Saturday, December 29, 2018

குர்ஆன்,ஹதீஸ்களின் ஒளியில் ஹனஃபி தொழுகை முறை

ஹனபி மத்ஹபின் தொழுகை முறை குர்ஆன் ஹதீஸின் ஒளியில்

அல்லாஹ்வின் கிருபையால் ஹிதாயா நூலின் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்குரிய சுருக்கமான பதில்களை ஐந்து தொடர்களில் பார்த்தோம்.அதனை வாசித்த வாசகர்களுக்கு ஹிதாயா நூலின் மேன்மையும்,உயர்வும், மதிப்பும் புரிந்திருக்கும் என ஆதரவு வைக்கிறோம.இனி அடுத்து ஹனஃபி தொழுகை முறை குறித்து குர்ஆன் ஹதீஸின் ஒளியில் தொடராக பார்ப்போம்!

ஹனஃபிகள் ஷரீஅத்தின் ஆதாரங்களின் ஒளியில் மாபெரும் இறைவணக்கமான தொழுகையை நிறைவேற்றுகிறார்கள்.எனினும்,
ஹனஃபி மத்ஹபின் தொழுகை முறைக்கு ஆதாரம் இல்லை என்பதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.உண்மையில் ஹனஃபி மத்ஹபின் சட்டங்கள் குர்ஆன் ஹதீஸிற்கு மிக நெருக்கமானது.தொழுகையின் அனைத்து நிலைகளுக்கும் ஆதாரங்கள் உண்டு என்பதை இன்ஷா அல்லாஹ் நிரூபிப்போம்! ஆனால் இந்த ஆய்வில் ஹனஃபி மத்ஹபின் தொழுகையில் உள்ள விமர்சனத்திற்குள் செல்லப்போவதில்லை.ஹனஃபி மத்ஹபின் ஆதாரங்கள் மீதுள்ள விமர்சனத்திற்கு பதில்களை அடுத்த ஆய்வில் விரிவாக பார்ப்போம்!

ஹனபி தொழுகை முறை 

தொழுகைக்கு நிய்யத் அவசியம் 

தொழுகையில் நிய்யத் என்பது கடமையாகும்.நிய்யத்தின்றி தொழுகை நிறைவேறாது.

يَقُولُ : سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ  عَلَى الْمِنْبَرِ  يُخْبِرُ بِذَلِكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ :  " إِنَّمَا  الأَعْمَالُ بِالنِّيَّاتِ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்:அமல்கள் நிய்யத்தின் பேரில் அமைந்துள்ளது.(ஆதாரம்:புகாரி)

கிப்லாவை முன்னோக்குதல் 

فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ

மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும்.(அல்பகரா)

قال عبد الله صلى النبي صلى الله عليه وسلم قال إبراهيم لا أدري زاد أو نقص فلما سلم قيل له يا رسول الله أحدث في الصلاة شيء قال وما ذاك قالوا صليت كذا وكذا فثنى رجليه واستقبل القبلة

 'நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை தொழுதார்கள் - கூட்டினார்களா குறைத்தார்களா என்பது எனக்குத் தெரியாது' என இப்ராஹீம் கூறுகிறார் - தொழுகையை முடித்து ஸலாம் கூறியதும் 'இறைத்தூதர் அவர்களே! தொழுகையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா?' என்று கேட்கப்பட்டது. 'அது என்ன (அப்படியென்றால் என்ன)?' என்று நபி(ஸல்) கேட்டதும், 'நீங்கள் இப்படியல்லவா தொழுதீர்கள்' என அங்கிருந்தவர்கள் கூறினார்கள். (நீட்டியிருந்த) தங்களின் கால்களை நபி(ஸல்) மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கூறினார்கள்.(ஆதாரம்:புகாரி)

தொழுகையில் நிலை நிற்பது 

وقوموا لله قانتين

அல்லாஹ்தஆலா கூறுகிறான்:அல்லாஹ்விற்கு பணிந்தவர்களாக நில்லுங்கள்! (சூரா பகரா 238)

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : كَانَتْ بِي بَوَاسِيرُ فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الصَّلاةِ ، فَقَالَ : ( صَلِّ قَائِمًا ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا

இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். 

எனக்கு மூலம் இருந்தது. எவ்வாறு தொழுவது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ நின்று தொழு இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு' என்று விடையளித்தார்கள்.(புகாரி,திர்மிதி,நஸயீ,இப்னு மாஜா அபூதாவூத்)

தக்பீர் தஹ்ரீமா கடமை

وَرَبَّكَ فَكَبِّرْ

மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.(அல்முத்தஸ்ஸிர்)

وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰى‌ ؕ‏ 

மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.(அல்அஃலா)

عن علي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (مفتاح الصلاة الطهور، وتحريمها التكبير

ஹஜ்ரத் அலி ரளி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை அறிவிக்கிறார்கள்:தொழுகையின் ஆரம்பம் தக்பீர் (ஆதாரம்:அபூதாவூத்,திர்மிதி, தாரமி)

عَائِشَةَ رضي الله عنها قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَفْتِحُ الصَّلاةَ بِالتَّكْبِيرِ

(நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்குவார்கள்;(ஆதாரம்:முஸ்லிம்)

سمعت أبا حميد الساعدي يقول كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة استقبل القبلة ورفع يديه وقال الله أكبر

