Tuesday, December 28, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்

 தக்லீதின் படித்தரங்கள்

தொடர்:19


நான்கு மத்ஹபுகளில் ஒன்றை மட்டும் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதை முன்னால் சென்ற ஆய்வின் மூலம் அல்லாஹ்வின் கிருபையால் தெளிவாக புரிந்திருப்போம்.அடுத்து தக்லீத் குறித்து அவசியமான ஒரு தலைப்பை இனி பார்ப்போம்.தக்லீத் செய்பவர்களை கவனித்து தக்லீதில் பலதரப்பட்ட நிலைகள் உள்ளது.அவைகளின் நிலைகளுக்கு ஏற்ப சட்டங்களும் மாறுபடும்.மாறுபட்ட நிலைகளின் வித்தியாசத்தை புரியாமல்தான் மத்ஹபுகள் குறித்து தடுமாற்றமும்,குழப்பங்களும் உருவாகுகிறது.இதனால் அத்தகைய நிலைகள் குறித்து சிறிது விரிவாக அறிவோம்.

முதலாவது:பொதுமக்களின் (சாமானியன்) தக்லீத் (تقليد العوام ) 
இது தக்லீதின் முதல் நிலை பொதுமக்கள் யார்? 
1) அரபி மொழி,இஸ்லாமிய கல்விகள் குறித்து முற்றிலும் ஞானமில்லாதவர்கள்.அவர்கள் மற்ற துறைகளில் திறமையானவர்களாக இருந்தாலும் சரி.
2)அரபி மொழியை அறிந்தவர்கள்.அரபி நூல்களை புரியமுடியும்.எனினும்,தப்ஸீர்,
ஹதீஸ்,பிக்ஹ் இவைகளுடன் தொடர்புடைய மார்க்க கல்விகளை முறையாக ஆசிரியர்களிடம் கற்காதவர்கள்.
3)மார்க்க கல்வியை ஆசிரியர்களிடமிருந்து ஓரளவிற்கு கற்றிருப்பார்கள்.எனினும் தப்ஸீர்,ஹதீஸ்,பிக்ஹ் போன்றவைகளின் அடிப்படைகளை திறம்பட கற்காதவர்கள்.
இந்த மூன்று சாரார்களும் தக்லீத் விஷயத்தில் பொதுமக்கள் தான்.இவர்களுக்கு தக்லீத் செய்வதை தவிர வேறு வழியில்லை.ஏனெனில் நேரடியாக குர்ஆன்,ஹதீஸை அணுகி ஆய்வு செய்யும் திறனோ,தகுதியோ இல்லை.மேலும் முரண்பட்ட ஆதாரங்களுக்கு மத்தியில் இணைக்கத்தை உருவாக்குதல் அல்லது ஒரு கருத்தை மட்டும் முன்னுரிமை அளித்து தீர்ப்பளிக்கும் திறமையும் இல்லை.ஆதலால் பொதுமக்கள் மார்க்க சட்டங்களில் ஏதேனும் முஜ்தஹிதைதான் (ஆய்வாளரை) சார்ந்திருக்க வேண்டும்.
அல்லாமா கத்தாபி (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்:
و أما يسوغ له التقليد فهو العامي الذي لا يعرف طرق الأحكام الشرعية فيجوز له أن يقلد عالما و يعمل بقوله ......ولأنه ليس من أهل الاجتهاد فكان فرضه التقليد كتقليد الاعمى فى القبلة فإنه لما لم يكن معه آلة الاجتهاد كان عليه تقليد البصير فيها 

ஷரீஅத் சட்டங்களின் வழிமுறைகளை அறியாத சாமானியர் ஏதேனும் அறிஞரை தக்லீத் செய்து அவரின் சொல்லை அமல் செய்வது கூடும்........(குர்ஆன்,சுன்னாவில் அதற்குரிய ஆதாரங்களை எழுதிய பிறகு) ஏனெனில் சாமானியருக்கு ஆய்வுத்திறன் இல்லை.அதாவது பார்வை இழந்தவர் கிப்லாவின் விஷயத்தில் பார்வை உள்ளவரை பின்பற்றுவதை போன்று சாமானியரும் (அறிஞரை) பின்பற்றுவது கடைமையாகும்.
ஏனெனில் அவர் கிப்லாவை சுயமாக அறிவதற்கு ஆற்றல் இல்லை.எனவே பார்வை உள்ளவரை தான் தக்லீத் செய்யவேண்டும்.(ஆதாரம்:அல்ஃபகீஹ் வல் முத்தஃபக்காஹ் லில் கதீபுல் பஃதாதி பக்கம்:68)

