Monday, March 4, 2019

குர்ஆன்,ஹதீஸ் ஒளியில் ஹனஃபி தொழுகை முறை


ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன்,ஹதீஸின் ஒளியில்
தொடர்:6


தஷஹ்ஹுத்திலே பார்வைகள் ஆட்காட்டி விரலை நோக்கி இருக்க வேண்டும்


ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையை பார்த்தார்கள்.கூறினார்கள்

لا يجاوز بصره اشارته
அன்னாரின் பார்வை ஆட்காட்டி விரலை கடக்கவில்லை.

(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத் 1/149,தலைப்பு:باب الاشارة فی التشهد ,சுனன் நஸாயி 1/173,தலைப்பு:باب موضع البصر فی التشهد)

தஷஹ்ஹுத் மெதுவாக ஓதுவது


عن عبد الله بن مسعود رضي الله عنه قال من السنة ان يخفي التشهد

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; தஷஹ்ஹுத் மெதுவாக ஓதுவது சுன்னத்தாகும்.

(ஆதாரம்:சுனன் அபூதாவூத் 1/149,தலைப்பு:باب اخفاء التشهد , 1/173, ஜாமிஉத்திர்மிதி 1/65, தலைப்பு:باب ما جاء انه يخفی التشهد )

முதல் இருப்பிலிருந்து எழும் போது தக்பீர் கூறியவாறு எழுவது


عن مطرف قال صليت انا و عمران بن حصين صلوة خلف علي بن ابی طالب رضي الله عنه فكان اذا سجد كبَّرَ و اذا نهض من الركعتين

ஹஜ்ரத் முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; நான் மற்றும் இம்ரான் இப்னு ஹுஸைன் அவர்ளும், ஹஜ்ரத் அலி இப்னு அபூதாலிப் (ரளி) அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதோம்.அன்னார் ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூறினார்கள் தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறினார்கள்.மேலும், இரண்டு ரக்அத்திலிருந்து எழும் போதும் தக்பீர் கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி 1/114,தலைப்பு:باب يكبر و ينهض من السجدتين )

மூன்றாவது ரக்அத்தின் ஆரம்பத்திலே கையை உயர்த்துதல் கூடாது


عن ابن عمر رضي الله عنه قال كان رسول الله ﷺ اذا دخل فی الصلوة رفع يديه نحو صدره و اذا رفع راسه من الركوع ولا يفعل بعد ذلك

ஹஜ்ரத் இப்னு உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போது இரு கைகளையும் நெஞ்சு வரை உயர்த்துவார்கள்.அதற்கு பிறகு ருகூவிலிருந்து எழும்போது செய்ய மாட்டார்கள்.
(கையை உயர்த்தமாட்டார்கள்)

(ஆதாரம்:அந்நாஸிஹ் வல் மன்ஸுஹ் லி இப்னு ஷாஹைன் பக்கம்:153,தலைப்பு:باب يقرا فی الاخريين بام الكتاب ,ஸஹீஹ் முஸ்லிம் 1/185,தலைப்பு:باب القراءة فی الظهر و العصر )

பர்ளு தொழுகையின் கடைசி இரு ரக்அத்திலும் சூரா பாத்திஹா ஓதுவது



عن ابي قتادة رضي الله عنه ان النبيﷺ كان يقرء فی الظهر فی الاوليين بام الكتاب و سورتين وفی الركعتين الاخريين بام الكتاب

அபூகதாதா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; லுஹர் தொழுகையின் முதல் இருரக்அத்தில் சூரா பாத்திஹா, துணை சூராக்கள் ஓதினார்கள்.கடைசி இருரக்அத்தில் பாத்திஹா மட்டும் ஓதினார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/107,தலைப்பு:باب يقرء فی الاخريين بام الكتاب ,ஸஹீஹ் முஸ்லிம் 1/185,தலைப்பு:باب القراءة فی الظهر و العصر )


கடைசி இருப்பு


عن عبد الله بن مسعود رضي الله قال كنا اذا صلينا خلف النبي ﷺ ...........فقال ان الله هو السلام فاذا صلی احدكم فليقل  التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النبي وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ِ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلا الله وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் நாங்கள் நின்று தொழுதோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ் ஸலாமாக இருக்கிறான்.உங்களில் ஒருவர் தொழுதால் அவர் தஷஹ்ஹுத்தில் அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத் ஓதட்டும்!