ஹஜ்ரத் அபூஹுமைத் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது கிப்லாவை முன்னோக்குவார்கள்.அவரது இருகைகளை உயர்த்தி அல்லாஹு அக்பர் கூறுவார்கள்.(இப்னுமாஜா,ஆஸாருஸ்ஸுனன்)

தக்பீரின் போது ஆண்கள் காதுவரை கைகளை உயர்த்துதல்

عَنْ  مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ  ، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، كَانَ إِذَا  كَبَّرَ ، رَفَعَ يَدَيْهِ ، حَتَّى يُحَاذِيَ بِهِمَا أُذُنَيْهِ

மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில் ஆரம்பத்) தக்பீர் சொல்லும்போதும், ருகூஉ செய்யும்போதும் தம்மிரு கைகளையும் தம் காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள்.(ஆதாரம்:முஸ்லிம்)

தக்பீரின் போது பெண்கள் மார்பு வரை கையை உயர்த்துதல்



وعن وائل بن حجر قال : قال لي رسول الله - صلى الله عليه وسلم - : " يا وائل بن حجر إذا صليت فاجعل يديك حذاء أذنيك ، والمرأة تجعل يديها حذاء ثدييها " .

ஹள்ரத் வாயிள் இப்னு ஹுஜ்ர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு கூறினார்கள் 'நீர் தொழுகும் போது உமது கைகளை காதுக்கு நேராக உயர்த்தி கொள்' பெண் அவளது கைகளை மார்பிற்கு நேராக ஆக்கி கொள்ளட்டும் (கன்ஜுல் உம்மால்)

ஹஜ்ரத் உம்முதர்தா (ரளி) ஹஜ்ரத் அதா (ரஹ்) ஹஜ்ரத் ஹம்மாத் (ரஹ்) போன்றவர்களிடமிருந்து இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது.பெண் அவளது கைகளை நெஞ்சுவரை உயர்த்திக் கொள்வாள் (ஆதாரம்:முஸன்னஃப் இப்னு அபீஷைபா) 

நிலை நிற்கும் போது வலது கையை இடது கையின் மீது வைத்தல் 

عن وائلِ بنِ حُجرٍ: ((أنَّه رأى النبيَّ صلَّى اللهُ عليه وسلَّم رفَعَ يَدَيه حين دخَلَ في الصَّلاةِ كبَّرَ- وصَفَّ همَّامٌ حِيالَ أذُنَيه- ثم التحَفَ بِثَوبِه، ثم وضعَ يَدَه اليُمنى على اليُسرى

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பித்தபோது தம்மிரு கைகளையும் உயர்த்தித் தக்பீர் கூறியதை நான் பார்த்தேன்.

-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் (ரஹ்) அவர்கள் இரு காதுகளுக்கு நேராக என்று விவரித்தார்கள்.-

பின்னர் தமது ஆடையால் (இரு கைகளையும்) மூடி இடக் கையின் மீது வலக் கையை வைத்தார்கள்.(ஆதாரம்:முஸ்லிம்)

عن وائل بن حجر رضي الله عنه قال: رأيت النبي ﷺ إذا كان قائما في الصلاة يضع يده اليمنى على كفه اليسرى

ஹஜ்ரத் வாயில் இப்னு ஹுஜ்ர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் தொழுகையில் நிற்கும் போது வலது கையை இடதுகையின் மீது வைத்து பிடித்துக்கொள்வார்கள் இதனை நான் பார்த்தேன்.

عن قبيصة بن هلب عن أبيه قال كان النبي صلى الله عليه وسلم يؤمنا فيأخذ شماله بيمينه

ஹஜ்ரத் ஹுல்ப் ரளி அறிவிக்கிறார்கள்   நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் வலது கையைக் கொண்டு இடது கையை பிடித்தவாறு எங்களுக்கு இமாமத் செய்தார்கள் (ஆதாரம்:திர்மிதி,இப்னு மாஜா) 

سهل بن سعد قال: كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة قال أبو حازم لا أعلمه إلا ينمي ذلك إلى النبي الله ﷺ قال إسماعيل ينمي ذلك ولم يقل ينمي

ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார்கள்:


தொழும்போது ஒருவர் தம் வலக் கையை இடது குடங்கை மீது வைக்க வேண்டுமெனக் கட்டளையிடப் பட்டிருந்தார்கள். 

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ ஹாஸிம் 'இவ்வாறு ஏவியது நபி(ஸல்) அவர்கள் என்று கருதுகிறேன்' என்றார்.(ஆதாரம்:புகாரி) 

( ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ )

ஹஜ்ரத் வாயில் இப்னு ஹுஜ்ர் ரளி அவர்கள் கூறுகிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது வலதுகையை இடதுகை,மணிக்கட்டு, முன்னைங்கையின் மீது வைத்தார்கள் இதனை நான் பார்த்தேன்.(ஆதாரம்:அபூதாவூத்,நஸாயீ,முஸ்னத் அஹ்மத்)

       இன்ஷா அல்லாஹ் தொடரும்

2 comments:

  1. குரான் மற்றும் ஹதீஸின் ஆதாரம் தரும்போது அதனுடைய எண்களையும் குறிப்பிடுவது மிக நல்லது. அதுவே நல்ல முறை

    ReplyDelete
  2. இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கிறேன்

    ReplyDelete