இந்த நிலையில் உள்ள முகல்லித் (இமாமை பின்பற்றுபவர்) ஆதாரங்கள் குறித்து தடுமாறுவதற்கு அல்லது எந்த முஜ்தஹிதின் ஆதாரங்கள் வலுவானதாக உள்ளது என்பதை ஆராய்வதற்கு வேலை இல்லை.எனவே அவர் ஒரு அறிஞரை குறிப்பாக்கி அனைத்து செயல்களிலும் அவரின் சொல்லை நம்பிக்கை கொள்ளவேண்டும்.எதார்த்தம் என்னவெனில் எதேனும் ஹதீஸ் அவரின் இமாமின் வழிமுறைக்கு மாற்றமாக இருந்தாலும் இமாமின் வழிமுறையை பின்பற்றுவது தான் கடமையாகும்.அந்த ஹதீஸின் சரியான கருத்து எனக்கு புரியவில்லை.(அல்லது) இமாமிடத்தில் அதற்கு எதிரான வலுவான ஆதாரம் உள்ளது என்பதாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.இமாமின் வழிமுறையை ஏற்கவேண்டும்.ஹதீஸிற்கு மாற்றுவிளக்கம் கொடுக்க வேண்டும் என்பதாக கூறுவது வெளிப்படையில் ஆச்சரியமாக இருக்கலாம்.ஆனால், நிதர்சனம் இதுதான்.ஏனெனில் சாமனியருக்கு இதனை தவிர வேறு வழியில்லை.ஏதேனும் ஹதீஸ் இமாமின் வழிமுறைக்கு மாற்றமாக இருந்தால் அவரின் வழிமுறையை விட்டுவிடலாம் என்பதாக இந்த நபருக்கு விருப்பம் அளித்தால் இதனின் முடிவானது குழப்பத்தில்,வழிகேட்டில் தள்ளிவிடும்.ஏனெனில் குர்ஆன்,சுன்னாவிலிருந்து மஸாயில்களை ஆய்ந்து அறிவது ஆழமான விசாலமான துறையாகும்.வாழ்நாள் முழுவதும் செலவழித்தாலும் ஒவ்வொரு நபரும் தேர்ச்சி பெறமுடியாது.சில சமயங்களில் வெளிப்படையான ஹதீஸின் வார்த்தைகளிலிருந்து ஒரு கருத்தை புரியமுடியும்.எனினும்,குர்ஆன்,சுன்னாவின் மற்ற ஆதாரங்களின் ஒளியில் வேறு கருத்தை புரியமுடியும்.இப்போது சாமனியர் ஹதீஸின் வெளிப்படையை மட்டும் பார்த்து அமல் செய்ய ஆரம்பித்தால் வழிகேடு உருவாகிவிடும்.இதனை உறுதிப்படுத்தும் நிகழ்வை மெளலானா மெளலவி தகி உஸ்மான் ஹள்ரத் தாமத் பரகாதுஹும் அவர்கள் "தக்லீத் கீ ஷரயீ ஹைய்ஸிய்யத்" நூலில் பதிவு செய்துள்ளார்கள்.நூல்களை வாசிக்கும் பழக்கம் உள்ள நண்பர் இருந்தார்.அதிலும் குறிப்பாக ஹதீஸ்களை வாசிப்பதில் ஆர்வம் உடையவர்.அத்துடன் அவரின் சிந்தனை "நான் ஹனபி எனினும் ஏதேனும் ஹதீஸ் ஹனபி மத்ஹபிற்கு மாற்றமாக இருந்தால் அதனை விட்டுவிடுவேன்".ஒரு சமயம் எனக்கு முன்னிலையில் ஒரு நபருக்கு கூறினார்:காற்று வெளியேறி வாடை உணரும் வரை அல்லது சப்தம் கேட்கும் வரை உளு முறியாது.அப்பாவித்தனத்தால் தவறான புரிதலில் அகப்பட்டுள்ளார் என்பதை நான் புரிந்து கொண்டேன்.பிறகு அவருக்கு புரியவைக்க முயற்சித்தேன்.ஆனால் அவர் திர்மிதியில் உள்ளது என்பதாக பிடிவாதமாக இருந்தார்.இறுதியில் இது குறித்த அனைத்து ஹதீஸ்களையும் கூறி விரிவாக விளக்கினேன்.உண்மைநிலையை தெளிவுப்படுத்தினேன்.அப்போது கூறினார்.நீண்டகாலமாக இதன்படி அமல்செய்து வருகிறேன்.எத்தனை தொழுகைகளை இது போன்று தொழுதேன் என்பது எனக்கு நினைவில்லை.அடிப்படையில் இவரின் தவறுதலான புரிதல் ஜாமிஉத்திர்மிதியில் வரும் ஹதீஸை சுயமாக ஆய்வு செய்ததின் விளைவு.
لا وضوء الا من صوت او ريح 
வாடை (உணர்ந்தால்) அல்லது சப்தம் கேட்டாலே தவிர உளூ இல்லை.(ஆதாரம்:திர்மிதி) இதனுடன் திர்மிதியில் இந்த ஹதீஸையும் அவர் படித்துள்ளார்.
اذا كان أحدكم فى المسجد فوجد ريحا بين اليتيه فلا يخرج حتى يسمع صوتا أو يجد ريحا 
உங்களில் ஒருவர் மஸ்ஜிதில் இருக்கும்போது அவரது பித்தட்டுகளுக்கு மத்தியில் (காற்று பிரியும்) சப்தம் கேட்காதவரை அல்லது வாடையை உணராதவரை (உளூ செய்வதற்கு) வெளியேற வேண்டாம்.
இந்த ஹதீஸின் வெளிப்படையான வார்த்தைகளை கவனித்து உளூ முறிவதற்கு  அடிப்படை (காற்று பிரிந்து) வாடை வருதல் அல்லது சப்தம் கேட்குதல்  என்பதாக தவறுதலாக புரிந்து கொண்டார்.எனினும்,அனைத்து புகஹாக்களும் ஒன்றுப்பட்டுள்ளனர்.இந்த ஹதீஸின் கருத்து இதுவல்ல.மாறாக உண்மையென்னவெனில் உளூ முறிந்துவிட்டதாக தடுமாற்றமும்,ஊசலாட்டமும் கொண்டவர்கள் குறித்து நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகும்.இதனை ஹதீஸின் பல்வேறு அறிவிப்புகளை, வாசகங்களை ஒன்றுதிரட்டிதான் இதற்குரிய தீர்வை கூறமுடியும்.வெறும் குர்ஆன்,ஹதீஸின் மொழிப்பெயர்ப்பை மட்டும் சாமானியர் படித்தால் வழிகேட்டிலும்,தவறான புரிதலிலும் அகப்பட்டு விடுவார்.இதேபோன்றுதான் எதேனும் ஹதீஸ் தனது இமாமின் வழிமுறைக்கு மாற்றமாக இருப்பதைக் கண்டு இமாமின் வழிமுறையை விட ஆரம்பித்தால் அவரும் வழிகேட்டில் அகப்பட்டுக்கொள்வார்.இதற்கு ஏராளமான ஆதாரங்களை கூறமுடியும்.எனினும் சுருக்கமாக கூறிவிட்டோம்.

