Saturday, September 5, 2020

பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?

தற்காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழலாமா? (ஓர் ஆய்வு தொடர்:5) 

 பெண்கள் பள்ளிவாசல் செல்வது கூடாது என்பது குறித்து ஸஹாபாக்கள்,இமாம்களின் வழிகாட்டுதல்கள் 

 1)ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்: 

لوادرک رسول الله صلى الله عليه وسلم ما احدث النساء لمنعهن كما منعت نساء بنی اسرائیل 
 
ஆயிஷா (ரலி) அறிவித்தார். பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி(ஸல்) அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள். இதனை அறிவித்த உம்ராவிடம் 'பனு இஸ்ராயீல் பெண்கள் தடுக்கப்பட்டிருந்தார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர் 'ஆம்' என்றார் என்று யஹ்யா இப்னு ஸயீத் அறிவித்தார்கள்.(ஆதாரம்:புகாரி, ஹதீஸ் இலக்கம்:869) 

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் பதிவு செய்த மற்றோரு ஹதீஸ்

 حدثنا الحكم، حدثناعبد الرحمن بن ابی الرجال فقال ابی: یذکرہ عن أمه عن عائشة عن النبی ل قال لاتمنعوا اماء الله مساجد الله وليخرجن تفلات: قالت عائشة:ولورأى حالهن اليوم منعهن 
 
ஆயிஷா  (ரளி) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் அடிமையான பெண்களை பள்ளிவாசலை விட்டும் தடுக்காதீர்.வீட்டிலிருந்து (துர்வாடையான) கந்தல் ஆடையில் வெளியே வரட்டும்.பிறகு ஆயிஷா ரளி அவர்கள் கூறினார்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இன்றைய சூழ்நிலையை பார்த்திருந்தால் பெண்களை பள்ளிவாசலை விட்டும் தடுத்திருப்பார்கள்.(ஆதாரம்:முஸ்னத் அஹ்மத்,ஹதீஸ் இலக்கம்:24406) 

2)ஹள்ரத் உமர் (ரளி) ,ஹள்ரத் ஜுபைர் இப்னுல் அவ்வாம் (ரளி) பெண்கள், பள்ளிவாசல் செல்வதை விரும்பவில்லை.இது குறித்து நிகழ்வை முன்னால் விரிவாக பார்த்தோம். 

3)அப்துர்ரஹ்மான் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

 قفال: كان الرجال و النساء في بني إسرائيل يصلون جميعا، فكانت المرأة إذاكان لها الخليل تلبس القالبين تطول بهما لخليلها فالقی الله عليها الحيض فكان ابن مسعود يقول: أخروهن حيث اخرهن الله 

 பனூஇஸ்ராயிலின் ஆண்களும்,பெண்களும் சேர்ந்து தொழுவார்கள்.எதேனும் பெண்ணிற்கு காதலன் இருந்தால் கட்டையான செருப்பை (உயரமான செருப்பை) அணிவாள்.அவனை பார்ப்பதற்கு உயரமாக தெரிவதற்காக.(இந்த முறையற்ற செயலால்) அவர்கள் மீது ஹைள் விதிக்கப்பட்டது.(ஹைளின் காலம் நீண்டு விட்டது) மேலும் அந்த சூழ்நிலையில் பள்ளிவாசலுக்கு வருவது தடுக்கப்பட்டது.பிறகு இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ் வெளியாக்கிய விதத்தில் நீங்களும் அவர்களை வெளியாக்குங்கள்.(ஆதாரம்:ஸஹீஹ் இப்னு குஜைமா ஹதீஸ் இலக்கம்:1700) 

 இந்த மவ்கூபான (நபித்தோழரின் கூற்று) அறிவிப்பை இமாம் இப்னு குஜைமா (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் என்கிறார்கள்.இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் என்று கூறுகிறார்.இமாம் ஹைஸமி (ரஹ்) அவர்கள் ஸஹீஹைனின் அறிவிப்பாளர் தொடர் என்கிறார்.(ஆதாரம்:பத்ஹுல்பாரி,2/350,மஜ்மஉஜ்ஜவாயித் 2120) 

 இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களின் மிக தெளிவான வாசகம் "எந்த இடத்தில் (பள்ளிவாசலில்) பெண்களை அல்லாஹ் வெளியாக்கினானோ அவ்விதமாக (அல்லாஹ்வை பின்பற்றி) நீங்களும் அங்கிருந்து பெண்களை வெளியாக்குங்கள்." 

