Thursday, August 5, 2021

மத்ஹபுகளின் அவசியம் -குர்ஆன்,சுன்னா ஒளியில்/குற்றச்சாட்டுகளும் பதில்களும்/

மத்ஹபுகளின் அவசியம் தொடர்:11

ஸஹாபாக்களின் காலத்தில் தனிநபரை பின்பற்றுதல் 
(தக்லீத் ஷஹ்ஷி) பகுதி:2

மூன்றாவது ஆதாரம்
عن معاذ بن جبل رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم لما أراد أن يبعث معاذا إلى اليمن قال كيف تقضي إذا عرض لك قضاء قال أقضي بكتاب الله قال فإن لم تجد في كتاب الله قال فبسنة رسول الله صلى الله عليه وسلم قال فإن لم تجد في سنة رسول الله صلى الله عليه وسلم ولا في كتاب الله قال أجتهد رأيي ولا آلو فضرب رسول الله صلى الله عليه وسلم صدره وقال الحمد لله الذي وفق رسول رسول الله لما يرضي رسول الله ஜாமிஉத்திர்மிதி,ஸுனன் அபூதாவூத் போன்ற நூல்களில் முஆத் இப்னு ஜபல் ரளி அவர்களின் அறிவிப்பு: நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரளி) அவர்களை யமன் தேசத்திற்கு அனுப்பும் போது "உம்மிடத்தில் ஏதேனும் மஸ்அலா வந்தால் எப்படி தீர்வு செய்வீர் எனக் கேட்டார்கள்"? அல்லாஹ்வின் வேதத்திற்கு ஏற்ப தீர்ப்பு செய்வேன் என்றார்கள்.அல்லாஹ்வின் வேதத்தில் தீர்வு இல்லையெனில் என்ன செய்வீர்? அல்லாஹ்வின் தூதரின் சுன்னத்திற்கு ஏற்ப தீர்ப்பு அளிப்பேன் என்றார்கள்.அல்லாஹ்வின் வேதம்,சுன்னாவில் தீர்வு இல்லையெனில் என்ன செய்வீர்? எனது கருத்தின்படி ஆய்வு செய்வேன்.அதில் குறைவு செய்யமாட்டேன்.இதன்பேரில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (மகிழ்ச்சியில்) முஆத் (ரளி) அவர்களின் நெஞ்சில் தனது புனிதகரத்தால் அடித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் பொருந்திக் கொள்வதை தூதரின் தூதுவருக்கு (முஆத் இப்னு ஜபல்) அருள்புரிந்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.(ஆதாரம்:ஸுனன் அபூதாவூத்,பாடம்:كتاب الاقضية தலைப்பு:باب اجتهاد الرأي فى القضاء ) 
இந்த சம்பவத்தில் தனிநபரை தக்லீத் செய்வதற்கு பெரும் ஆதாரமாகும்.இதில் ஒரு விஷயத்தை ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பது பொருத்தமாகும்.அதாவது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் யமன் தேசத்திற்கு தனது மார்க்க ஞானம் பெற்ற ஸஹாபாக்களில் தனிச்சிறப்பு பெற்ற ஸஹாபியை அனுப்பியுள்ளார்கள்.அவரை நீதிபதியாக,ஆசிரியராக,முஜ்தஹிதாக ஆக்கி யமன்வாசிகளுக்கு அவரை பின்பற்றுவதை அவசியமாக்கினார்கள்.குர்ஆன், சுன்னாவிலிருந்து மட்டுமல்ல மாறாக,கியாஸ் (ஒப்பீடு) இஜ்திஹாதிற்கு ஏற்ப தீர்ப்பளிப்பதை அனுமதித்துள்ளார்கள்.இதன் மூலம் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் யமன் வாசிகளுக்கு அவரை பின்பற்றுவதை வலியுறுத்தியுள்ளார்கள் என்பதை தவிர வேறு என்ன காரணம் இருக்கமுடியும்?ஹள்ரத் முஆத் (ரளி) அவர்கள் யமன் தேசத்திற்கு நீதிபதியாக மட்டும்வரவில்லை.மாறாக,ஆசிரியர்,