இதனை குறித்து எளிதாக புரிவதற்கு ஓர் உதாரணம்
உலகில் எதேனும் நபர் ஒரு சட்டத்தை அறிய விரும்பினால் அந்த நாட்டின் சட்டத்தை கற்ற திறமையான நபரை அணுகுவார்கள்.மாறாக நேரடியாக சட்டநூல்களை ஆராய்வதற்கு முயற்சிக்க மாட்டார்கள்.
சட்டவியல் அறிஞர் எதேனும் சட்டத்தை கூறினால் அதனை நம்பி ஏற்று அமல்செய்வது கடமையாகும்.பிறகு எதார்த்தமாக சட்டநூல் கையில் கிடைத்தது.அதில் உள்ள வாசகம் அறிஞரின் கருத்திற்கு எதிராக இருந்தாலும் அவரின் கருத்தை நிராகரிக்கமாட்டார்.மாறாக,அவர் கூறியபடி செயல்படுவார்.மேலும் சட்டநூல்களை முறையாக கற்கவில்லை என்பதால் இதனை தம்மால் சரியாக புரியமுடியவில்லை என்பதாகத்தான் உறுதியாக எண்ணுவார்.அதுமட்டுமின்றி இந்த துறையில் திறமை, விசாலமான ஞானம் தேவை.இந்த உதாரணம் சட்டநூல்களை விட குர்ஆன்,சுன்னாவிற்கு மிகவும் பொருத்தமானது.ஷரீஅத்தின் சட்டங்களை சுயமாக ஆராய்ந்து அமல்செய்வதற்கு மிகப்பெரிய திறமை அவசியமாகும்.எனவேதான் நமது புகஹாக்கள் பொதுமக்கள் நேரடியாக குர்ஆன், ஹதீஸின் சட்டங்களை அறிவதற்கு பதிலாக முஜ்தஹித்களை தக்லீத் செய்யவேண்டும் என்பதாக கூறுகின்றனர்.இதனால்தான் சாமானியருக்கு எதேனும் முஃப்தி தவறான தீர்ப்பளித்தால் அதனின் குற்றம் தீர்ப்பு அளித்தவருக்கு மட்டும் தான்.சாமானியர் தங்கடவாதியாக கருதப்படுவார்.ஆனால் அவர் எதேனும் ஹதீஸை பார்த்து அதனின் கருத்தை தவறாக புரிந்து அமல்செய்தால் குற்றவாளியாக கருதப்படுவார்.ஆகவே பொதுமக்கள் மீது தக்லீத் செய்வதுதான் கடமையாகும்.

Friday, December 17, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்

 இமாம்கள் தங்களை பின்பற்றுவதை தடுத்தார்களா?தொடர்:18  


இமாம்கள் குறிப்பாக கூறியுள்ளார்கள்:சரியான ஹதீஸ்கள் தான் எனது வழிமுறை 

இந்த வாதங்கள் அனைத்தும் பொய்யானதும் அசத்தியமானதுமாகும்.எதார்த்தம் என்னவெனில் முஜ்தஹித்களான இமாம்கள், தங்களை தக்லீத் செய்வதை தடுத்தது முஜ்தஹித்களை தான்.ஏனெனில் அவர்கள் குர்ஆன்,ஹதீஸை நேரடியாக  அணுகி ஆய்வு செய்யும் திறமை பெற்றிருந்தார்கள்.மாறாக, ஆய்வு செய்யும் திறன் இல்லாதவர்களை தடுக்கவில்லை.

ஏராளமான நூல்களை நான்கு இமாம்களும், அவர்களின் மாணவர்களும் ஏன் எழுதவேண்டும்? அனைத்து ஆய்வுரீதியான கிளைசட்டங்களை தொகுத்து ஏன் ஒன்றுசேர்க்க வேண்டும்? பர்ளு,வாஜிப்,சுன்னத்,நபில்,

முஸ்தஹப் போன்ற ஏராளமான மஸாயில்களை தொகுக்க வேண்டும்.ஏனெனில் பின்னால் வருபவர்கள் எளிதாக குர்ஆன்,சுன்னாவை பின்பற்ற வேண்டும் என்பதற்காகும்.இமாம்கள், தங்களை தக்லீத் செய்வதை அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக தடுத்திருந்தால்,இமாம்களிடத்தில் பொதுமக்கள் மார்க்க சட்டத்தை கேட்கும்போது நீங்களே ஆய்வு செய்துகொள்ளுங்கள் என கூறியிருக்கவேண்டும்.ஆனால்,

அவர்களின் வாழ்வில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மஸாயில்களை குறித்து கேட்கும்போது, ஆதாரங்களை கூறாமல் சட்டத்தை மட்டும் கூறிய ஏராளமான நிகழ்வுகள் உண்டு.எனவே இமாம்கள் தக்லீதை தடுத்தது எல்லோருக்கும் பொதுவான சட்டம் அல்ல.

