Sunday, December 9, 2018

இமாம்களுக்கும் மத்ஹபுகளுக்கும் தொடர்பு உண்டு/அறியாமை வாதத்திற்கு அழகிய பதில்

மத்ஹப் மறுப்பாளர்களின் அறியாமை வாதமும் நமது அழகிய பதிலும்

மத்ஹப் மறுப்பாளர்களால் இமாம்களை தக்லீத் செய்பவர்கள் மீது
திரும்ப திரும்ப சுமத்தப்படும் அவதூறு மத்ஹபுகளுக்கும் இமாம்களுக்கும் தொடர்பில்லை.இதற்கு பதில் அளிப்பதற்கு முன்பாக முதலில் குற்றச்சாட்டை பார்த்துவிடுவோம்.

குற்றச்சாட்டு: ஹனபி மத்ஹபின் முக்கிய பிக்ஹு நூல்களாக இன்று மக்களிடையே உலவி வரும் நூல்களையும், அவை தொகுக்கப்பட்ட காலங்களையும் கீழ்காணும் அட்டவணையிலிருந்து பார்த்து இது இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களால் கூறப்பட்டிருக்க முடியுமா? என்பதை வாசகர்களும், தங்களை ஹனபிகள் எனக்கூறிக் கொள்வோரும் கவனிக்க வேண்டுகிறோம்.



இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் காலம் = ஹிஜ்ரி 80 முதல் 180 வரை

ஹனபி மத்ஹபின் பிரபல்யமான பிக்ஹு நூல்களாக இன்று நடைமுறையிலுள்ளவைகளும் அவை தொகுக்கப்பட்ட காலமும்.
  நூல்கள் ஹிஜ்ரிநூற்றாண்டு இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மரணத்திற்கு சுமார்
  1.குத்ரி 5ம் நூற்றாண்டு 300 வருடங்களுக்குப் பின்
  2.ஹிதாயா 6ம் நூற்றாண்டு 400 வருடங்களுக்குப் பின்
  3.காஜிகான் 6ம் நூற்றாண்டு 400 வருடங்களுக்குப் பின்
  4.கன்னியா 7ம் நூற்றாண்டு 500 வருடங்களுக்குப் பின்
  5.தஹாவி 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  6.ஷரஹ் விகாயா 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  7.நிகாயா 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  8.கன்ஜ் 8ம் நூற்றாண்டு

நமது தக்க மறுப்பு:இமாம்களின் காலமும் மத்ஹபு கிரந்தங்களின் காலமும் மாறுப்பட்டுள்ளது.இமாம்களின் காலத்திற்கு முன்னூறு நானூறு ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டுள்ளது.எனவே மத்ஹபுகளுக்கும் இமாம்களுக்கும் சம்பந்தமில்லை இதுதான் மத்ஹப் மறுப்பாளர்கள் சுமத்தும் வாதம்.

இதே போன்றுதான் குர்ஆனை மறுப்பவர்களும் வேதமானது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுதவில்லை.உஸ்மான் (ரளி) அவர்கள்தான் ஒன்று சேர்த்தார்கள் என்று கூறி குர்ஆனை மறுக்கிறார்கள்.

ஹதீஸ் மறுப்பாளர்களும் ஹதீஸ்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது இல்லை.இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் மரணம் 256 இவர் மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தவர்.பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தை அடையவில்லை.இதனால் புகாரியில் உள்ள ஹதீஸ்கள் நபியின் சொல்லாக இருக்கமுடியாது.அதில் அறிவிப்பாளர் தொடர்கள் உண்டு என்றால் அதனை முஹத்திஸீன்கள் (ஹதீஸ்கலை வல்லுநர்கள்) சுயமாக உருவாக்கியுள்ளனர் என்று கூறி ஹதீஸ்களை மறுக்கிறார்கள்.

இதே போன்று தான் மத்ஹப் மறுப்பாளர்களும் ஹிதாயா நூல் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் காலத்திற்கு 400 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.இந்த குற்றச்சாட்டு அனைத்தும் ஏமாற்றுதலும் மோசடியாகும்.