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/115,
தலைப்பு:باب التشهد فی الاخرة,
ஸஹீஹ் முஸ்லிம் 1/173,
தலைப்பு:باب التشهد فی الصلوة )


عن عبد الله بن مسعود رضي الله قال علمنی رسول الله ﷺ التشهد فی وسط الصلاة وفی اٰخرها

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; தொழுகையின் ஆரம்பத்தில் அதனின் இறுதியில் தஷஹ்ஹுத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தார்கள்.

(ஆதாரம் :முஸ்னத் அஹ்மத் 4/238,ஹதீஸ் இலக்கம்:4382)


தவர்ருக் (தஷஹ்ஹுத்தில் பித்தட்டின் ஓரத்தில் அமர்வது) செய்யாமல் இருப்பது


சுன்னத்தான அமர்வு வலது காலை நட்டி வைத்து  இடது காலை விரித்து வைப்பது

عن عبد الله بن عمر رضي الله و قال انما سنة الصلوة ان تنصب رجلك اليمنی و تثني اليسری

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; தொழுகையில் சுன்னத்தானது வலது காலை நட்டிவைத்து இடது காலை விரித்து வைப்பது.


(ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி 1/114,தலைப்பு:باب سنة الجلوس فی التشهد ,ஸுனன் நஸாயி 1/173, தலைப்பு:باب كيف الجلوس للتشهد الاول )


عن عائشة رضي الله عنها قالت كان رسول الله ﷺ يستفتح الصلوة بالتكبير و القراءة بالحمد لله رب العالمين ............. و كان يفرش رجله اليسری و ينصب رجله اليمنی

ஹஜ்ரத் ஆயிஷா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை தக்பீரை கொண்டும்,கிராஅத்தை அல்ஹம்துலில்லாஹ் ரப்பில் ஆலமீனை கொண்டும் ஆரம்பித்தார்கள். தஷஹ்ஹுத்தில் வலது காலை நட்டிவைத்து இடது காலை விரித்து வைத்தார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் 1/194, தலைப்பு:باب ما يجمع صفة الصلوة و ما يفتح به و يختم به )

தரூஷ் ஷரீஃப் ஓதுவது


عن فضالة بن عبيد رضي الله عنه قال سمع رسول الله ﷺ رجلا يدعو فی الصلوة لم يحمد الله و لم يصل علی النبي ﷺ فقال رسول اللهﷺ عجلت ايها المصلی ثم علمهم رسول الله ﷺ فسمع رسول الله ﷺ رجلا يصلی فمجد الله و حمده و صلی علی النبي ﷺ فقال رسول الله ﷺ ادع تجب و سل تعط

ஹஜ்ரத் ஃபுலாலதுப்னு உபைத் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்;
ஒரு மனிதர் தொழுகையில் அல்லாஹ்வை புகழவில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதவில்லை.இதனை பார்த்த
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை விரைப்படுத்துகிறீர்கள். பிறகு  பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை மக்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள். (முதலில் அல்லாஹ்வை புகழ்வது பிறகு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்பதை) பிறகு வேறொரு மனிதர் தொழுது கொண்டு இருந்தார்.அல்லாஹ்வை துதித்துக்கொண்டும்,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது தரூத் ஓதிக்கொண்டும் இருந்தார்.இதனை கேட்ட அண்ணலார் அவர்கள் கூறினார்கள்; "நீர் துஆ செய்வீராக! ஏற்கப்படும்.வேண்டுவீராக! கொடுக்கப்படும்."