இமாம் அபியூசுப் (ரஹ்) அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்:

لأن على العامى الاقتداء بالفقهاء لعدم الاهتداء فى حقه إلى معرفة الأحاديث 

மார்க்க விற்பன்னர்களை, (புகஹாக்களை) பின்பற்றுவது சாமானிய மக்களின் மீது கடமையாகும்.ஏனெனில் அவர்களுக்கு ஹதீஸ்கள் குறித்து ஞானத்தை பெற்றுக்கொள்ளும் சரியான வழிமுறையை அடையும் தகுதி இல்லை.(ஆதாரம்:ஹிதாயா 1/226,தலைப்பு:ما يوجب القضاء و الكفارة)

 இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களிடமிருந்து  அல்லாமா இப்னு தைய்மிய்யா ரஹ் அவர்கள் எடுத்தெழுதுகிறார்கள்:  இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள்,அபூஉபைதா (ரஹ்) அவர்கள்,அபூஸவ்ர் (ரஹ்) அவர்கள்,முஸ்அப் (ரஹ்) போன்றவர்கள் சட்டங்களை தெரிந்துகொள்வதற்கு (இமாம்களை) அணுகும்படி கூறினார்கள்.தனது தோழர்களில் அபூதாவூத் (ரஹ்),உஸ்மான் இப்னு ஸயீத் (ரஹ்),இப்ராஹிம் ஹர்பி (ரஹ்), அபூபக்கர் அஸ்ரம் (ரஹ்),அபூஜுர்ஆ (ரஹ்),அபூஹாதம் (ரஹ்), முஸ்லிம் (ரஹ்) போன்றவர்களை (பிறரை) தக்லீத் செய்வதிலிருந்து தடுத்தார்கள்.அசலான குர்ஆன்,சுன்னாவின் பக்கம் திரும்புவது கடமை என்பதாக அவர்களிடத்தில் கூறினார்கள்.(பதாவா இப்னு தைய்மிய்யா 2/24) 

 இமாம்கள்,தக்லீத் செய்யக்கூடாது என்பதாக  யாரை தடுத்துள்ளார்கள்? என்பதை புரிய முடிகிறது.ஹதீஸ்கலை வல்லுநர்களாக,புகஹாக்கள் எனும் மார்க்க விற்பன்னர்களாக இருப்போரை தான் தடுத்துள்ளார்கள்.ஆய்வுத்திறன் இல்லாதவர்கள் இமாமை அணுகி மார்க்க சட்டங்களை குறித்து கேட்டு அமல் செய்வது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அனைவரையும்  தக்லீதை விட்டு தடுக்கவில்லை என்பதற்கு மற்றொரு சான்று

அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்களும்,

ஸஹாபாக்கள்,தாபியீன்களின் கருத்துவேறுபாடுகளும் ஒன்று சேர்க்கப்பட்ட நூல்கள் இருந்தாலும் விரும்பியபடி அமல்செய்வது,நாடுவதை அமல்செய்வது கூடாது.ஆதலால் எவரின் சொல்லை எடுக்க விரும்பினால்,சரியானதை அமல்செய்வதற்கு மார்க்க அறிஞர்களை அணுகி தெரிந்து கொள்ளும் வரை அதனை அமல்செய்வது கூடாது.(ஆதாரம்:இஃலாமுல் முவக்கியீன்)

கண்ணியத்திற்குரிய பேரறிஞர் அபுல் ஹஸன் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என்னிடத்தில்,இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்;அபுல் ஹஸன்!எந்த மஸ்அலாவில் உம்முடைய கருத்தில் எந்த ஒரு இமாமும் இல்லையெனில் அதில் எப்போதும் விவாதிப்பதை தவிர்த்துக்கொள்! (ஆதாரம்:மனாகிபுல் இமாம் அஹ்மத் பக்கம்:871,ஸியரு அஃலாமின் நுபலா 11/692)

இக்காலத்தின் குழப்பங்களில் மிகவும் அபாயகரமான குழப்பம் இஸ்லாமியர்களில் சாமானியர்களை குறிப்பாக இளைஞர்களை வார்த்தை ஜாலங்களால்,கவர்ச்சியான வாதங்களால்,தவறான ஊசலாட்டங்களால் அவர்களின் உள்ளத்தில் மத்ஹபுகளுக்கு எதிரான சிந்தனையை திணித்து,அவைகளை விட்டுவிடுவதை வலியுறுத்துவது.இதன்பிறகு அப்பாவி மக்கள் மனம்போன போக்கில் வாழ்வை கழிப்பார்கள். எந்த ஒரு திறமையான முஜ்தஹிதை (ஆய்வாளரை) பின்பற்றும் தேவையில்லை.அதுமட்டுமின்றி  முன்னோர்களை தக்லீத் செய்வது,பின்தொடர்வது குற்றம் பாவம் என்பதாக சித்தரிப்பார்கள்.மார்க்கத்தை குறித்து அறியாதவரும் கூட இமாம்களின் குர்ஆன்,ஹதீஸின் விளக்கத்தை ஏற்பதில்லை.ஆனால்,அவர்களின் இயக்கத்தின் தலைவர்களின் விளக்கத்தை,ஆய்வை வஹியாக கருதி கண்மூடித்தனமாக தலைமீது வைத்து கொண்டாடி வருகின்றனர்.இதனையே நேர்வழி என்பதாக கருதி வருகின்றனர்.இதனை நாம் கண்கூடாக கண்டுவருகிறோம்.

