கள்,உமர் (ரளி) அவர்கள்,உஸ்மான் (ரளி) அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதுள்ளேன்.பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அவர்களில் ஒருவர் ஓதியதையும் நான் செவியுற்றதில்லை.(ஆதாரம்:புகாரி)

இந்த ஹதீஸ்களின் கருத்து என்னவெனில் பிஸ்மில்லா சப்தமிட்டு ஓதவில்லை. மாறாக, மெதுவாக ஓதவேண்டும் என்பதாகும்.

لمسلم { صليت خلف النبي صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان فكانوا يستفتحون ب الحمد لله رب العالمين ، لا يذكرون بسم الله الرحمن الرحيم في أول قراءة ولا في آخرها }
அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்ஹம்துலில்லாஹ் வை கொண்டு கிராஅத்தை அவர்கள் ஆரம்பித்தார்கள்.கிராஅத்தின் ஆரம்பத்தில்,இறுதியில் பிஸ்மில்லாஹ் ஓதமாட்டார்கள்.(ஆதாரம்:முஸ்லிம்)

ஹஜ்ரத் அனஸ் (ரளி) அவர்களின் ஹதீஸானது முஸ்னத் அஹ்மத்,ஸஹீஹ் இப்னு ஹிப்பான், தாரகுத்னியில் வரும் அறிவிப்பு فلم أسمع أحدا منهم يقرأ بسم الله الرحمن الرحيم பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் சப்தமிட்டு ஓதமாட்டார்கள்.

அனஸ் ரளி அவர்களின் மற்றொரு அறிவிப்பு
صليت مع أبي بكر وعمر وعثمان ، فلم أسمع أحدا منهم يقرأ بسم الله الرحمن الرحيم "
அபூபக்கர் (ரளி),உமர் (ரளி) ,உஸ்மான் (ரளி) அவர்களில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சப்தமாக
ஒருவர் ஓதியதையும் நான் செவியுற்றதில்லை. (ஆதாரம்:நஸாயி,இப்னு ஹிப்பான்,தஹாவி)

عن ابن عبد الله بن مغفل قال سمعني أبي وأنا في الصلاة أقول بسم الله الرحمن الرحيم فقال لي أي بني محدث إياك والحدث قال ولم أر أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم كان أبغض إليه الحدث في الإسلام يعني منه قال وقد صليت مع النبي صلى الله عليه وسلم ومع أبي بكر ومع عمر ومع عثمان فلم أسمع أحدا منهم يقولها فلا تقلها إذا أنت صليت فقل الحمد لله رب العالمين

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு முஙஃப்பல் நான் பிஸ்மில்லாஹ்  (சப்தமிட்டு) சொல்வதை கேட்ட எனது தந்தை கூறினார் மகனே! நூதனத்தை தவிர்ந்து கொள்! மேலும் கூறினார்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் எவரும் பிஸ்மில்லாஹ் சப்தமிட்டு ஓதியதை பார்க்கவில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,அபூபக்கர் (ரளி) அவர்கள்,உமர் (ரளி) அவர்கள்,உஸ்மான் (ரளி) அவர்களுக்கு பின்னால் நின்று நான்  தொழுதுள்ளேன்.அவர்களில் ஒருவரும் பிஸ்மில்லாஹ் (சப்தமிட்டு) ஓதியதை செவியுற்றதில்லை.(ஆதாரம்:திர்மிதி,நஸாயி,இப்னு மாஜா,தஹாவி)

இமாம் தொழுகையில் பாத்திஹாவுடன் துணை சூராவும் ஓதுதல்

يقرأ في الأوليين من صلاة الظهر بفاتحة الكتاب وسورتين
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுஹர் தொழுகையில் முதல் இரு ரக்அத்துகளில் பாத்திஹா சூரா,துணை சூரா ஓதினார்கள்.(ஆதாரம்: புகாரி,முஸ்லிம்,மிஷ்காத்)

தனித்தொழுபவர் பாத்திஹா துணை சூரா ஓதுதல்

قال إذا قمت فتوجهت إلى القبلة فكبر ثم اقرأ بأم القرآن وبما شاء الله أن تقرأ
ஹஜ்ரத் ரிஃபாஆ (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிராமப்புற அரபிக்கு தொழுகையை கற்றுக்கொடுத்தார்கள் நீர்  தொழுகைக்கு நிற்கும் போது கிப்லாவை முன்னோக்கி தக்பீர் கூறு உம்முல் குர்ஆன் (பாத்திஹா) மற்றும் அல்லாஹ் நாடியளவு (துணை சூரா) ஓதுக (ஆதாரம்:அபூதாவூத்)




ثم اقرأ بأم القرآن ثم اقرأ بما شئت
'முஸ்னத் அஹ்மதில்'
வரும் அறிவிப்பு கிப்லாவை முன்னோக்கி, தக்பீர் கூறு! பிறகு உம்முல் குர்ஆன் பாத்திஹா ஓது பிறகு நீ நாடும் அளவு (துணை சூரா) ஓது

பாத்திஹாவிற்கு பிறகு துணை சூரா ஓதுவதற்கு முன்பாக பிஸ்மில்லாஹ் ஓதுவது

عن ابن عمر: أنه كان إذا افتتح الصلاة قرأ: بسم الله الرحمن الرحيم، فإذا فرغ من الحمد قرء بسم الله الرحمن الرحيم
இப்னு உமர் (ரளி) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் பொழுது பிஸ்மில்லாஹ் ஓதுவார்கள்.பாத்திஹா சூரா ஓதி முடித்த பின்பு பிஸ்மில்லாஹ் ஓதுவார்கள்.
(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபீஷைபா)