(ஆதாரம்:ஸுனன் நஸாயி 1/189,தலைப்புباب التحميد و الصلوة علی النبي ﷺ فی الصلوة )

தரூத் ஷரீஃபின் வார்த்தைகள்


سالنا رسول الله ﷺ فقلنا يا رسول الله ﷺ كيف الصلوة عليكم اهل البيت ؟ فان الله قد علمنا كيف نسلم عليك قال قولوا اللهم صل علی محمد و علی ال محمد كما صليت علی ابراهيم و علی ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علی محمد و علی ال محمد كما باركت علی ابراهيم و علی ال ابراهيم انك حميد مجيد

ஹஜ்ரத் கஃப் இப்னு உஜ்ரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்டோம்
எப்படி உங்களின் மீதும் குடும்பத்தார் மீதும் ஸலவாத் சொல்வது? அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனை ஓதுங்கள் என கூறினார்கள்  اللهم صل علی محمد و علی ال محمد كما صليت علی ابراهيم و علی ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علی محمد و علی ال محمد كما باركت علی ابراهيم و علی ال ابراهيم انك حميد مجيد

(பொருள்: இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது உன் அருளைப் பொழிவாயாக! இப்ராஹீம் நபியின் மீதும் இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அபிவிருத்தி செய்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது நீ அபிவிருத்தி செய்வாயாக!)

( ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/477,தலைப்பு:باب يزفون النسلان فی المشی )


தஷஹ்ஹுத்திற்கு பிறகு  விரும்பிய துஆ


عن عبد الله بن مسعود رضي الله عنه قال كنا اذا صلينا خلف النبي ﷺ فقال ان الله هو السلام فاذا صلی احدكم فليقل التحيات لله .......... ان محمدا عبده و رسوله ثم ليتخير من الدعاء اعجبه اليه فيدعو

ஹஜ்ரத் அப்துல்லாஹ்
இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நாங்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் ஸலாமாக இருக்கிறான்.உங்களில் ஒருவர் தொழுதால் அவர் அத்தஹிய்யாத் ஓதட்டும்! பிறகு அவர் விரும்புகிற துஆவை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்!

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/115, தலைப்பு:باب ما يتخير من الدعاء بعد التشهد و ليس بواجب ,ஸஹீஹ் முஸ்லிம் 1/173,தலைப்பு:باب التشهد فی الصلوة )


துஆவின் வார்த்தைகள்


அல்லாஹுதஆலா குர்ஆனில் இப்ராஹீம் (அலை) அவர்களின் துஆவை கூறிக்காட்டுகிறான்

رب اجعلنی مقيم الصلوة و من ذريتی ربنا و تقبل دعاء ربنا اغفر لی و لوالدي و للمؤمنين يوم يقوم الحساب

(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!”
(சூரா இப்ராஹீம் 41:40)


عن ابی بكر الصديق رضي الله عنه انه قال لرسول الله ﷺ علمنی دعاء ادعو به فی صلاتی قال قل اللهم انی ظلمت نفسي ظلما كثيرا و لا يغفر الذنوب الا انت فاغفرلی مغفرة من عندك و ارحمنیْ انك انت الغفور الرحيم


ஹஜ்ரத் அபூபக்கர் (ரளி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில், தொழுகையில் ஓதும் படியான
துஆவை எனக்கு கற்றுக்கொடுக்கும்படி கூறினேன்.அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனை ஓதும்படி கூறினார்கள்

"அல்லாஹும்ம இன்னீ ழலம்து நஃப்ஸி ழுல்மன் கஸீரா வ லா யஃபிரு த்துனூப இல்லா அன்த ஃபஃபிர்லி மஃபிரதம் மின் இன்திக வர்ஹம்னி இன்னக அன்தல் ஃஙபூருர் ரஹீம்"

பொருள்: யா அல்லாஹ்!
நான் என்னின் மீது அதிகமான அநியாயம் இழைத்துவிட்டேன்.எனது பாவத்தை உன்னை தவிர மன்னிப்பவர் இல்லை.
எனவே என் பாவத்தை
எனக்கு கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ மன்னிப்பவனாக, கிருபையாளனாக இருக்கிறாய்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/115,தலைப்பு:باب الدعاء قبل السلام, ஸஹீஹ் முஸ்லிம் 1/347,باب الدعوات و التعوذ)