ஆக,இமாம்களின் கூற்றுக்களை நுனிப்புல் போல் மேய்கின்றனர் அல்லது திட்டமிட்டு திரித்து கூறிகின்றனர்.

அடுத்து, சரியான ஹதீஸ்களே எனது வழிமுறை எனும் இமாம்களின் கூற்றுகளின் உண்மையான விளக்கத்தை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் தனது நூலான கிதாபுல் மஜ்மூஃவின் முன்னுரையில் இதற்கு பதில் தருகிறார்கள்.

هذا الذي قاله الشافعى ليس معناه أن كل واحد رأى حديثًا صحيحًا قال: هذا مذهب الشافعي، وعمل بظاهره وإنما هذا فيمن له رتبة الاجتهاد في المذهب

இமாம் ஷாபியி (ரஹ்) அவர்கள் கூறிய "ஸஹீஹான ஹதீஸ் எனது வழிமுறை" என்பதற்குரிய விளக்கத்தை இவ்வாறு புரிந்து கொள்ளக்கூடாது.அதாவது "ஒவ்வொரு நபரும் ஸஹீஹான ஹதீஸை பார்த்தால் இதுதான் ஷாபியி ரஹ் அவர்களின் வழிமுறை என்பதாக எண்ணி அமல் செய்வது"(கூடாது).மாறாக, இமாமின் சொல்லின் சரியான கருத்து "மத்ஹபில் ஆய்வு செய்யும் திறன்பெற்றவருக்கு உரிய வழிகாட்டுதலாகும்".

     இமாம்களின் இந்த சொல்லை பொதுவாக அறிவித்தால் பெரும் அழிவில்தான் கொண்டு சேர்க்கும்.இதற்கு ஏராளமான சான்றுகளை கூறமுடியும்.உதாரணத்திற்கு சில ஹதீஸ்களை மட்டும் பார்ப்போம்.

1)ரமளானில் இரத்தம் குத்தி எடுத்த மனிதரை கடந்து நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சென்ற போது கூறினார்கள்;

افطر الحاكم و المحجوم 

இரத்தம் கொடுப்பவரும், எடுப்பவரும் நோன்பை முறித்து விட்டனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ராபிவு பின் கதீஜ் (ரலி),திர்மிதி ,அபூதாவூத் போன்ற ஹதீஸ்களில் வருகிறது.

இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸை மட்டும் பார்த்து சாமானியர் அமல் செய்தால் என்ன விளைவு ஏற்படும்?

2)இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் 

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «جَمَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمَدِينَةِ، فِي غَيْرِ خَوْفٍ، وَلَا مَطَرٍ»

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் கூறினார்கள்: ‘நபியவர்கள் பயம், மலை இல்லாமலும் லுஹர், அசருக்கிடையிலும், மக்Gரிப், இஷாக்கிடையிலும் சேர்த்து தொழுதுள்ளார்கள்.’  (முஸ்லிம்)

இந்த ஹதீஸின் வெளிப்படையான கருத்தை முன்வைத்து தக்க காரணமின்றி தொழுகையை ஜம்உ செய்ய ஆரம்பித்தால் என்ன விளைவு ஏற்படும்?

3)அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் 

عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال لا وضوء الا من صوت او ريح 

உங்களிலொருவர் சத்தத்தையோ, வாடையோ உணராத வரை உளு (செய்யும் அவசியம்) இல்லை என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.(ஆதாரம்:திர்மிதி)

வெளிப்படையான ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸின் பேரில் அமல்செய்தால் என்ன விளைவு ஏற்படும்?

4)புகாரியில் வரும் ஹதீஸ்

 ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

'இறைத்தூதர் அவர்களே! ஒரு கூட்டத்தினர் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை' என்று ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்' என்றார்கள்.(ஹதீஸ் இலக்கம்:2057)

வெளிப்படையான இந்த ஹதீஸின் பேரில் அமல்செய்தால் என்ன விளைவு ஏற்படும்? 

ஆகவே,"ஸஹீஹான ஹதீஸ்கள் எமது வழிமுறை" எனும் இமாம்களின் சொல்லை பொதுவாக புரிந்து கொள்வது கூடாது.

Friday, December 10, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்

 

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில் தொடர்:17

கேள்வி:ஸஹாபாக்கள் காலத்தில்  தனிநபரை பின்பற்றுவது கட்டாயமாக்கப்படவில்லை.பிறகு எப்படி நமது காலத்தில் கடமையாகும்? 

பதில்


1)ஸஹாபாக்கள்,தாபியீன்களின் காலத்தில் பரவலாக நேர்மை இருந்தது.பெருமானாரின் சகவாசம், நெருக்கமான காலம் எனும் பரக்கத்தால் ஷரீஅத்தின் சட்டங்களில் மனோஇச்சைக்கு வழியில்லை.இதனால்தான் அவர்களின் காலத்தில் இரண்டுவிதமான தக்லீதிற்கும் அனுமதியிருந்தது.பிறகு மனோஇச்சை வீறுகொண்டு எழும் அச்சத்தால் தக்லீத் ஷஹ்ஸி (தனிநபரை பின்பற்றுதல்) மட்டும் குறிப்பாக்கப்பட்டது.