முஃப்தி (தீர்ப்பளிப்பவர்) என்ற தகுதியின் பேரில் புறப்பட்டுச் சென்றார்கள்.எனவே இந்த ஹதீஸின் கருத்தானது ஆட்சியாளர் என்பது சரியில்லை. ஸஹீஹுல் புகாரியில் வருகிற அறிவிப்பு: 
عن الأسود بن يزيد قال أتانا معاذ بن جبل باليمن معلما وأميرا فسألناه عن رجل توفي وترك ابنته وأخته فأعطى الابنة النصف والأخت النصف 
அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் யமன் நாட்டுக்கு எங்களின் போதகராகவும் ஆட்சியாளராகவும் வந்தார்கள். அன்னாரிடம் நாங்கள், தம் மகளையும் சகோதரியையும்விட்டுவிட்டு இறந்த ஒருவரைக் குறித்து (பாகப் பிரிவினை தொடர்பாக)க் கேட்டோம். அப்போது அவர்கள் (மொத்தச் சொத்தில்) மகளுக்குப் பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் அளிக்கும்படி கூறினார்கள். (ஆதாரம்:ஸஹீஹ் புகாரி,பாடம்:كتاب الفرائض தலைப்பு:باب ميراث البنات 2/997) இதில் ஹள்ரத் முஆத் இப்னு ஜபல் (ரளி) அவர்கள் முஃப்தி எனும் தகுதியின் படி தீர்ப்பளித்துள்ளார்.அதற்கு ஆதாரத்தை விளக்கவில்லை.அதனை தக்லீத் (பின்பற்றுதல்) என கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்தில் முஆத் (ரளி) அவர்கள் ஆதாரத்தை கூறவில்லையென்றாலும் அவர்களின் தீர்ப்பானது குர்ஆன்,சுன்னாவின் பேரில்தான் இருந்துள்ளது. மற்றொரு பத்வாவின் தீர்ப்பானது முஆத் (ரளி) அவர்களின் ஆய்வின் பேரில் இருந்துள்ளது ஹள்ரத் அபுல் அஸ்வத் தைலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 
عن أبى الاسود الديلى قال كان معاذ باليمن فارتفعوا إليه في يهودي مات وترك أخا مسلماً، فقال معاذ: إني سمعت رسول الله عنه يقول إن الإسلام يزيد ولا ينقص فورثه முஆத் (ரளி) அவர்கள் யமனில் இருந்தார்கள்.யஹுதி,முஸ்லிம் சகோதரரை விட்டுவிட்டு மரணித்துவிட்டார்.(முஸ்லிம் சகோதரர் வாரிசாகுவாரா? இல்லையா?) என்பதை குறித்து மக்கள் அவரிடத்தில் வந்தனர்.அதற்கு ஹள்ரத் முஆத் (ரளி) அவர்கள் கூறினார்கள்; "இஸ்லாம் கூட்டவும் செய்யாது.குறைக்கவும் செய்யாது". எனவே அவர் வாரிசு சொத்தை பெறுவார் என்பதாக தீர்ப்புக்கொடுத்தார்கள். (ஆதாரம்:முஸ்னத் அஹ்மத் 5/230,236) இங்கு ஹள்ரத் முஆத் (ரளி) ஆய்வின் பேரில் வாரிசுரிமையுடன் சம்பந்தப்படாத ஹதீஸிலிருந்து சட்டத்தை எடுத்துள்ளார்கள்.இது அவரின் ஆய்வின் பேரில் உள்ளது.இதனை யமன்வாசிகள் ஏற்றனர். 
விளக்கம்:பெரும்பாலான ஸஹாபாக்கள்,புகஹாக்களிடத்தில் முஸ்லிம்,காபிருக்கு வாரிசாக மாட்டார்.நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் முஸ்லிம் காபிருக்கு வாரிசாக மாட்டார். 