இமாமை முந்தக்கூடாது


عن انس رضي الله عنه قال صلی بنا رسول الله ﷺ ذات يوم فلما قضی الصلوة اقبل علينا بوجهه فقال يايها الناس انی امامكم فلا تسبقوني بالركوع ولا بالسجود ولا بالقيام ولا بالانصراف

ஹஜ்ரத் அனஸ் (ரளி) அறிவிக்கிறார்கள் ஒரு நாள் எங்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுக வைத்தார்கள்.
தொழுகையை முடித்த பிறகு எங்களை முன்னோக்கியவாறு கூறினார்கள்; மக்களே!
"நான் உங்களின் இமாமாக இருக்கிறேன்.எனவே நீங்கள் ருகூவில்,ஸுஜுதில், நிலை நிற்றலில்,தொழுகையை முடிப்பதில் என்னை முந்திவிடவேண்டாம்!"

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/180,தலைப்பு:باب تحريم سبق الامام بركوع او سجود و نحوهما )

தொழுகையை ஸலாத்தை கொண்டு நிறைவு செய்வது


عن عائشة رضي الله عنها قالت كان رسول الله ﷺ يستفتح الصلاة بالتكبير ....... وكان يختم الصلاة بالتسليم

ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை தக்பீரை கொண்டு ஆரம்பிப்பார்கள்....மேலும் தொழுகையை ஸலாமை கொண்டு முடிப்பார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/195,தலைப்பு:باب ما يجمع صفة الصلوة و ما يفتتح به ويختم به ,சுனன் அபூதாவூத்  1/121,தலைப்பு:باب من لم يجهر ببسم الله الرحمن الرحيم )

ஸலாமின் வார்த்தைகள்


عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي ﷺ انه كان يسلم عن يمينه و عن يساره السلام عليكم و رحمة الله السلام عليكم و رحمة الله

ஹஜ்ரத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள்  அறிவிக்கிறார்கள்; அன்னார் அவர்கள் வலது புறம்,இடது புறம் ஸலாம் கொடுத்தார்கள்.
'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்' 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்'


(ஆதாரம் :ஜாமிஉத்திர்மிதி 1/65,தலைப்பு:باب ما جاء فی التسليم فی الصلوة,ஷர்ஹு மஆனில் ஆஸார் 1/190,தலைப்பு:باب السلام فی الصلوة كيف هو )


ஸலாமின் முறை


عن عبد الله رضي الله عنه قال رايت رسول الله ﷺ يكبر فی كل خفض و رفع و قيام و قعود و يسلم عن يمينه و عن شماله السلام عليكم و رحمة الله السلام عليكم و رحمة الله حتی يُریٰ بياض خده و رايت ابابكر رضي الله عنه و عمر رضي الله عنه ما يفعلان ذلك

அப்துல்லாஹ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுவதை நான் பார்த்தேன்.தாழ்த்துதல், உயர்த்துதல்,நிற்றல்,அமர்தல் அனைத்து நிலைகளிலும் தக்பீர் கூறுவார்கள்.வலது புறம்,இடது புறம் திரும்பி ஸலாம் கொடுப்பார்கள். 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்' 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்' அப்பொழுது அன்னாரின் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும்.மேலும் இதையே அபூபக்கர் (ரளி) அவர்களும் உமர் (ரளி) அவர்களும் செய்தார்கள்.

(ஆதாரம்:ஸுனன் நஸாயி 1/194,باب كيف السلام علی اليمين)

عن عامربن سعد عن ابيه قال كنت اری رسول الله ﷺ يسلم عن يمينه و عن يساره حتی اری بياض خده

ஹஜ்ரத் ஆமிர் இப்னு ஸஃத்
(ரளி) அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள்; நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்தேன்.அண்ணலார் அவர்கள் வலது புறம் இடதுபுறம் ஸலாம் கொடுத்தார்கள்.அப்பொழுது அண்ணலாரின் கன்னத்தின் வெண்மையை நான் பார்த்தேன்.

