Wednesday, May 6, 2020

Pj மறு ஆய்விற்கு மறுப்பு -நோன்பு திறந்த பிறகு ஓதும் துஆ



நோன்பு திறந்த பிறகு ஓதும் துஆ ஓர் ஆய்வு பகுதி:2 

நோன்பு திறந்த பிறகு ஓதும் தஹபள்ளமஉ வப்தல்லதில் உரூகு வ ஸபதல் அஜ்ரு..... என்ற துஆவை மத்ஹப் மறுப்பாளர்கள் பல வருடங்களாக ஓதி வந்தனர்.இது குறித்து மறுஆய்வு என்ற பெயரில் கட்டுரை எழுதி அந்த துஆவை பலகீனம் என்பதாக காரணத்தை கூறியுள்ளனர்.இது குறித்து நாம் மீண்டும் ஆய்வு செய்து பார்த்தபோது இந்த துஆ பலமானது, ஏற்கத்தக்கது தான் என்பது மீண்டும் உறுதியானது.(இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருந்தாலும் கூட அமல்களின் சிறப்புகளில் பலவீனமான ஹதீஸை அமல்செய்யலாம் என்பதுதான் நமது நிலைப்பாடும்,ஹதீஸ்களை வல்லுனர்களின் நிலைப்பாடுமாகும்) அதுமட்டுமின்றி ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூட இந்த துஆ ஏற்கத்தக்கது என்பதாகதான் கூறியுள்ளனர்.
  Pj இந்த துஆவை ஏன் ஏற்றார்? பிறகு ஏன் மறுத்தார்? எனும் காரணத்தை அறிய மறுஆய்வு கட்டுரையை முதலில் பார்ப்போம்.

//தஹபள்ளமவு… என்று ஆரம்பிக்கும் துஆ

இந்த நிலையில் நோன்பு துறக்கும்போது, தஹபள்ளமவு.. என்று தொடங்கும் துஆவைஓதுவது நபிமொழி என்று நாம் கூறினோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அபூதாவூத், ஹாகிம்,பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம்கூறினோம். நமது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்தோம்.

எதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில்கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள்பதிவு செய்து விட்டுப் பின்வருமாறுகூறுகின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரானமர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்துஅறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி,முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்றுகுறிப்பிடுகின்றார்.

ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான்பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.

மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்றுஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதைவழிமொழிந்தோம்.

இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான்ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்றுஅறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலானஅறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர்விமர்சனம் செய்திருந்தாலும் அதில்பெரும்பாலானவற்றுக்குப் பதிலும்அளிக்கப்பட்டுள்ளது.

ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம்பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம்.

மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில்அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.

ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறுஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும்எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை.

ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம்நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது.மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான்அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர்தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள்கூறுவது மறு ஆய்வின்போது நமக்குத் தெரிய வருகின்றது.//

நமது பதில்:ஹதீஸ்கலையில் அறியப்படாதவர் என்பதற்கு இரண்டு வகையான வரையறை உண்டு.ஒன்று: ஜஹாலது (அறியப்படாமை) ஐன். அதாவது ஒருவரது இருப்பு பற்றிய தகவல் இன்மை. இது அவரிடமிருந்து இருவர் அறிவிக்கும் பட்சத்தில் நீங்கிவிடும். இரண்டாவது வகை: ஒருவரது நம்பகத்தன்மை பற்றிய அறியாமை. நடுநிலையான அவர்காலத்து இமாம் ஒருவர் அவரது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தினால் அது நீங்கவிடும். 

மர்வான் இப்னு ஸாலிம் அவர்களிடமிருந்து இருவர் அறிவித்துள்ளனர்.

مروان بن سالم المقفع 
روى عن عبد الله بن الخطاب 
روى عنه الحسين بن واقد المروزي ،عزرة بن ثابت الانصاري 
(ஆதாரம்:தஹ்தீபுல் கமால் பாகம்:27/பக்கம்:390)

மர்வான் இப்னு ஸாலிம் அவர்களிடமிருந்து ஹுஸைன் இப்னு வாகித்,அஜ்ரா இப்னு ஜாபித் அல்அன்சாரி அறிவித்துள்ளனர்.