முஸ்னத் அஹ்மத்,முஃஜமு தப்ரானியில் வரும் அறிவிப்பு: 
أن معاذا قدم على اليمن فلقيته امرأة من خولان ....... فقامت فسلمت على معاذ ....فقالت من أرسلك أيها الرجل قال لها معاذ أرسلني رسول الله صلى الله عليه وسلم قالت المرأة أرسلك رسول الله صلى الله عليه وسلم وأنت رسول رسول الله صلى الله عليه وسلم أفلا تخبرني يا رسول رسول الله صلى الله عليه وسلم فقال لها معاذ سليني عما شئت 
ஹள்ரத் முஆத் (ரளி) அவர்கள் யமன் தேசத்திற்கு வந்தபோது கவ்லான் பகுதியை சேர்ந்த பெண்மணி அவர்களிடத்தில் வந்தாள்.ஸலாம் கூறினாள்.மனிதரே! உம்மை யார் அனுப்பினார்கள்? ஹள்ரத் முஆத் (ரளி) அவர்கள் கூறினார்கள்;என்னை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பினார்கள்.பெண்மணி கூறினாள்;அல்லாஹ்வின் தூதர் உம்மை அனுப்பினாரா? அல்லாஹ்வின் தூதரின் தூதுவரா?நீர் எனக்கு (தீனின் விஷயங்களை)கூறமாட்டீரா? அதற்கு என்னிடத்தில் விரும்பியதை கேளுங்கள் என்று பதில் அளித்தார்கள்.(ஆதாரம்:மஜ்மஉஜ்ஜவாயித் 4/307,308 தலைப்பு:باب حق الزوج على المرأة) ஹள்ரத் முஆத் (ரளி) அவர்கள் அதிகாரி என்பதாக மட்டும் அனுப்பப்படவில்லை.மாறாக, பெருமானாரின் தூதுவர் என்பதாகவும்,மக்களுக்கு மார்க்க சட்டங்களை போதிப்பது அவர்களின் கடமையாக இருந்தது.இதன் படி அந்தப் பெண்மணி சந்தேகங்களை கேட்டாள்.அவளின் சூழ்நிலையை புரிந்து ஹள்ரத் முஆத் (ரளி) அவர்கள் என்னிடத்தில் விரும்பியதை கேள் என்றார்கள்.இந்த ஹதீஸின் பிற்பகுதியில் வருகிற விஷயம் மனைவி, கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என அந்தப் பெண் கேட்டாள்.அதற்கு முஆத் (ரளி) அவர்கள் ஆயத்தையோ ஹதீஸையோ கூறவில்லை.மாறாக,இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு ஏற்ப பதில் அளித்தார்கள்.அதற்கு எந்த ஒரு ஆதாரமும் கூறவில்லை.அவர்கள் நீதிபதியாக மட்டும் அனுப்பப்படவில்லை.மாறாக,பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் தூதுவர் எனும் அந்தஸ்த்தில் மக்களுக்கு ஷரீஅத்தின் சட்டங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.மக்கள் அதனை தக்லீத் செய்யவேண்டும் என்பதை தவிர அவரை அனுப்பியதற்கு வேறு என்ன காரணம் இருக்கும்? பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களில் ஹலால்,ஹராம் மிக அறிந்தவர் என்பதாக சிறப்பித்துக் கூறப்பட்டவர்களில் ஹள்ரத் முஆத் இப்னு ஜபல் (ரளி) அவர்கள் குறிப்பிடதக்கவர். அன்னார் யமன்வாசிகளுக்கு மட்டுமல்ல.மற்ற ஸஹாபாக்களும் அவரை பின்பற்றினார்கள். மற்றோர் அறிவிப்பில் 