கிராஅத் ஓதும் சமயத்தில் முக்ததி பின்பற்றி தொழுபவர் அமைதியாக இருப்பது

அல்லாஹுதஆலா கூறுகிறான் குர்ஆன் ஓதப்படும் போது செவிதாழ்த்தி கேளுங்கள்; மேலும் மெளனமாக இருங்கள் நீங்கள் அருள்செய்யப்படுவீர்கள்.(அஃராப்)



كان رسول الله صلى الله عليه وسلم إذا قرأ في الصلاة أجابه من وراءه، إذا قال: بسم الله الرحمن الرحيم قالوا مثل ما يقول حتى تنقضي فاتحة الكتاب والسورة فلبث ما شاء الله أن يلبث ثم نزلت
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون فقرء و انصتوا
முஹம்மது இப்னு கஃப் குரளி (ரஹ்) கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் கிராஅத் ஓதும் பொழுது பின்னால் தொழுபவர்களும் அண்ணலாருடன் கிராஅத் ஓதுவார்கள்.அண்ணலார் பிஸ்மில்லாஹ் கூறினால், அவர்களும் அவ்வாறே கூறுவார்கள்.அத்துடன் பாத்திஹா சூரா,துணை சூரா ஓதும் வரை அவர்களும் ஓதுவார்கள்.அல்லாஹ் நாடியவரை இவ்விதமாக நடந்தது.குர்ஆன் ஓதப்பட்டால் என்ற வசனம்  இறங்கியது.பிறகு அண்ணலார் கிராஅத் ஓதுவார்கள்.ஸஹாபாக்கள் மெளனமாக இருந்தார்கள்.
(ஆதாரம்:தப்ஸீர் இப்னு அபி ஹாதிம் ராஜி)



قال العلامة ابن تيمية و قول الجمهور هو الصحيح فان الله سبحانه و تعالي قال و اذا قرا القران فاستمعوا له و انصتوا لعلكم ترحمون قال احمد اجمع الناس علي انها نزلت في الصلوة
அல்லாமா இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பெரும்பான்மையான அறிஞர்களின் சொல் சரியானது.ஏனெனில் அல்லாஹுதஆலா கூறுகிறான்: குர்ஆன் ஓதப்படும் போது செவிதாழ்த்தி கேளுங்கள் மேலும் மெளனமாக இருங்கள் நீங்கள் அருள்செய்யப்படுவீர்கள் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த வசனமானது தொழுகையின் விஷயத்தில் இறங்கியது.
(ஆதாரம்:ஃபதாவா இப்னு தைய்மிய்யா)

عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الإمام ليؤتم به فإذا كبر فكبروا وإذا قرأ فأنصتوا وإذا قال غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين
அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் இமாம் நியமிக்கப்படுவது அவரை பின்பற்றப்படுவதற்குதான்.அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள் அவர் ஓதினால் நீங்கள் மெளனத்தை கடைப்பிடியுங்கள் அவர் கூறினால் நீங்கள் ஆமீன் கூறுங்கள் (ஆதாரம்:ஸுனன் இப்னு மாஜா)

أن رجلا قرأ خلف رسول الله صلى الله ... قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الظهر أو العصر قال قال فاوما اليه رجل فنهاه فابي فلما انصرف قال اتنهاني ان اقرء خلف النبي صلي الله عليه و سلم فتذاكرنا ذلك حتي سمع رسول الله صلي الله فقال النبي صلي الله من صلي خلف امام فان قراءة الامام له قراءة
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்:ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் லுஹர் அல்லது அஸர் தொழுதார்.வேறொருவர் கிராஅத் ஓதுவதை நிறுத்தும் படி சைக்கினை செய்தார்.ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை.அவர் தொழுது முடித்த பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் நின்று நான் கிராஅத் ஓதுவதை ஏன் தடுத்தீர்? இந்நிகழ்வு குறித்து நாங்கள் பேசிக்கொண்டோம்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது குறித்து கேள்விப்பட்டு கூறினார்கள் இமாமிற்கு பின்னால் நின்று தொழும் போது இமாமின் கிராஅத் பின்தொடர்பவருக்கு கிராஅத்தாகும்.(கிதாபுல் ஆஸார் லி அபீஹனீஃபா பிரிவாயதில் காளி)

இமாமின் கிராஅத் முக்ததிக்கு  (பின்பற்றி தொழுபவருக்கு) போதுமானது (ஓததேவையில்லை)

من كان له إمام فقراءة الإمام له قراءة

ஜாபிர் ரளி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக கூறுகிறார்கள் இமாமை பின்தொடர்ந்து தொழுபவருக்கு இமாமின் கிராஅத்துதான் (போதுமானதாகும்)
(ஆதாரம்:இத்ஹாஃபுல் கியரதில் முஹிர்ரா)

كان إذا سئل هل يقرأ أحد خلف الإمام قال: إذا صلى أحدكم خلف الإمام فحسبه قراءة الإمام. وإذا صلى وحده فليقرا و كان عبد الله لا يقرا خلف الامام
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்களிடம் கேட்கப்பட்டது இமாமை பின்தொடர்பவருக்கு கிராஅத் உண்டா? அவர்கள் கூறினார்கள்; உங்களில் ஒருவர் இமாமை பின்பற்றி தொழுதால், அவருக்கு இமாமின் கிராஅத் போதுமானது.தனித்து தொழுதால் அவர் கிராஅத் ஓதட்டும்.அப்துல்லாஹ் (ரளி) அவர்கள் இமாமின் பின்னால் ஓதமாட்டார்கள்.
(ஆதாரம்:முஅத்தா இமாம் மாலிக்)

   இன்ஷா அல்லாஹ் தொடரும்