2)ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் "அல்இன்ஸாஃப் ஃபி பயானி ஸபபில் இஹ்திலாஃப்" நூலில் நடுநிலையாக அழகிய பதிலை தருகிறார்கள்.
  வாஜிப் (கடமை)இரண்டு விதமாக உள்ளது.ஒன்று,அசலில் வாஜிப் (واجب لذاته) என்று சொல்லப்படும்.மற்றொன்று,(வாஜிப் லிஙைரிஹி)வேறு காரணத்தால் வாஜிப் 
முதலாவது பெருமானாரின் காலத்தில் கடமையாக இருந்தது.அதற்குப் பிறகு அவைகளில் சிறிதும் அதிகப்படுத்தப்படாது.ஆனால்,இரண்டாவது பெருமானாரின் காலத்தில் கடமையாக இல்லை.அவைகளில் அதிகப்படியாக சேர்க்க முடியும்.இதில் நோக்கமானது வாஜிபை அமல் செய்வதற்காகும்.உதாரணமாக, நபியின் காலத்தில் ஹதீஸ்களை பாதுகாப்பது கடமையாக இருந்தது.ஆனால் எழுதுவது வாஜிபாக இல்லை.ஏனெனில் ஹதீஸை பாதுகாக்கும் கடமை மனப்பாடத்தின் மூலமே நிறைவேறிவிடும்.எனினும்,மனனசக்தி குறைந்த போது ஹதீஸை பாதுகாப்பதற்கு எழுதி வைப்பதை தவிர வேறு வழியில்லை.எனவே,பிறகு எழுதிவைப்பது வாஜிபாகிவிட்டது.இதேபோன்றுதான் ஸஹாபாக்கள்,தாபியீன்களின் காலத்தில் முஜ்தஹித்களை பின்பற்றும் தக்லீத் முத்லக் (பொதுவான தக்லீத்)அனுமதி இருந்தது.எனினும்,இதன்பேரில் ஆபத்து ஏற்படுவதை அஞ்சி,நமது காலத்தில் தக்லீத் ஷஹ்ஸி மட்டும் கடமையாகிவிட்டது.
  இதற்கு தெளிவான முன்னுதாரணம் உண்டு.ஹள்ரத் உஸ்மான் (ரளி) அவர்களின் காலம் வரை குர்ஆனின் பல்வேறு எழுத்துவடிவம் இருந்தது.இதனால் உஸ்மான் (ரளி) காலத்தில் கடுமையான குழப்பம் உருவானது.இதன் வாயிலை அடைப்பதற்கு முழு உம்மத்திற்கும் ஒரே எழுத்து வடிவை கட்டாயமாக்கினார்கள்.மற்ற எழுத்துமுறையில் எழுதுவதை கூடாது என உத்தரவிட்டார்கள்.இதன்பேரில் முழுஉம்மத்தும் ஒன்றுபட்டனர்.வாஜிபாக இல்லாதது ஏன் வாஜிபானது என ஒருவரும் குற்றச்சாட்டவில்லை? இது போன்று தான் பெரும் குழப்பத்தின் வாயிலை அடைப்பதற்கு தக்லீத் ஷஹ்ஸி மட்டும் கடமையாகிவிட்டது.(ஆதாரம்:தர்ஸே திர்மிதி, பக்கம்:121)

மற்றோரு உதாரணம் واجب بالذات (அசலில் வாஜிப்) இதற்கு ஆதாரம் தேவையாகும்.ஆனால் واجب بالغير (வேறு காரணத்தால் வாஜிப்) இதற்கு ஆதாரம் தேவையில்லை.தொழுகையில் பாத்திஹா சூரா ஓதுவது வாஜிப்.அதற்கு ஆதாரம் உண்டு.தொழுகையில் பாத்திஹா ஓதவில்லையானால் தொழுகை குறையுடையது.எனினும்,அதனை மனனம் செய்வதற்கு குறியீடுகள் (ஜேர்,ஜஃபர்,பேஷ்) தேவை.இவைகள் இல்லையெனில் பாத்திஹா சூரா எல்லோராலும் ஓதமுடியாது.எனவே குறியீடுகள் واجب بالغير (வேறுகாரணத்தால் கடமையானது) எனினும் இதற்கு ஆதாரம் இல்லை.இவ்வாறுதான் தக்லீத் ஷஹ்ஸி (தனிநபரை பின்பற்றுவது) கடமையாகிவிட்டது.

Thursday, December 2, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்

 

குற்றச்சாட்டுகளும் பதில்களும்/தொடர்:16

சந்தேகமும் நிவர்த்தியும் 


தக்லீத் முத்லக் (பொதுவான தக்லீத்) தக்லீத் ஷஹ்ஷி (தனிநபரை பின்பற்றுதல்) இரண்டும் கூடும் எனும் போது நமது காலத்தில் ஏன் தக்லீத் முத்லக்  கைவிடப்பட்டது?

மனோஇச்சையின் விளைவுகளை குறித்து குர்ஆன்,ஹதீஸின் ஒளியில் 

وَلَوْ شِئْنَا لَرَفَعْنٰهُ بِهَا وَلٰـكِنَّهٗۤ اَخْلَدَ اِلَى الْاَرْضِ وَاتَّبَعَ هَوٰٮهُ‌ ۚ فَمَثَلُهٗ كَمَثَلِ الْـكَلْبِ‌ ۚ اِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ اَوْ تَتْرُكْهُ يَلْهَث ‌ؕ ذٰ لِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا‌ ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏
7:176. நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.

 اَفَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰى عِلْمٍ وَّخَتَمَ عَلٰى سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰى بَصَرِهٖ غِشٰوَةً  ؕ فَمَنْ يَّهْدِيْهِ مِنْۢ بَعْدِ اللّٰهِ‌ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ‏
45:23. (நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?