عن أبي مسلم الخولاني قال أتيت مسجد أهل دمشق فإذا حلقة فيها كهول من أصحاب النبي صلى الله عليه وسلم (و فى رواية كثير ابن هشام:فإذا فيه نحو ثلاثين كهلا من أصحاب النبي صلى عليه وسلم) وإذا شاب فيهم أكحل العين براق الثنايا كلما اختلفوا في شي ردوه إلى الفتى فتى شاب قال قلت لجليس لى من هذا؟ قال هذا معاذ بن جبل 
டமாஸ்கஸ் நகரில் ஒரு பள்ளிவாசல். ஏறக்குறைய முப்பதுபேர் கொண்ட தோழர்களின் கல்வி பயிலும் குழு ஒன்று அமர்ந்திருந்தது. அனைவரும் மூத்த தோழர்கள். அவர்களுடன் அமைதியாய் இளைஞர் (முஆத்) அமர்ந்திருந்தார். அவரின் கண்களில் சுர்மாவும்,பற்கள் பளிச்சென இருந்தன.தோழர்கள் மத்தியில் ஏதாவது ஒன்றைப் பற்றி கருத்து வேறுபாடு தோன்றும்போதெல்லாம், அவர்கள் முஆதை அணுகித் தங்களது சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். அபூ முஸ்லிம் அல்-கவ்லானி என்பவர் அப்பொழுது அந்தப் பள்ளிவாசலுக்கு வந்திருந்தார். அவருக்கு ஆச்சரியமாயிருந்தது. 'வயதில் மூத்த தோழர்களுக்கு இளைஞர் ஒருவர் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்; அவர்களும் அப்படி கவனித்துக் கேட்கிறார்கள்! யாராய் இருக்கும்?' அருகிலிருந்த ஒருவரிடம் விசாரித்தார். “அவர்தாம் நபித்தோழர் முஆத் பின் ஜபல்,“ என பதில் வந்தது. (ஆதாரம்:முஸ்னத் அஹ்மத் 5/236) ஏறத்தாழ முப்பது ஸஹாபாக்கள் கருத்துவேறுபாடுள்ள சட்டங்களில் ஹள்ரத் முஆத் (ரளி) அவர்களை பின்பற்றினர்.இந்த நிகழ்வில் கவனிக்க வேண்டிய விஷயம் ஓர் அறிவிப்பில் வரும் வாசகம் إذا اختلفوا فى شئ اسندوه إليه و صدروا عن رأيه ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால்,அவரை அணுகுவார்கள்.மேலும் அவரின் கருத்தை ஏற்பார்கள். சுருக்கம் என்னவெனில் முஆத் (ரளி) ஹலால்,ஹராம் குறித்து மிக அறிந்தவர்.ஸஹாபாக்கள்,அன்னாரை தக்லீத் செய்தார்கள்.இதனால் அண்ணலார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை யமன் தேசத்திற்கு அனுப்பினார்கள்.அவர்களிடத்தில் ஆட்சி,கற்பித்தல்,தீர்ப்பளித்தல் போன்ற அனைத்து பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டது.அனைத்து மார்க்க சட்டங்களிலும் அவரை அணுகவேண்டும் என்பதை யமன் வாசிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.இதன்பேரில் அவர்களும் செயல்பட்டனர்.இதற்கு பெயர்தான் (தக்லீத் ஷஹ்ஷி) தனிநபரை பின்பற்றுதல் என சொல்லப்படும். 