(ஆதாரம்:ஸஹீஹ் முஸ்லிம் 1/216, தலைப்பு: باب السلام التحليل من الصلوة عند فراغها و كيفيته)

முக்ததிகள் (இமாமை பின்தொடர்பவர்கள்) இமாமின் ஸலாமுடன் ஸலாம் கொடுப்பது


عن عتبان بن مالك رضي الله عنه قال صلينا مع رسول الله ﷺ فسلمنا حين سلم

ஹஜ்ரத் இத்பான் இப்னு மாலிக் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் தொழுதோம்.அண்ணலார் அவர்கள் ஸலாம் கொடுத்த பொழுது நாங்களும் ஸலாம் கொடுத்தோம்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/116,தலைப்பு:باب يسلم حين يسلم الامام )

كان ابن عمر رضي الله عنه يستحب اذا سلم الامام ان يسلم من خلفه

ஹஜ்ரத் இப்னு உமர் (ரளி) அவர்கள் இமாம் ஸலாம் கொடுக்கும் பொழுது அவருக்கு பின்னால் இருப்பவரும் ஸலாம் கொடுப்பதை விரும்பினார்கள்.


சப்தமிட்டு ஓதும் தொழுகையில் சப்தமாகவும்,மெதுவாக ஓதும் தொழுகையில் மெதுவாகவும் கிராஅத் ஓதுவது


عن ابي هريرة رضي الله عنه يقول فی كل صلوة يقرا فما اسمعنا رسول الله ﷺ اسمعناكم و ما اخفی عنا اخفينا عنكم

அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் எல்லா தொழுகையிலும்  ஓதப்படவேண்டும்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  எங்களுக்கு கேட்கும்விதமாக ஓதியவற்றை உங்களுக்கு கேட்கும் விதமாக ஓதுகிறோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சப்தமின்றி ஓதியதை நாங்களும் சப்தமின்றி ஓதுகிறோம்.

(ஸஹீஹுல் புகாரி 1/106,தலைப்பு:باب القراءة فی الفجر ஸஹீஹ் முஸ்லிம் 1/170,தலைப்பு:باب وجوب قراءة الفاتحة فی كل ركعة )

தொழுகும் போது கண்களை மூடவேண்டாம்


عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله ﷺ اذا قام احدكم فی الصلوة فلا يغمض عينيه


ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவர் தொழுகைக்கும் நிற்கும் போது அவர் தமது கண்களை மூடவேண்டாம்

(ஆதாரம்:அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி 5/247,ஹதீஸ் இலக்கம்:10794,அல்முஃஜமுல் வஸீத் லித்தப்ரானி 1/603,ஹதீஸ் இலக்கம்:2218)

தொழுகையின் அனைத்து நிலைகளிலும் நிதானத்தை மேற்கொள்வது


அபூஹுரைரா (ரளி) அவர்கள் கூறினார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள்.


اذا قمت الی الصلاة فكبر ثم اقرء ما تيسر معك من القران ثم اركع حتی تطمئن راكعا ثم ارفع حتی تعتدل قائما ثم اسجد حتی تطمئن ساجدا ثم ارفع حتی تطمئن جالسا ثم اسجد حتی تطمئن ساجدا ثم افعل ذلك فی صلوتك كلها

நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும்! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக!' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/109,தலைப்பு:باب امر النبي ﷺ الذی لا يتم ركوعه بالاعادة ,ஸஹீஹ் முஸ்லிம் 1/170,தலைப்பு:باب وجوب قراءة الفاتحة فی كل ركعة )

இமாம் தொழுகையை நடுத்தரமாக  தொழுவைப்பது


عن ابي هريرة رضي الله عنه ان رسول الله ﷺ قال اذا صلی احدكم للناس فليخفف فان فيهم الضعيف و السقيم و الكبير و اذا صلی احدكم لنفسه فليطول ما شاء


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவர் மக்களுக்கு தொழுக வைக்கும் போது நிச்சயமாக அவர்களில் பலகீனமானர் நோயாளி வயதானவர் இருப்பபார்கள் எனவே தொழுகையை சுருக்கி கொள்ளட்டும் உங்களில் ஒருவர் தனியாக தொழுதால் விரும்புகிறவரை நீட்டிக்கொள்ளட்டும்.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/97,
اذا باب صلی لنفسه فليطول ما شاء, ஸஹீஹ் முஸ்லிம், 1/18தலைப் باب امر الاءمة بتخفيف الصلوة فی تمام الخ )