பீஜே குர்ஆனுக்கு மொழிப்பெயர்ப்பு எழுதியுள்ளார்.இறுதியில் விளக்கங்களும் எழுதியுள்ளார்.இப்பொழுது  குர்ஆனும் அதனின் விளக்கங்களும் 14ஆம் நுற்றாண்டில் எழுதப்பட்டது என்று ஒருவர் வாதிட்டால் ஏற்புடையதா? நியாயமாக இருக்கமுடியுமா?

குர்ஆன் வசனமானது நபி ஸல்லல்லாஹு அவர்களின் காலத்தில் இறங்கியது.அதனின் விளக்கவுரை ஆய்வுகள் 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.இதுதான் சரியான பதிலாகும்.

இதே போன்று தான் ஹிதாயா விளக்கவுரை நூலாகும்.இதில் உள்ள மார்க்க சட்டங்கள் இமாம் முஹம்மது (ரஹ்) அவர்களின் நூல்களில் உள்ளது.மார்க்க சட்டங்களுக்குரிய ஆதாரங்கள் அறிவுப்பூர்வமான வாதங்கள் ஹிதாயா ஆசிரியருக்குரியது.இமாம் முஹம்மத் (ரஹ்) அவர்கள், அபூஹனீபா (ரஹ்) அவர்களை பார்த்துள்ளார்களா? இல்லையா? நிச்சயமாக பார்த்துள்ளார்கள்.இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களிடமிருந்து செவியுற்றதை நூலாக எழுதியுள்ளார்கள்.
ஜாமிஃகபீர் என்பது நூலின்  பெயராகும்.காஜி இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்களிடமிருந்து இமாம் முஹம்மத் (ரஹ்) அவர்கள் செவியுற்றதை நூலாக எழுதியுள்ளார்கள்.ஜாமிஃ ஸஙீர் என்பது நூலின் பெயராகும்.இதனை தவிர மப்ஸுத்,அஜ்ஜியாதாத்,ஸியருல் கபீர் ஸியருஸ் ஸஙீர் என்ற நூல்கள் உண்டு.

மத்ஹப் மறுப்பாளர்கள் இமாம்களுக்கும் மத்ஹபிற்கும் தொடர்பு இல்லை என்று சுமத்தும் அவதூறு பட்டியலில் இமாம் முஹம்மத் ரஹ் அவர்களின் நூல்களை ஏன் மறைத்தார்கள்? இது மோசடியில்லையா? ஏமாற்றுவதில்லையா?


இமாம் முஹம்மத் ரஹ் அவர்களின் நூல்களின் பட்டியலை வெளியிட்டால் சத்தியம் வெளிப்பட்டுவிடும். அசத்தியம் அழிந்துவிடும்.

வாயடைக்கும் பதில்:இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் பிறப்பு 773-இறப்பு 852 அன்னார் அவர்கள் அஸ்மாவுர் ரிஜால் என்ற  (அறிவிப்பாளர்களை ஆய்ந்தறியும்) நூலில் முதல் மூன்று நூற்றாண்டுகள் வாழ்ந்த அறிவிப்பாளர்கள் குறித்து பதிவு செய்துள்ளார்கள்.ஆனால் அவர்கள் அந்த நூற்றாண்டில் பிறக்கவுமில்லை.வாழவுமில்லை.
இமாம்களுக்கும் மத்ஹபுகளுக்கும் சம்பந்தமில்லை எனில் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களுக்கும் அஸ்மாவுர் ரிஜாலுக்கும் சம்பந்தமில்லையா? மத்ஹப் மறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றுப்பட்டு ஹதீஸ்களை தரம்பிரிப்பதில் அன்னாரின் நூல்களை தான் தூக்கிபிடிக்கிறார்கள்.

ஆக,கவர்ச்சியான வாதங்களை நம்பி ஏமாந்துவிடவேண்டாம்! உண்மையில் இமாம்களுக்கும் மத்ஹபுகளுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான் சத்தியமாகும்.


https://drive.google.com/file/d/0B4yO-PzFlQ3TM3NkVWN3V1F5bnM/view

No comments:

Post a Comment