நான்காவது ஆதாரம்
عن عمرو بن ميمون الأودي قال قدم علينا معاذ بن جبل اليمن رسول رسول الله صلى الله عليه وسلم إلينا قال فسمعت تكبيره مع الفجر رجل أجش الصوت قال فألقيت عليه محبتي فما فارقته حتى دفنته بالشام ميتا ثم نظرت إلى أفقه الناس بعده فأتيت ابن مسعود فلزمته حتى مات அம்ர் இப்னு மைமூன் அதவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:முஆத் இப்னு ஜபல் (ரளி) அவர்கள் உங்களிடத்தில் யமன் தேசத்திற்கு பெருமானாரின் தூதுவராக வந்திருந்தார்கள்.நான் பஜ்ரில் அவரின் கனத்த குரலில் தக்பீர் சப்தத்தை கேட்டேன்.என் உள்ளத்தில் (அல்லாஹ்வின் புறத்திலிருந்து)அவரின் பிரியமானது பின்னிப்பிணைந்து விட்டது.அதன்பிறகு அன்னார் ஷாம் தேசத்தில் மரணித்து அடக்கம் செய்யும் வரை அவரை விட்டு பிரியவில்லை.அவருக்கு பிறகு அனைவரையும் விட பெரிய மார்க்க அறிஞர் யார்? என சிந்தித்தேன்.எனவே இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களிடம் வந்தேன்.அன்னார் மரணிக்கும் வரை அவரின் சகவாசத்தில் இருந்தேன். (ஆதாரம்: அபூதாவூத் தலைப்பு:باب إذا اخر الامام الصاوى عن الوقت 1/62) 
இந்த அறிவிப்பில் அம்ரு இப்னு மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியது முஆத் (ரளி) அவர்களின் மரணித்திற்கு பிறகு பெரிய மார்க்க விற்பன்னர் யார்? என எண்ணினேன். இதன் மூலம் அறியமுடிகிறது.முதலில் முஆத் (ரளி) பிறகு இப்னு மஸ்ஊத் (ரளி) சகவாசத்தில் இருந்தவரை அவர்களிடத்தில் மட்டும் சென்று மஸாயில்களை அறிந்து செயல்பட்டார்.எனவே ஒரே சமயத்தில் ஒரு பகீஹ் இடத்தில் (மார்க்க விற்பன்னரிடத்தில்)மட்டும் திரும்புவது தக்லீத் ஷஹ்ஷி (தனிநபரை பின்பற்றுதல்) என சொல்லப்படும். அதிகப்படியான முன்உதாரணங்கள்; இது போன்று அதிகமான ஸஹாபாக்களிடமிருந்தும் எடுத்துச்சொல்லப்பட்டு உள்ளது.ஒருவர் ஒரு ஸஹாபியை தனது முன்மாதிரியாக வைத்து அமல் செய்வார்.மற்றொருவர் வேறொரு ஸஹாபியை முன்மாதிரியாக வைத்து அமல் செய்வார். 

இமாம் ஷுஅபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: الشعبى قال: من سره أن يأخذ بالوثيقة فى القضاء فليأخذ بقضاء عمر தீர்ப்பில் உறுதியானதை விரும்புவர் உமர் (ரளி) அவர்களின் சொல்லை எடுத்துக் கொள்ளட்டும்.(ஆதாரம்:இஃலாமுல் முவக்கியீன் லி இப்னுல் கைய்யிம் 1/15) 
ஹள்ரத் முஜாஹித் (ரஹ்) அவர்களின் சொல் إذا اختلف الناس فى شئ فانظروا ما صنع عمر فخذوا به மக்களுக்கு மத்தியில் எதேனும் மஸ்அலாவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டால் உமர் (ரளி) அவர்களின் செயலைப் பார்த்து அதனையே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.(ஆதாரம்:இஃலாமுல் முவக்கியீன் லி இப்னுல் கைய்யிம் 1/15) 
இமாம் அஃமஷ் (ரஹ்), ஹள்ரத் இப்ராஹிம் நகயி (ரஹ்) அவர்களின் விஷயத்தில் கூறுகிறார்கள்: 