 இது மட்டுமின்றி மற்றோர் அறிவிப்பை ஹள்ரத் அபூஅம்ர் ஷைபானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 
 رايت ابن مسعود يحصب النساء يخرجهن من المسجد يوم الجمعة. 

 ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் ஜும்ஆ நாளில் பள்ளிவாசலுக்கு வந்த பெண்களை கற்களால் அடித்து விரட்டியதை நான் பார்த்தேன்.(ஆதாரம்:முஸ்னத் இப்னுல் ஜஃத்,467) 
 
இமாம் ஹைஸமி (ரஹ்) அவர்கள்,இமாம் பூசிரி (ரஹ்) அவர்கள் பலமான அறிவிப்பாளர்கள் என்கிறார்கள்.இமாம் இப்னு ஹஜர் ரஹ்) அவர்கள்,இமாம் முன்திரி ரஹ் அவர்கள் அறிவிப்பாளர் தொடர் குறித்து எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்கிறார்கள்.(ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித் :2119,இத்ஹாபுல் ஹியரா அல்முஹிர்ரா லில்பூசிரி :1515,அல்மதாலிபுல் ஆலியா 4/653 ஹதீஸ் இலக்கம்:685,அத்தர்ஙீப் வத்தர்ஹீப் 1/146,516) 

4)அபூஅப்துர்ரஹ்மான் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரளி) 

ابن عمر رضي الله تعالى عنهما يقوم يحصب النساء يوم الجمعة يخرجهن من المسجد 

 இப்னு உமர் (ரளி) அவர்கள் ஜும்ஆ நாளில் நின்றுக்கொண்டு பள்ளிவாசலுக்கு வரும் பெண்களை பொடிக்கற்களால் அடித்து விரட்டுவார்கள்.(ஆதாரம்:உம்ததுல் காரி 6/158) இதனின் அறிவிப்பாளர் தொடர் இல்லை.எனினும்,இதனை வலுப்படுத்தும் ஆதாரப்பூர்வமான மற்றோரு அறிவிப்பு 
 
இமாம் நாபிஃ அவர்கள் அறிவிக்கிறார்கள்:عن كان ابن عمر أنه كان لا يخرج نساءه في العيدين 

இப்னு உமர் (ரளி) அவர்கள் தமது குடும்ப பெண்களை ஈத் தொழுகைக்கு அனுப்பமாட்டார்கள்.(ஆதாரம் இப்னுஅபூஷைபா :5845) 

 மற்றோர் அறிவிப்பு كان عبد الله بن عمر يخرج إلى العيدين في استطاع من أهله 

ஈத்தொழுகைக்கு தனது குடும்ப பெண்களில் சாத்தியம் இருப்பவர்களை அனுப்புவார்கள்.(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபூஷைபா :5837) 

 இதனைக் கொண்டு கருத்து வயோதிக பெண்களை அனுப்புவார்கள்.ஏனெனில் அவர்களின் மூலம் குழப்பம் ஏற்படுவது அரிதாகும்.எனவே இப்னு உமர் (ரளி) அவர்களிடத்திலும் வாலிப பெண்கள்,அழகான பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்வது சரியில்லை. 5) அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரளி)

"عن عبد الله بن عباس ان امراة سئلته عن الصلاة في المسجد يوم الجمعة فقال : صلاتك في مخدعك أفضل من صلاتك فى بيتك وصلاتك في بيتك أفضل من صلاتك فی حجرتك صلاتك في حجرتك أفضل من صلاتك في مسجد قومك

 ஒரு பெண்மணி ஜும்ஆ தொழுகையை பள்ளிவாசலில் தொழுவது குறித்து கேட்டார்.இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அனுமதி கொடுப்பதற்கு பதிலாக கூறினார்:உனது வீட்டின் உள்அறையில் தொழுவது வீட்டின் பொதுஅறையில் தொழுவதை விட சிறந்தது.வீட்டின் பொதுஅறையில் தொழுவது வீட்டின் பொதுவெளியில் தொழுவதை விட சிறந்தது.வீட்டின் பொதுவெளியில் தொழுவது உனது சமூகத்தின் பள்ளிவாசலில் தொழுவதை விட சிறந்தது.(ஆதாரம்:முஸன்னப் இப்னுஅபூஷைபா:7697) 