ஸலாமிற்கு பிறகு

இமாம் முக்ததிகளின் பக்கம் முன்னோக்குதல்

عن سمرة بن جندب رضي الله عنه قال كان النبي ﷺ اذا صلی صلوة اقبل علينا بوجهه

ஹஜ்ரத் ஸமுரா இப்னு ஜுன்துப் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை நிறைவு செய்த பிறகு எங்களின் பக்கம் முன்னோக்குவார்கள்.
(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/117,தலைப்பு:باب يستقبل الامام الناس اذا سلم )

இதே தலைப்பில் ஜைத் இப்னு காலித் ஜுஹைனி (ரளி) ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரளி) அவர்களிடமிருந்து அறிவிப்புகள் வந்துள்ளது.

(ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி 1/117,தலைப்பு:باب ايضا)

தொழுகைக்கு பிறகு திக்ருகள் 


ஹஜ்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்களிடமிருந்து வரும் அறிவிப்பு

ان فقراء المهاجرين اتوا رسول الله ﷺ فقالوا قد ذهب اهل الدثور بالدرجات العلی و النعيم المقيم فقال و ما ذاك قالوا يصلون كما نصلی و يصومون كما نصوم و يتصدقون و لا نتصدق و يعتقون ولا نعتق فقال رسول الله ﷺ افلا اعلمكم شيء تدركون به من سبقكم و تسبقون به من بعدكم ولا يكون احد افضل منكم الا من صنع مثل ما صنعتم قالوا بلی يارسول الله ﷺ قال تسبحون و تكبرون و تحمدون فی دبر كل صلوة ثلاثا وثلاثين مرة قال ابو صالح فرجع فقراء المهاجرين الی رسول الله ﷺ فقالوا سمع اخواننا اهل الاموال بما فعلنا ففعلوا مثله فقال رسول الله ﷺ ذلك فضل الله يؤتيه من يشاء


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏழை முஹாஜிர்கள் (சிலர்) வந்து, "செல்வச் சீமான்கள் (மறுமையின்) உயர் பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்) கொண்டு போய்விடுகின்றனர்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அது எவ்வாறு?" என்று கேட்டார்கள். அவர்கள், "(ஏழைகளாகிய) நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆனால், அவர்கள் தானதர்மங்கள் செய்கின்றனர். நாங்கள் (அவ்வாறு) தானதர்மங்கள் செய்(ய முடி)வதில்லை. அவர்கள் அடிமைகளை விடுதலை செய்கின்றனர். நாங்கள் (அவ்வாறு) அடிமைகளை விடுதலை செய்(ய இயல்)வதில்லை" என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா! (அதை நீங்கள் செயல்படுத்திவந்தால் இந்தச் சமுதாயத்தில்) உங்களை முந்தி விட்டவர்களையும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களையும் நீங்கள் எட்டிவிடுவீர்கள். உங்களைவிட வேறெவரும் சிறந்தவர்களாக ஆகிவிட முடியாது; உங்களைப் போன்று அவர்களும் செயல்படுத்தினால் தவிர" என்று கூறினார்கள். முஹாஜிர்கள், "ஆம் (அறிவியுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அது யாதெனில்) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் "சுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ் தூயவன்) என்றும், "அல்லாஹு அக்பர்" (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்றும், "அல்ஹம்து லில்லாஹ்" (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்றும் (மூன்றையும் சேர்த்து) முப்பத்து மூன்று முறை கூறுங்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
)அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ சாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
பிறகு அந்த ஏழை முஹாஜிர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து "செல்வச் சீமான்களான எங்கள் சகோதரர்கள் நாங்கள் செய்துவருவதைக் கேள்விப்பட்டு அவ்வாறே அவர்களும் செய்துவருகின்றனர்" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இது அல்லாஹ்வின் அருட்கொடை. அவன் நாடியவர்களுக்கு அதை வழங்குகிறான்" என்று சொன்னார்கள்.