ஹுஸைன் இப்னு வாகித் குறித்து இமாம் ஹாபிழ் இப்னுல் ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் ثقة له اوهام பலமானவர் தடுமாற்றம் உள்ளவர் என நற்சான்று அளித்துள்ளார்.
(ஆதாரம்:தக்ரீபுத்தஹ்தீப், பக்கம்:251)

அஜ்ரா இப்னு ஸாபித் குறித்து இமாம் ஹாபிழ் இப்னுல் ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் ثقة ثابت பலமானவர், உறுதியானவர் என்பதாக நற்சான்று அளித்தார்.(ஆதாரம்:தக்ரீபுத்தஹ்தீப், பக்கம்:676)

இருவரும் பலமானவர்கள் என்பது தெளிவாகிறது.எனவே மர்வான் இப்னு ஸாலிம் அவர்கள் அறியப்படாமை ஐன்னில் உள்ளவர் இல்லை.

மர்வான் இப்னு ஸாலிம் அவர்கள் குறித்து ஹாபிள் இப்னுல் ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் "مقبول "(ஏற்கத்தக்கவர்) என்பதாக கூறியுள்ளார் (ஆதாரம்:தக்ரீபுத்தஹ்தீப் பக்கம்:931)

கேள்வியும் பதிலும்:
 தக்ரீபுத்தஹ்தீபின் முன்னுரையில் மக்பூலின் வரைவிலக்கணம் இவ்வாறு உள்ளது.

"மக்பூல்' (ஏற்கப்படுபவர்) என்ற சொல்லை எந்தக் கருத்தில் பயன்படுத்தினார் என்பதையும் அவரே விளக்கியுள்ளார். ஒருவர் குறைந்த எண்ணிக்கையிலான ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார். இவரைப் பற்றி இரண்டு விதமாக முடிவு செய்ய வேண்டும். அதாவது இவர் அறிவிக்கும் ஹதீஸைப் போன்று மற்றவர்களும் அறிவித்திருந்தால் அப்போது அவர் மக்பூல் (ஏற்கப்படுபவர்) எனக் குறிப்பிடப்படுவார். அவ்வாறு வேறு யாரும் அறிவிக்காவிட்டால் அவர் பலவீனமானவராவார்" (ஏகத்துவம், ஜனவரி -2006)
எனவே இந்த ஹதீஸ் இதனை தவிர வேறு வழியில் இல்லை.எனவே பலகீனமானதுதான்.

பதில்:மக்பூலின் வரைவிலக்கணம் குறித்து ஹாபிள் இப்னுல் ஹஜர் (ரஹ்) அவர்கள் எழுதியிருப்பது உண்மைதான்.எனினும்,ஆய்வு செய்து பார்க்கும்போது வரைவிலக்கணம் பல ஹதீஸ்களுக்கு பொருந்தவில்லை.குறிப்பாக pj அவர்கள் ஏற்கும் இரு ஹதீஸ்களுக்கும் கூட பொருந்தவில்லை என்பதுடன் எதிராகவும் உள்ளது.

1)முஸ்னத் அஹ்மதில் வரும் நெஞ்சில் கைகட்டும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பது பீஜே அவர்களின் வாதம் .இதில் உள்ள அறிவிப்பாளரில் ஒருவர் கபீஸா .

قبيصة بن هلب مقبول من الثالثة 
(தக்ரீபுத்தஹ்தீப், பக்கம்:798)

நெஞ்சில் கைகட்டுவதற்கு இதனை தவிர வேறு வழியில் ஹதீஸ் இல்லை.

2)முஸ்லிமில் வரும் ஹதீஸ் ஒட்டகக்கறி சாப்பிட்ட பிறகு உளு செய்தல் .இதன் அறிவிப்பாளர் தொடரில் ஒருவர் ஜஃபர் இப்னு அபிஸவ்ர்.

 جعفر بن ابي ثور مقبول من الثالثة 
(ஆதாரம்:தக்ரீபுத்தஹ்தீப், பக்கம்:198)

இந்த ஹதீஸ் வேறு வழியில் வரவில்லை.எனவே நோன்பு திறந்த பிறகு துஆ ஓதும் ஹதீஸ் பலகீனமானது என்றால் நெஞ்சில் கைகட்டும் ஹதீஸ்,ஒட்டகக்கறி சாப்பிட்ட பிறகு உளு செய்தல் எனும் இரு ஹதீஸ்களும் பலவீனமானது என கூறத் தயாரா?

கேள்வியும்,பதிலும்

கேள்வி:
கபீஸா "மக்பூல்" என்பதாக ஹாபிழ் இப்னுல் ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறியிருந்தாலும்,இவரைக் குறித்து இஜ்லி அவர்கள் பலமானவர் என்பதாக நற்சான்று அளித்துள்ளார்.அதே போன்று ஜஃபர் இப்னு அபிஸவ்ர் அவர்களைக் குறித்து மக்பூல் என்பதாக ஹாபிழ் இப்னுல் ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறியிருந்தாலும்,இவர் ஹதீஸை இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.எனவே இரு ஹதீஸ்களும் பலமானதுதான்.ஆனால், 
மர்வான் இப்னு ஸாலிம் குறித்து எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை.எனவே நோன்பு திறந்த பிறகு துஆ ஓதுதல் சம்பந்தமான ஹதீஸ் பலகீனமானதுதான்.