قال الأعمش عن إبراهيم: إنه كان لا يعدل بقول عمر وعبد الله إذا اجتمعا . فإذا اختلفا كان قول عبد الله أعجب إليه உமர் (ரளி) அவர்கள், இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் ஏதேனும் மஸ்அலாவில் ஒன்றுப்பட்டால் ஹள்ரத் இப்ராஹிம் நகயி (ரஹ்) அவர்கள் இருவருக்கும் நிகராக எவரின் சொல்லையும் கருதமாட்டார்.இருவருக்கும் மத்தியில் கருத்துவேறுபாடு ஏற்பட்டால் இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களின் சொல்லை தேர்ந்தெடுப்பதை விரும்புவார்கள்.(ஆதாரம்:இஃலாமுல் முவக்கியீன் 1/13,14) 
ஹள்ரத் அபூதமீமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: قدمنا الشام فإذا الناس مجتمعون يطيفون برجل قال قلت من هذا؟ قالوا هذا أفقه من بقى من أصحاب النبي يَةِ هذا عمرو البكالي. ஷாம் வந்த போது மக்கள் ஒருவரிடத்தில் ஒன்றுசேர்ந்து அவரை சுற்றி அமர்ந்து இருந்ததை பார்த்தோம்.அவர் யார்? எனக்கேட்டேன்.எஞ்சிய ஸஹாபாக்களில் பெரிய பகீஹ்.அவர் (பெயர்) அம்ர் பகாலி (ரளி) என்று சொன்னார்கள்.(ஆதாரம்:இஃலாமுல் முவக்கியீன் 1/14) 
இமாம் முஹம்மத் இப்னு ஜரீர் தப்ரி அவர்கள் கூறுகிறார்கள்: 
وقال محمَّد بن جرير: "لم يكن أحد له أصحاب معروفون حرروا فتياه ومذاهبه في الفقه غير ابن مسعود، وكان يترك مذهبه وقوله لقول عمر، وكان لا يكاد يخالفه في شيء من مذاهبه، ويرجع من قوله إلى قوله". وقال الشَّعبي: "كان عبد الله لا يقنت، وقال: ولو قنت عمر لقنت عبد الله". 
(ஸஹாபாக்களில்) இந்தளவிற்கு பிரபல்யமான மாணவர்கள்,பத்வாக்கள் மத்ஹபின் சட்டங்கள் தொகுக்கப்பட்டு, இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்களுக்கு இருப்பது போன்று எவருக்கும் அமையவில்லை.இத்துணை சிறப்பு இருப்பதுடன் தனது வழிமுறை,சொல்லை உமர் (ரளி) சொல்லிற்கு எதிரில் விட்டுவிட்டார்கள்.உமர் (ரளி) பிக்ஹ் சட்டங்களில் ஏறத்தாழ எதற்கும் அவர் மாறு செய்யவில்லை.இமாம் ஷுஅபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு மஸ்ஊத் (ரளி) அவர்கள் குனூத் ஓதமாட்டார்கள்.ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் குனூத் ஓதினால் ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரளி) கட்டாயம் ஓதுவார்கள்.(ஆதாரம்:இஃலாமுல் முவக்கியீன் 1/6) 
ஆக,இந்த அனைத்தும் தனிநபரை (தக்லீத் ஷஹ்ஷி) பின்பற்றுவதற்கு உதாரணமாகும்.எனினும்,தக்லீத் செய்பவர்களை கவனித்து பல படித்தரங்கள் உள்ளது.அவைகளுக்கு ஏற்ப சில சமயங்களில் ஒருவர் இமாமை பின்பற்றுபவராக இருப்பதுடன் சில மஸாயில்களை அவருடன் கருத்துவேறுபாடு கொண்டு இருப்பார்.எனினும், ஒட்டுமொத்தத்தை கவனித்து அவரின் தக்லீதும் ஷஹ்ஷி (தனிநபரை பின்பற்றுவது) தான்.இதனால்தான் ஏராளமான மஸாயில்களில் ஹனபிகள் இமாமின் கருத்திற்கு மாற்றமாக பத்வா கொடுத்துள்ளனர்.அப்போதும் அபூஹனீபா (ரஹ்) அவர்களை பின்பற்றுபவர்கள் என்பதாகத்தான் சொல்லப்படும்.

No comments:

Post a Comment