6)இமாம் அப்துர்ரஹ்மான் இப்னு காஸிம் (ரஹ்) 

 قال كان القاسم شيء على العواتق لا يدعهن يخرجن في الفطر والأضحی 

 இமாம் காஸிம் இப்னு முஹம்மது இப்னு அபூபக்கர் சித்திக் (ரஹ்) அவர்கள் வாலிபபெண்கள் விஷயத்தில் கடுமையை கடைப்பிடிப்பார்கள்.அவர்களை ஈதுல்பித்ர்,ஈதுல்அள்ஹா வெளியேற அனுப்பமாட்டார்கள்.(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபூஷைபா :584) 

7)இமாம் இப்ராஹீம் நகயி (ரஹ்) 

 قال كره للشابة أن تخرج إلى العيدين 

வாலிப பெண்கள் ஈத் தொழுகைக்கு செல்வது மக்ரூஹ். (வெறுக்கத்தக்கது) (ஆதாரம்:முஸன்னிப் இப்னு அபூஷைபா:5848) 

 மற்றோர் அறிவிப்பில் இமாம் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

إبراهيم، قال: كان لإبراهيم ثلاث نسوة فلم يكن يدعهن يخرجن إلى جمعة ولا جماعة 

இப்ராஹீம் நகயி (ரஹ்)அவர்களுக்கு மூன்று மனைவிகள் இருந்தனர்.அவர்களில் யாரையும் ஜும்ஆ தொழுகை,ஜமாஅத் தொழுகைக்கு அனுப்பமாட்டார்கள்.(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபூஷைபா:7703) 

8)இமாம் இப்னு ஜுரைஜ் (ரஹ்)

இமாம் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: عطاء قال: قلت له: أيحق على النساءإذاسمعن الأذان أن يجبن کماهو حق عل الرجال قال: لا لعمري 

நான் அதா இப்னு அபூரிபாஹ் அவர்களிடத்தில் கேட்டேன்.ஆண்கள் பாங்கு சப்தத்தை கேட்டால் பள்ளிவாசலுக்கு செல்வதற்கு உரிமை உண்டு.பெண்களுக்கும் இந்த உரிமை உண்டா? அதா (ரஹ்) அவர்கள்,சத்தியமிட்டு அவர்களுக்கு உரிமை இல்லை என கூறினார்கள்.(ஆதாரம்:முஸன்னப் அப்துர்ரஜ்ஜாக்:5106) 

9)இமாம் ஸுப்யான் ஸவ்ரி (ரஹ்) 

 "عن سفيان الثوري: أنه كره اليوم الخروج للنساء إلى العيد“  
இமாம் ஸுப்யான் ஸவ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:இந்த காலத்தில் பெண்கள் ஈத் தொழுகைக்கு செல்வது மக்ரூஹ் (ஆதாரம்:சுனன் திர்மிதி:540) 

10)இமாம் ஹிஷாம் இப்னு உர்வா (ரஹ்)

عن أبيه أنه كان لا يدع امرأة من أهله تخرج إلى فطر ولا إلى أضحى » 

 இமாம் உர்வா (ரஹ்) அவர்கள் தன் வீட்டின் பெண்களை ஈதுல் பித்ர்,ஈதுல் அள்ஹா செல்வதற்கு அனுமதி தரமாட்டார்கள்.(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபூஷைபா:5846) 

11)இமாம் இப்ராஹீம் நகயி (ரஹ்)

قال:كان لعلقمة امرأة قد خلت فى السن تخرج إلى العيدين 

இமாம் அல்கமா (ரஹ்) அவர்களின் மனைவி வயோதிகம் அடைந்த பிறகு தான் ஈத் தொழுகைக்கு சென்றார்கள்.(ஆதாரம்:முஸன்னப் இப்னு அபூஷைபா :540) 

முக்கிய குறிப்பு:நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வபாத்திற்கு பிறகு ஸஹாபாக்கள், வாலிபபெண்களை பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்வதற்கு அனுமதி கொடுத்தார்கள் என்பதாக ஓர் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடரும் கூட நிரூபணமாகவில்லை.

No comments:

Post a Comment