ஹஜ்ரத் கஃப் இப்னு உஜ்ரா (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்


عن كعب بن عجرة عن رسول الله ﷺ قال معقبات لا يخيب قائلهن او فاعلهن ثلاثا و ثلاثين تسبيحة و ثلاثين تحميدة و اربعا و ثلاثين تكبيرة فی دبر كل صلوة

நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு தொழுகையிலும் 33 தடவை ஸுப்ஹானல்லாஹ் 33 தடவை அல்ஹம்துலில்லாஹ் 34 தடவை அல்ஹம்துலில்லாஹ் கூறிவருபவர் தோல்வியடைய மாட்டார்.

(ஆதாரம் ஸஹீஹ் முஸ்லிம் 2/219, தலைப்பு:باب استحباب الذكر بعد الصلوة )

ஹஜ்ரத் ஸவ்பான் ரளி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்


عن ثوبان رضي الله عنه قال كان رسول الله ﷺ اذا انصرف من صلوته استغفر ثلاثا و قال اللهم انت السلام و منك السلام و تباركت ذا الجلال و الاكرام وفی رواية قال ياذالجلال و الاكرام

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை முடித்த பிறகு மூன்று தடவை இஸ்திஃபார் செய்வார்கள்.மேலும் اللهم  انت السلام و منك السلام و تباركت ذا الجلال و الاكرام وفی رواية قال ياذالجلال و الاكرام ((அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம் வ மின்கஸ் ஸலாம் வ தபாரக்த தல் ஜலாலி வல் இக்ராம்)) மற்றொரு அறிவிப்பில் வருகிறது யா தல் ஜலாலி வல் இக்ராம் என்ற துஆவை ஓதுவார்கள்.


ஹஜ்ரத் முஙீரா இப்னு ஷுஅபா (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்


ان النبي ﷺ كان يقول فی دبر كل صلوة مكتوبة لا اله الا الله وحده لا شريك له له الملك و له الحمد و هو علی كل شيء قدير اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا يقنع ذا الجد منك الجد


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகைக்கு பிறகு இதனை கூறிக்கொண்டு இருந்தார்கள்.

لا اله الا الله وحده لا شريك له له الملك و له الحمد و هو علی كل شيء قدير اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا يقنع ذا الجد منك الجد

"லா இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்க் வ லஹுல் ஹம்த் வ ஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர் அல்லாஹும்ம மானிஅ லிமா அஃதய்த வலா முஃதிய லிமா மனஃத வ லா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க ஜத்"

அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் வேறு யாருமில்லை.அவன் தனித்தவன்.அவனுக்கு இணையில்லை.அவனுக்கு ஆட்சி உரித்தானது.அவன் அனைத்து பொருட்களின் மீது சக்திபெற்றவன். யா அல்லாஹ் நீ கொடுத்ததை (யாரும்) தடுக்க முடியாது.நீ தடுத்ததை (யாரும்) கொடுக்க முடியாது.எந்தச் செல்வரின்  செல்வமும் அவருக்கு உன்னிடம்  பயனளிக்காது.(ஆதாரம் ஸஹீஹுல் புகாரி 1/117,தலைப்பு: باب الذكر بعد الصلوة ,ஸஹீஹ் முஸ்லிம் 1/218,தலைப்பு:باب استحباب الذكر بعد الصلوة )


 مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ إِلَّا أَنْ يَمُوتَ 

அலி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
இந்த மிம்பரின் மீது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தவாறு கூறியதை நான் கேட்டேன்.ஒவ்வொரு
தொழுகைக்கு பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதுகிறாரோ அவர் சொர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர தடையில்லை.
(ஆதாரம்:ஷுஅபுல் ஈமான் லில்பைஹகீ 2/458,تخصيص اية الكرسي بالذكر ,ஹதீஸ் இலக்கம்:2395,மிஷ்காதுல் மஸாபீஹ் 1/89,باب الذكر بعد الصلاة )

No comments:

Post a Comment