பதில்:நோன்பு திறந்த பிறகு ஓதும் துஆவில் வரும் அறிவிப்பாளர் மர்வான் இப்னு ஸாலிம் அவர்களின் அறிவிப்பை இமாம் நஸாயி (ரஹ்) அவர்களும்,இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்களும் ஆதாரம் எடுத்துள்ளனர்.இதுவே அவர் நம்பகமானவர் என்பதற்கு பெரும் சான்றாகும்.இமாம் நஸாயி (ரஹ்) அவர்கள் அறிவிப்பாளர் விஷயத்தில் கடும்போக்கு கொண்டவர்.எனினும்,மர்வான் இப்னு ஸாலிம் அவர்களை ஆதாரம் எடுத்துள்ளார்.இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்களும் ஜர்ஹு   வ தஃதீலில் (நிறை,குறை எடை போடும் துறை) திறன் பெற்றவர். (எனினும் வேறு அறிஞர்கள் தக்க காரணத்துடன் விமர்சனம் செய்திருந்தால் அது தனியானதொரு விஷயம்)

இதற்கு சான்று pj அவர்கள் வேறு சட்டத்தில் இதனை அங்கீகரித்துள்ளார்.

பாங்கு பின்பு ஸலவாத் ஓதலாம் என்பது பீஜே அவர்களின் நிலைப்பாடு.முஸ்லிம் ஹதீஸில் இது குறித்து ஹதீஸ் வந்துள்ளது.ஒருசாரார் இதனை பலவீனம் என்பதாக வாதிடுகின்றனர்.இதற்கு மறுப்பளித்து ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது.அதனின் இணையதள முகவரி

https://www.onlinepj.in/index.php/articles/articles/bangkup-pin-salavath

(இதனை முழுமையாக வாசித்து மனதில் நன்கு பதிய வைக்கவேண்டும்)

ஆய்வுக் கட்டுரையில் வந்துள்ள இரு செய்திகள் 


// تهذيب التهذيب - ابن حجر - (ج 1 / ص 76) 152 -س النسائي أحمد بن نفيل السكوني الكوفي روى عن حفص بن غياث وعنه النسائي وقال لا بأس به قال المزي ذكره أبن عساكر ولم أقف على روايته عنه وقال الذهبي مجهول قلت بل هو معروف يكفيه رواية النسائي عنه



அஹ்மத் பின் நுஃபைல் யாரென அறியப்படாதவர் என்று தஹபீ கூறுகிறார். இல்லை அவர் நம்பகமானவர் தான். அவர் வழியாக நஸாயீ அறிவித்திருப்பதே போதுமானதாகும் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.


تلخيص الحبير - ابن حجر - (ج 3 / ص 5) وزعم عبد الحق أن عبد الله بن عصمة ضعيف جدا ولم يتعقبه بن القطان بل نقل عن بن حزم أنه قال هو مجهول وهو جرح مردود فقد روى عنه ثلاثة واحتج به النسائي

அப்துல்லாஹ் பின் அஸமா என்பவர் யாரென அறியப்படாதவர் என்று அப்துல் ஹக் கூறுகிறார். அது நிராகரிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர் வழியாக மூன்று பேர் அறிவித்துள்ளனர். மேலும் நஸாயீ அவர்கள் இவர் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.//

இவ்வாறே மர்வான் இப்னு ஸாலிம் அவர்களை,இமாம் நஸாயி (ரஹ்),இமாம் அபூதாவூத் (ரஹ்) இருவரும் ஆதாரம் எடுத்திருப்பது போதுமானதாகும்.எனவே நோன்பு திறந்த பிறகு ஓதும் துஆ தஹபள்ளமவு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பதாக அறியமுடிகிறது.(அல்லாஹ் மிக அறிந்தவன்)






2 comments:

  1. இப்போது அறிஞர் பிஜே கூற்றுப்படி தஹபல்லமஹூ கூறலாம். அலஹம்துலில்லாஹ தெளிவாகி விட்டது அன்புடன் சகோதரன் சையத் ஹஜ்ஜி ஆபிதீன் கோட்லாம்பாக்கம் பண்ருட்டி

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு
    //இப்போது அறிஞர் பிஜே கூற்றுப்படி தஹபல்லமஹூ கூறலாம்// இதற்குரிய link இருந்தால் தரவும்

    ReplyDelete