 اَفَمَنْ كَانَ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّهٖ كَمَنْ زُيِّنَ لَهٗ سُوْٓءُ عَمَلِهٖ وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ‏
47:14. எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஓப்பாவாரா?

وَ لَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوٰٮهُ وَكَانَ اَمْرُهٗ فُرُطًا‏
இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது.

وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ‌ۙ اِنَّكَ اِذًا لَّمِنَ الظّٰلِمِيْن 
(இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.

وَاَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ وَاحْذَرْهُمْ اَنْ يَّفْتِنُوْكَ عَنْۢ بَعْضِ مَاۤ اَنْزَلَ اللّٰهُ اِلَيْكَ‌ؕ فَاِنْ تَوَلَّوْا فَاعْلَمْ اَنَّمَا يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّصِيْبَهُمْ بِبَـعْضِ ذُنُوْبِهِمْ‌ؕ وَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوْنَ‏
5:49. இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.

ثُمَّ جَعَلْنٰكَ عَلٰى شَرِيْعَةٍ مِّنَ الْاَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‏
45:18. இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.

يٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِيْفَةً فِى الْاَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰى فَيُضِلَّكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ اِنَّ الَّذِيْنَ يَضِلُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌۢ بِمَا نَسُوْا يَوْمَ الْحِسَابِ‏
38:26. (நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.

عَنْ أَبِي مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه و سلم "لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ"
நான் கொண்டு வந்த மார்க்கத்தை அவனது மனோஇச்சை பின்பற்றப்படாதவரை உங்களில் ஒருவரும் முஃமீனாக முடியாது என்பதாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்:அல்அர்பஊன் அந்நவவி)

قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: حُفَّتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ، وَحُفَّتِ النَّارُ بِالشَّهَوَاتِ
5436. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம்)


மனிதனை ஷைத்தான் வழிகெடுக்க ஏந்திய மிகப்பெரிய ஆயுதம் மனோஇச்சைகள் தான்.அதன்பேரில் ஈடுபடசெய்து,அவனது உள்ளத்தில் ஆதிக்கம் செலுத்தி அவனை அடிமையாக்கிவிடுகிறான்.எனவே இதன் மூலம் மனோஇச்சையானது பெரும் வழிகேடு என்பதை புரிய முடிகிறது.சில சமயங்களில் மனிதனை இறைநிராகரிப்பில் தள்ளிவிடும்.மனோஇச்சை இரண்டு நிலைகளில் உள்ளது.ஒன்று,மனிதன் பாவத்தை பாவமாக,தவறை தவறாக புரிந்துள்ளான்.எனினும்,மனோஇச்சையின் தாக்கத்தால் அகப்பட்டு பாவத்தில் ஈடுபடுகிறான்.இந்த செயலானது குற்றம் என்பதில் சந்தேகமில்லை.எனினும்,தவ்பாவின் மூலம் பாவமன்னிப்பு பெற்று வாழ்வை சீர்திருத்திக் கொள்வதற்கு வாய்ப்பு உண்டு.இதற்கு நேர்மாறாக மனோஇச்சையின் மற்றொரு நிலை,அடியான் அதற்கு அடிமையாகி,ஹலாலை ஹராமாக்கி,ஹராமை ஹலாலாக்கி,ஷரீஅத்தின் வரம்பை மீறிவிடுகிறான்.தீனை,மார்க்கத்தை விளையாட்டுப் பொருளாக ஆக்கிவிடுகிறான்.இந்த நிலையானது முதல்நிலையை விட ஆபத்தும், அபாயமும்,நாசமும் நிறைந்து இருக்கிறது.எந்த செயல் அடியானை இத்தகைய நிலைக்கு அழைத்துச் செல்வதற்கு பாதையை அமைத்து தருகிறதோ அதனை தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.இதனால் தான் புகஹாக்கள் எனும் மார்க்க விற்பன்னர்கள்,மக்களிடத்தில் மார்க்க உணர்வு நாளுக்குநாள் குறைந்து வருகிறது.பேணிக்கை, இறையச்சம் விரைவாக சென்றுக்கொண்டுள்ளது.இந்த சமயத்தில் தக்லீத் முத்லகின் வாசலை திறந்தால் மக்கள் அறிந்துகொண்டு உணர்வற்று மனோஇச்சையில் அகப்பட்டுக்கொள்வார்கள் என எண்ணினார்கள்.
உதாரணமாக,குளிர்காலமாக உள்ளது.ஒருவன் உளு செய்கிறான்.இரத்தம் வருகிறது.இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களிடத்தில் உளு முறிந்துவிடும்.ஷாபியி (ரஹ்) அவர்களிடத்தில் உளு முறியாது.அப்போது ஷாபியி மத்ஹபை தக்லீத் செய்து மீண்டும் உளு செய்யாமல் இருப்பார்.சிறிதுநேரம் கழித்து பெண்ணை தொடுகிறான்.ஷாபியி (ரஹ்) அவர்களிடத்தில் உளு முறிந்துவிடும்.அபூஹனீபா (ரஹ்) அவர்களிடத்தில் உளு முறியாது.இப்போது அபூஹனீபா (ரஹ்) அவர்களின் மத்ஹபை தக்லீத் செய்து மீண்டும் உளு செய்யாமல் இருக்கிறான்.ஆக, இவ்வாறு ஒவ்வொரு மத்ஹபையும் எடுத்து அவனுக்கு எளிதாக,லேசாக இருப்பதை அமல் செய்து, சிரமம் உள்ளதை விட்டுவிட்டு செல்ல ஆரம்பித்தால் அவனிடத்தில் மனோஇச்சைதான் எஞ்சியிருக்கும்.மார்க்கம் அல்ல.வெளிப்படையான விஷயம் ஷரீஅத்தின் சட்டங்கள் அவனுக்கு விளையாட்டுப்பொருட்களாக மாறிவிடும்.இன்னும் மனோஇச்சையின் பேரில் எல்லை மீற ஆரம்பித்துவிடுவான்.ஏனெனில் பெரும்பாலும் முஜ்தஹி(ஆய்வாளர்)த்திடத்தில் சில நேரங்களில் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும்.அதனை எடுத்து அமல்செய்யும் போது நிச்சயம் அவனை மனோஇச்சை இறைநிராகரிப்பில் தள்ளிவிடும்.உதாரணமாக,ஹள்ரத் அப்துல்லாஹ் பின் ஜஃபர் அவர்களிடத்தில் இசைகூடும்.ஹள்ரத் காஸிம் இப்னு முஹம்மத் அவர்களிடத்தில் நிழலற்ற உருவப்படங்கள் கூடும்.இமாம் அஃமஷ் அவரிடத்தில் நோன்பு சூரிய உதயத்திலிருந்து ஆரம்பமாகும்.ஹள்ரத் அதா இப்னு அபீரபாஹ் அவரிடத்தில் ஈத்,ஜும்ஆ நாளில் வந்தால் அன்றைய நாள் ஜும்ஆ,லுஹர் இரண்டும் நீங்கிவிடும்.அஸர் வரை எந்த ஒரு தொழுகையும் கடமையில்லை.தாவூத் ளாஹிரி,இப்னு ஹஜ்ம் அவர்களிடத்தில் எந்தப் பெண்ணை நிக்காஹ் செய்ய விருப்பம் உள்ளதோ அந்தப் பெண்ணை நிர்வாணமாக பார்ப்பது கூடும்.இப்னு ஸஹ்னூன் மாலிகி அவர்களிடத்தில் மனைவியின் பின்துவாரத்தில் புணர்வது கூடும்.ஸயீத் இப்னு முஸய்யிப் அவரிடத்தில் முத்தலாக் கொடுத்த பெண்ணை மீண்டும் முதல் கணவன் திருமணம் செய்ய வேறொருவன் நிக்காஹ் செய்தால் போதுமானது.உடலுறவு கொள்வது நிபந்தனையில்லை.சுருக்கம் என்னவென்றால்,இவைகள் புரியவைப்பதற்கு சில உதாரணங்களாகும்.இல்லையெனில் இது போன்ற ஏராளமான கருத்துக்கள் பிக்ஹ்,ஹதீஸ் நூல்களில் உள்ளது.இப்படிப்பட்ட விஷயங்களை ஒன்றுதிரட்டி மார்க்கமாக அமைத்து தக்லீத் செய்தால் அதனின் தலைவன் ஷைத்தானும்,மனோஇச்சையாக தான் இருக்கமுடியும். இது போன்ற மனோஇச்சைகள் மார்க்கத்தை 
விளையாட்டுப் பொருளாக்கிவிடும்.எனவே தான் முற்கால அறிஞர்கள் (ஸலஃபுகள்) கூறுகிறார்கள்:من أخذ بنوادر العلماء خرج من الاسلام அறிஞர்களின் தனிப்பட்ட மஸாயில்களை எடுத்து நடப்பவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவார்.
ஷைகுல் இஸ்லாம் இப்னுதைமியா (ரஹ்) அவர்கள் கூட (தக்லீத் ஷக்ஸி) தனிநபரை பின்பற்றுவதை வாஜிப் என்பதாக கூறவில்லை.இருப்பினும்,தனது மனோஇச்சைக்கு வழிப்பட்டு ஒரு சமயம் ஒரு மத்ஹபை,மற்றொரு சமயம் வேறொரு மத்ஹபை ஏற்பது ஒன்றுப்பட்ட உம்மத்தின் பேரில் அனுமதியில்லை என்கிறார்.
فى وقت يقلدون من يفسد النكاح و فى وقت يقلدون من يصححه بحسب الغرض و الهوى و مثل هذا إلا يجوز باتفاق الائمة 
சில சமயங்களில் நிகாஹ் கூடாது எனும் இமாமை,மக்கள் பின்பற்றுகிறார்கள்.சிலசமயங்களில் நிகாஹ் கூடும் எனும் இமாமை பின்பற்றுகிறார்கள்.அதனை சரியானது என்பவர் முழுக்க சுயநலம்,மனோ இச்சையில் தான் உள்ளார்.இது போன்று செயல்படுவது ஒன்றுபட்ட அறிஞர்களின் கருத்தின்படி கூடாது.(ஆதாரம்:ஃபதாவா இப்னு தைமிய்யா பாகம்:2,பக்கம்:240)

எனவேதான்,தக்லீத் முத்லக்கை (பொதுவாக பின்பற்றுவதை) அனுமதி அளித்தால் இதுபோன்ற மனோஇச்சையை பின்பற்றும் அபாயங்கள் நிறைந்துள்ளது.இதனால்தான் உலமாக்கள் நான்காம் நூற்றாண்டில் தக்லீத் ஷஹ்ஸியை (தனிநபரை பின்பற்றுவதை) கட்டாயமாக்கினார்கள்.